கோழிக்கோடு சண்டை

கோழிக்கோடு சண்டை (Battle of Calicut) என்பது மூன்றாவது ஆங்கிலோ-மைசூர் போர் இந்தியாவின் மலபார் கடற்கரையில் நிகழ்ந்த போது நடைபெற்ற தொடர்ச்சியான சண்டைகளைக் குறிக்கிறது. இச்சண்டை 1790 ஆம் ஆண்டில் திசம்பர் 7 முதல் திசம்பர் 12 வரை நடைபெற்றது. இச்சண்டை தெர்வநகரி சண்டை அல்லது திருரங்காடி சண்டை எனவும் அழைக்கப்படுகிறது.

கோழிக்கோடு சண்டை
Battle of Calicut
மூன்றாவது ஆங்கிலோ-மைசூர் போர் பகுதி
நாள் 7–12 திசம்பர் 1790
இடம் மலபார் கடற்கரை
பிரித்தானிய வெற்றி
பிரிவினர்
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
திருவிதாங்கூர்
மைசூர் அரசு
தளபதிகள், தலைவர்கள்
யேம்சு ஆர்ட்லி மார்தாப்கான் சாகிப்
உசேன் அலிகான் சாகிப்

பிரித்தானிய பம்பாய் இராணுவப் படை தெல்லிச்சேரியில் வந்திறங்கி நாயர் உதவியுடன் திப்புவின் படைத்தலைவர் உசேன் அலிகானை கோழிக்கோட்டில் தோற்கடித்தது. பின்னர் அபர்கிராம்பி மலபார் முழுவதையும் கைப்பற்றினார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. பக். 176. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131300343. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோழிக்கோடு_சண்டை&oldid=2455587" இலிருந்து மீள்விக்கப்பட்டது