சரசுவதி

(சரஸ்வதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சரஸ்வதி அல்லது கலைமகள் அல்லது இயன்மகள் அல்லது சொன்மகள் இந்து சமயத்தினர் வணங்கும் முக்கியமான பெண் கடவுளரில் ஒருவர். படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாகக் கொள்ளப்படுகிறார். சரஸ்வதி என்னும் சமசுகிருதச் சொல் நகர்தல், ஆற்றொழுக்காகச் செல்லல் ஆகிய பொருள்களைக் கொண்ட ஸ்ர் என்னும் வேரின் அடியாகப் பிறந்தது. இருக்கு வேதத்தில் சரஸ்வதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. நீர், இந்துக்களின் பார்வையில் வளமை, படைப்பு, தூய்மைப்படுத்தல் முதலியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதனால்தான் சரஸ்வதியும் இத்தகைய கருத்துருக்களோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளாள்.

சரசுவதி
சரசுவதி
வேறு பெயர்கள்கலைமகள், வாணிதேவி (கலைவாணி), கலாவதி, சாவித்திரி, சாரதா, பாரதி, மாதவி, அபிநயா, அபிராமி (பிராமி/பிரம்மி), அமுதினி, அமுதசுரபி, அமுதவாகினி, (அமுதபாரதி/அமுதா), சரசபாரதி, இந்துபாரதி, சுகபாரதி, மஞ்சு பாரதி (மகா சரஸ்வதி) , பாமகள், நாமகள், சித்ரசேனா, வசுந்தரி, வசந்தினி, வசந்தா, இசைமடந்தை (வித்யாதேவி/கோகிலவாணி), காயத்ரிதேவி, சங்கீதா, சந்தியா, சத்யோஜினி (சத்யவாணி/சத்யகலா), சகலகலாவல்லி (சசிகலா)[1]
தேவநாகரிசரஸ்வதி
சமசுகிருதம்சரசுவதி
வகைதேவி
இடம்பிரம்மபுத்ரா
மந்திரம்ஓம் ஐம் சரசுவதியாயா சுவாக
துணைபிரம்மா

'பேச்சுக் கலையின் தேவதை' எனப் பொருள்படும் ‘வாக் தேவி' என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள்.[2]

இந்துக்கள், சரஸ்வதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகிறார்கள். அறிவு, ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரஸ்வதியை வெண்மை நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளாகவும், சரஸ்வதியைச் சமய நூல்கள் வர்ணிக்கின்றன.

சரஸ்வதி எனும் பெயரில் இராகம் ஒன்றும் உள்ளது.

சமயங் கடந்த தெய்வம் தொகு

இந்து மதத்தில் தொகு

இந்து மதமாக மாற்றம் பெற்ற சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், சௌரம் முதலியவற்றில் கலைமகள் வழிபாடும் பெருமையும் கூறப்படுகிறது.

'அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள்' என்கிறது கந்தபுராணம்.

சமண மதத்தில் தொகு

சுருதி தேவி என்றும், வாக்தேவி என்றும் சமணர்கள் சரஸ்வதியை வணங்குகிறார்கள். ஜின ஐஸ்வர்யா என்றும், ஜினவாணி என்றும் அழைப்பதுண்டு. ஆபுத்திரன் என்பவன் கலைமகளிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற செய்தி பௌத்த புராணமான மணிமேகலையில் உள்ளது.

பௌத்த மதத்தில் தொகு

மகா சரஸ்வதி, ஆர்ய சரஸ்வதி, வஜ்ரவீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ர சரஸ்வதி என ஐந்து பெயர்களில் சரஸ்வதி பௌத்தர்களால் வணங்கப்படுகிறார்.

எனவே டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் சரஸ்வதியை கலைமகள் சமயங் கடந்த தெய்வம் என குறிப்பிடுகிறார்.

தோற்றமும் குறியீடும் தொகு

  • சரஸ்வதி தேவியின் பிறப்பானது பாகவத புராணத்தில் கிருஷ்ணர் தனது மனைவிகளில் ஒருவரான ராதையிடம் மைய்யல் கொண்ட காரணத்தால் அவள் கண்ணங்கள் வீக்கங்களாக சிவந்தது அதே நேரத்தில் ராதை தன்னைவிட்டு எங்கும் போக கூடாது என்று கிருஷ்ணரிடம் கேட்டு கொண்டால்
  • ஆனால் அந்த சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பாரத போரில் அர்ஜீனனின் வழிகாட்டியாக செயல்பட்டு வந்தார்.
  • பின்பு ராதையின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அவளது அறையில் இருந்து ஒரு படத்தில் பாரத போரில் கிருஷ்ணர் இருக்கும் படத்தின் மூலம் நான் தற்போது போர்களத்தில் இருக்கும் நிலையை காட்சியாக தெறியும் என்று கூறி ராதையிடம் கொடுத்து சென்றான்.
  • அந்த படத்தின் வழியாக ராதை கிருஷ்ணரின் உபதேசத்தால் அர்ஜீனன் தனது கை சண்டையால் போர்களத்தில் உள்ள வீரர்களை அடித்து தும்சம் செய்து கொண்டு இருப்பதை ராதை ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்.
  • மேலும் அர்ஜீனன் போர்களத்தில் மிகவும் ஆக்ரோசமாக கை சண்டை போட்டு கொண்டு இருக்கும் போது அவன் பலமான கை ஒரு பெரும் மலையவே பெயர்த்ததை கண்டு மிரச்சியுற்ற ராதை அவள் பார்த்து கொண்டிருந்த படத்தின் வழியாக அர்ஜீனனின் இரும்பு கரங்கள் ராதையின் முகத்தில் உள்ள கண்ணனிடம் மைய்யல் கொண்டு சிவந்த கண்ணத்தில் ஓங்கி குத்திவிட்டு சென்றவுடன் ஆஹா என்ற சத்தத்துடன் அலறியபடியே ராதை கீழே விழுந்தபோது அவளது சிவந்து வீங்கிய கண்ணத்தில் இருந்து சரசத்தால் சரஸ்வதி தேவி தோன்றினால் என்றும் கூறப்படுகிறது.
  • அழகிய தோற்றம் கொண்டவளாகவும், நான்கு கைகளைக் கொண்டவளாகவும், வெள்ளை உடை உடுத்து, வெண் தாமரையில் அமர்ந்திருப்பவளாகவும், நான்கு கைகளில் ஒன்றில் செபமாலையும், மற்றொன்றில் ஏட்டுச் சுவடியும் இருக்க, முன் கைகள் இரண்டிலும் வீணையை வைத்து மீட்டுபவளாகச் சரஸ்வதி உருவகப்படுத்தப்படுகிறாள். செபமாலை ஆன்மீகத்தையும், ஏட்டுச் சுவடி அறிவையும், வீணை கலைகளையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது.
  • கலைமகளின் கையிலிருக்கும் ஜபமாலைக்கு அட்சமாலை என்று பெயர். இம்மாலை சமஸ்கிருதத்தின் எழுத்துகளின் எண்ணிக்கைக்கு சமமாக ஐம்பத்தொன்று மணிகளை உடையதாக உள்ளது. மொழி வடிவில் இம்மாலை இருப்பதாக கூறுகிறார்கள்.
  • கலைமகளின் வாகனமாக அன்னப் பறவை உள்ளது.

சரஸ்வதிக்கென நூல்கள் தொகு

சரஸ்வதியைப் பற்றி தமிழில் சரஸ்வதி அந்தாதி எனும் நூலை கம்பரும், சகலகலாவல்லி மாலை என்ற நூலை குமரகுருபரரும் இயற்றியுள்ளார்கள்.

வழிபாடு தொகு

  • தமிழ்நாடு கூத்தனூரில் தனி ஆலயம் உள்ளது.
  • கர்நாடகாவில் சிரிங்கேரி, கடக் எனும் இடங்களில் தனி ஆலயம் உள்ளது.
  • ஆந்திராவில் பசர எனும் இடத்தில் தனி ஆலயம் உள்ளது.
  • காஷ்மீரின் தக்த்-இ-சுலைமான் மலையில் 'சர்வஜ்ன பீத' என்றழைக்கப்படும் பழங்காலத்திய ஆலயம் உள்ளது.
  • திபெத், நேபாளம், இந்தோனேசியா மற்றும் சப்பான் நாடுகளிலும் இந்த தெய்வத்தின் மீதான வழிபாடு நடைமுறையில் உள்ளது. இங்கு 'பென்சய்-டென்' எனும் பெயரில் வழங்கப்படுகிறாள்.

கருவி தொகு

  • வெள்ளைத் தாமரைப் பூவிருப்பாள்! - பருத்தியூர் கே. சந்தானராமன்

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரசுவதி&oldid=3739111" இலிருந்து மீள்விக்கப்பட்டது