சங்கரபதிக்கோட்டை

சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டைகளுள் ஒன்று

சங்கரபதிக்கோட்டை (ஆங்கிலம்: Sangarapathikottai) 18 ஆம் நூற்றாண்டில் மருது பாண்டியர் போர்ப் பயிற்சி பாசறை மற்றும் புகலிடமாகவும்.[1] இது தேவகோட்டையின் அருகில் உள்ள அமராவதிபுதூர் கிராமத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாடு வனத்துறைக்கு சொந்தமான இக்கோட்டையைத் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் தலமாக அறிவித்துள்ளது.[2] ஆனால் தற்போது இக்கோட்டை மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

சங்கரபதிக்கோட்டையின் சிதிலமடைந்த காட்சி.

வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரன் ஊமைத்துரையும் இந்தக் கோட்டையை மறைந்து கொள்ளும் இடமாக பயன்படுத்தியுள்ளார். இந்தக் கோட்டையின் கட்டுமானம் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. இதில் 50 கற்தூண்கள் இதன் வடிவமைப்பிற்கு மிகவும் பொருத்தமாக காட்சியளிக்கிறது.[3]

மான்கள் தொகு

இக்கோட்டையைச் சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் புள்ளிமான்கள் நிறையக் காணப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கரபதிக்கோட்டை&oldid=2971347" இலிருந்து மீள்விக்கப்பட்டது