சர்துல் சிங் கவிசர்

இந்திய அரசியல்வாதி

சர்துல் சிங் கவிசர் (Sardul Singh Kavishar) (1886-1963) அமிர்தசரசில் பிறந்த இவர் இந்திய செய்தித்தாள் ஆசிரியராக இருந்தார். மேலும் இந்திய சுதந்திர இயக்கத்தில் ஒரு முக்கிய நபராகவும் இருந்தார்.

கல்வி தொகு

இலாகூரில் படித்த கவிசர் தனது பொது வாழ்க்கையை 1913ஆம் ஆண்டில் சீக்கிய ரிவியூ என்ற ஆங்கில மொழி செய்தித்தாளுடன் தொடங்கினார். சீக்கிய ரிவியூவில் ஒரு ஆரம்ப கட்டுரை புதுடெல்லியின் கட்டுமானத்தின் போது வெளி நகர சுவர் இடிக்கப்படுவதை விமர்சித்தது. ஏனெனில் இந்த சுவர் வரலாற்று சீக்கிய குருத்வாராவின் ஒரு பகுதியாக இருந்தது. [1] இது முதல் உலகப் போர் வெடிக்கும் வரை பரவலான சீக்கிய போராட்டத்திற்கு வழிவகுத்தது. அந்த சமயத்தில் அந்த குறிப்பிட்ட பிரச்சினை குறைவான முன்னுரிமையாகக் கருதப்பட்டது. போருக்குப் பிறகு கவிஷர் நடவடிக்கைக்கான தனது அழைப்புகளை புதுப்பித்தார், இதன் விளைவாக அவர் டெல்லியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் லாகூருக்குச் சென்று நியூ ஹெரால்ட் என்ற மற்றொரு செய்தித்தாளைத் தொடங்கினார். 1919 ஆம் ஆண்டில், ரௌலட் சட்டத்திற்கு எதிராக எழுதியதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மீண்டும் அழைப்பு தொகு

1921 ஆம் ஆண்டில், 100 சீக்கிய தன்னார்வலர்களுக்கு குருத்வாராவின் இடிக்கப்பட்ட சுவரை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு பொது அழைப்பை வெளியிட்டார். 700 தன்னார்வலர்கள் (கவிசர் உட்பட) கிளபினர். இருப்பினும், அவர்கள் இலாகூரிலிருந்து தில்லிக்கு புறப்படுவதற்கு முன்பு, தில்லி நகர அரசாங்கம் சுவரை மீண்டும் கட்டியதாக தகவல் வந்தது. அடுத்த மாதம், சீக்கிய சீர்திருத்தவாதிகள் படுகொலை செய்யப்பட்டதாக எழுதியதற்காக இவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

காங்கிரசு தொகு

1933ஆம் ஆண்டில், காங்கிரசின் அப்போதைய தலைவர் குடியியற் சட்டமறுப்பினால் கைது செய்யப்பட்டதனால் இவர் காங்கிரசின் தலைவரானார். 1935ஆம் ஆண்டில், இவர் இந்திய அரசு 1935 சட்டத்தின் மூலம் காங்கிரசு பதவிக்கு வருவதை பகிரங்கமாக எதிர்த்தார். மேலும் 1937ஆம் ஆண்டில் அவர்கள் பெரும்பான்மையைப் பெற்ற மாகாணங்களில் பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர் கட்சியில் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

சுபாஷ் சந்திரபோஸ் தொகு

1939இல், இவர் சுபாஷ் சந்திர போஸின் அனைத்திந்திய பார்வார்டு பிளாக் கட்சியில் சேர்ந்தார்; 1941இல் போஸ் இந்தியாவை விட்டு வெளியேறியபோது, கவிசர் அதன் தலைவரானார். இதனால், இவர் கைது செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிளவு தொகு

1948 இல் அகில இந்திய பார்வார்டு பிளாக் பிளவுபட்டு அது மறுசீரமைக்கப்பட்டது. ஆனாலும், சர்துல் சிங் கவிசர் ஆர்.எஸ்.ருய்கர் தலைமையிலான மார்க்சிச எதிர்ப்பு குழுவுடன் இணைந்தார். அதன் மாநாட்டில், கவிசர் பார்வர்டு பிளாக் (ருய்கர்) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு, ருய்கரின் கட்சியின் பலம் குறைந்து வந்ததால், கவிசர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.

படைப்புகள் தொகு

சர்துல் சிங் தனது வாழ்க்கையின் பெரும்பகுதி அரசியலில் தீவிரமாக இருந்ததைத் தவிர, ஒரு எழுத்தாளராகவும் இருந்தார்.. ஆங்கிலம் மற்றும் பஞ்சாபியில் பத்திரிகைகளைத் திருத்திய இவர் ஏராளமான துண்டுப்பிரசுரங்களையும் புத்தகங்களையும் வெளியிட்டார். [2] பஞ்சாபியில் இவரது சீக்கிய தர்ம தரிசனம் 1969 ஆம் ஆண்டில் பாட்டியாலாவின் பஞ்சாபி பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்துல்_சிங்_கவிசர்&oldid=2987340" இலிருந்து மீள்விக்கப்பட்டது