குறும் புதினம்

குறும் புதினம் அல்லது குறுநாவல் (Novella) என்பது ஒருவகை உரைநடை இலக்கியம். இது புதினம் என்பதின் குறுகிய வடிவமாகும் . ஒரு குறும் புதினம்[1] சிறுகதைக்கும் புதினங்களுக்கும் இடைப்பட்ட ஒரு நெடுங்கதை வடிவமாகும். 9ம் நூற்றாண்டு அரபு மொழி இலக்கியப் படைப்பான ஆயிரத்தொரு இரவுகள் கதைகள் குறும் புதினத்தின் முன்னோடியென கருதப்படுகின்றன. குறும் புதினம் என்ற இலக்கிய வடிவத்தை பரவச் செய்தவர் 14ம் நூற்றாண்டு இத்தாலிய எழுத்தாளர் ஜியொவானி பொக்காசியோ என்பவராவார்.

குறிப்புகள் தொகு

  1. http://www.merriam-webster.com/dictionary/novella Novella - Definition at Merriam-Webster Dictionary online (Accessed 7 March 2010)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறும்_புதினம்&oldid=1655377" இலிருந்து மீள்விக்கப்பட்டது