தேவகோட்டை

தமிழ்நாடு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்


தேவகோட்டை (ஆங்கிலம்:Devakottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.செட்டிநாடு என்று அழைக்கப்படும் நாட்டுக்கோட்டை நகரத்தார் வசிக்கும் 76 ஊர்களில் தேவகோட்டையும் ஒன்று.

தேவகோட்டை
—  முதல் நிலை நகராட்சி  —
தேவகோட்டை
இருப்பிடம்: தேவகோட்டை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°57′19″N 78°48′58″E / 9.955400°N 78.816200°E / 9.955400; 78.816200
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 51,865 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

செட்டிநாட்டு வீடுகள் தேவகோட்டையின் சிறப்பு.

அமைவிடம் தொகு

இவ்வூரின் அமைவிடம் 9°57′N 78°49′E / 9.95°N 78.82°E / 9.95; 78.82 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 52 மீட்டர் (170 அடி) உயரத்தில் இருக்கின்றது. தொகுதி மறுசீர்திருத்தத்தின் மூலம் தேவகோட்டை தற்போது காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் கீழ் உள்ளது. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் கீழ் வருகிறது.தேவகோட்டையில் மொத்தம் 16 ஊரணிகள் உள்ளன.[சான்று தேவை]

போக்குவரத்து தொகு

திருச்சிராப்பள்ளிஇராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் (NH-210) தேவகோட்டை அமைந்துள்ளதால், திருச்சியிலிருந்து இராமேசுவரம் செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கே வந்து செல்கின்றன. தேவகோட்டைக்கு அருகில் உள்ள விமான நிலையம் 92 கி.மீ. தொலைவில் உள்ள மதுரை விமான நிலையமாகும். அருகில் உள்ள ரயில் நிலையம் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது - தேவகோட்டை ரஸ்தா ரயில்வே நிலையம் . தேவகோட்டையில் இருந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் அடிக்கடி உள்ளன.

மக்கள் வகைப்பாடு தொகு

இந்திய 2001 கணக்கெடுப்பின்படி 40,846 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தேவகோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேவகோட்டை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இது நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அதிக அளவில் வசிக்கும் ஊர்களில் ஒன்றாகும்.

பெயர்க் காரணம் தொகு

சோழ நாட்டில் காவிரிபூபட்டினத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வாழ்ந்த ஊர்களில் ஒன்று தேவி கோட்டை அதன் நினைவாக பாண்டிய நாட்டில் இந்த ஊருக்கு தேவி கோட்டை என்று பெயர் வைத்தனர் என்று சொல்லப்படுகிறது. பின்னாளில் தேவி கோட்டை என்பது "தேவகோட்டை" என மருவியது.[6]

பள்ளிகள் தொகு

தேவகோட்டையில் அமைந்துள்ள பள்ளிகள்

  • சைவப்பிரகாச வித்தியாசாலை.
  • முத்தாத்தாள் பள்ளிக்கூடம்.
  • என்.எஸ்.எம்.வி.பி.எஸ் மேல்நிலைப் பள்ளி.
  • தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி .
  • வைரம் குரூப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி.
  • ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை மெட்ரிகுலேஷன் பள்ளி.
  • ஜமீந்தார் உயர்நிலைப் பள்ளி
  • ஸ்ரீ இராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளி
  • லோட்டஸ் ஏ.என். வெங்கடாச்சலம் செட்டியார் ICSC பள்ளி
  • புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி
  • ஸ்ரீநிவாசா நடுநிலைப் பள்ளி
  • சேர்மன் மாணிக்கம் செட்டியார் நடுநிலைப் பள்ளி
  • பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி
  • புனித ஜான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
  • இன்பாண்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி
  • முருகானந்தா நடுநிலைப் பள்ளி
  • புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ராம்நகர்

கல்லூரிகள் தொகு

  • ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • ஆனந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • சாந்தி நீகேசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி- அமராவதி புதூர்
  • ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, அமராவதி புதூர்
  • புனித பவுல் கல்வியல் கல்லூரி
  • புனித சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி

புகழ் பெற்ற நபர்கள் தொகு

  • மெ.கற்பக விநாயகம், உயர் நீநீதிமன்றம முன்னாள் நீதிபதி.
  • ஹரி சேவுகன் செட்டி, அமெரிக்காவை சேர்ந்த ஜனநாயக கட்சியின் தேசிய ஊடக செயலாளர் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முதன்மை செய்தி தொடர்பாளர்.
  • சொ.சொ.மீ. சுந்தரம், ஆன்மீக சொற்பொழிவாளர்.

கோவில்கள் தொகு

தேவக்கோட்டை நகரில் உள்ள கோவில்கள்.

  • நகரச் சிவன் கோவில்
  • திண்ணஞ் செட்டி ஊருணி பிள்ளையார் கோவில்
  • சிலம்பனி பிள்ளையார் கோவில்
  • வெள்ளையன் ஊருணி பிள்ளையார் கோவில்
  • கருதா ஊருணி கைலாச விநாயகர் கோவில்
  • செல்லப்பச் செட்டியார் கோவில்
  • தென் கலை பெருமாள் கோவில்
  • வட கலை பெருமாள் கோவில்
  • ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்
  • நகரக் கோட்டையம்மன் கோவில்

தேவகோட்டை அருகே உள்ள கோயில்கள்.

தமிழிசை மாநாடு தொகு

தமிழிசையை வளர்க்கும் நோக்கத்துடன் டி.ஆர்.அருணாச்சலம் மற்றும் சின்ன அண்ணாமலை முயற்சியில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நிதியுதவியுடன் இரண்டாவது தமிழிசை மாநாடு தேவகோட்டையில் 1941ஆம் ஆண்டு நடைபெற்றது.[7]

 
1941இல் தேவகோட்டையில் நடந்த தமிழிசை மாநாடு புகைப்படம்.

புகைப்படங்கள் தொகு

 
தேவகோட்டை நகரச் சிவன் கோயில்
 
தேவகோட்டை மேல வளவு என்கின்ற ஜார்ஜ் சக்கரவர்த்தி கேட் , தேவகோட்டை வட்டாணம் ரோட்டில் அமைந்துள்ளது.

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Devakottai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)
  6. பழ.அண்ணாமலை (1986). செட்டிநாட்டு ஊரும் பேரும். M.M.MUTHIAH RESEARCH FOUNDATION,MADRAS. பக். 33. 
  7. சின்ன அண்ணாமலை (1978). சொன்னால் நம்பமாட்டீர்கள். அல்லயன்ஸ் பதிப்பகம். பக். 70-81. 

தேவக்கோட்டை நகர இணையதளம்

புற இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவகோட்டை&oldid=3855253" இலிருந்து மீள்விக்கப்பட்டது