கோகிலம் சுப்பையா

கோகிலம் சுப்பையா இலங்கையின் மலையக மக்கள் படும் துன்பங்களை எழுத்தில் வடிக்க முற்பட்ட பல எழுத்தாளர்களில் ஒருவர்.

கோகிலம் சுப்பையா
பிறப்புகோகிலம்
தமிழ்நாடு
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
உறவினர்கள்கணவர் எஸ். எம். சுப்பையா

இவரைப்பற்றி தொகு

இவர் இந்தியாவில் பிறந்து வளர்ந்து, இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தில் (1947) பதுளை தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற பிரதிநிதியாக இருந்த எஸ். எம். சுப்பையா என்பவரை திருமணம் செய்ததின் மூலமே மலையக மக்களின் வாழ்க்கையை அறிந்து கொண்டவர். 1956ல் செக் நாட்டில் நடைபெற்ற உலகப் பெண் தொழிலாளர்களின் மகாநாட்டில், மலையகப்பெண்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். அங்கே தமிழ் அறிஞரான பேராசிரியர் Kamil Zvelebil அவர்களைச் ச்ந்திக்க நேர்ந்ததினால் அவரின் ஆலோசனைப்படி தனது தூரத்து பச்சை நாவலை எழுதத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார். 1965 இல் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளியிடப்பட்ட இந்த நாவல், Mirage என்ற பெயரில் ஆங்கிலத்தில் இவராலேயே மொழிபெயர்க்கப்பட்டது. பல கவிதைகளையும் இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

வெளி வந்த நூல்கள் தொகு

  • தூரத்துப் பச்சை - நாவல்
  • Mirage - தூரத்துப்பச்சை நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகிலம்_சுப்பையா&oldid=3480535" இருந்து மீள்விக்கப்பட்டது