கணபதி காங்கேசர் பொன்னம்பலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎செல்வாக்குச் சரிவு: தானியங்கி:clean up
No edit summary
வரிசை 1:
[[Image:Ggponnambalam.jpg|thumb|250px| ]]
'''ஜி. ஜி. பொன்னம்பலம்''' ( எனப்படும் '''கணபதி காங்கேசர் பொன்னம்பலம், '''(''G. G. Ponnambalam'', [[நவம்பர் 8]], [[1901]] - [[பெப்ரவரி 9]], [[1977]]) [[இலங்கைத் தமிழர்]]களின் நலன்கருதித் துவக்கப்பட்ட [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] கட்சியின் நிறுவனர் ஆவார். [[இலங்கை]]யின் அரசியலில் [[1940கள்|1940களி]]லும் [[1950கள்|1950களி]]லும் மிகவும் அறியப்பட்டிருந்த இவர் ஒரு திறமையான குற்றவியல் [[வழக்கறிஞர்|வழக்கறிஞவழக்குரைஞர்]]ரும் ஆவார். '''ஜீ.ஜீ.''' என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டவர்.
 
==வரலாறு==
பொன்னம்பலம், 1901 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் கணபதி காங்கேசர், [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணத்தில்]] [[வடமராட்சி]]ப் பகுதியிலுள்ள [[அல்வாய்]] என்னும் ஊரைச்ஊரில் சேர்ந்தவர்,1901 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் கணபதி காங்கேசர். தபால் அதிபராகப் பணியாற்றினார். தாயார் [[மானிப்பாய்]]க்கு அண்மையிலுள்ள [[நவாலி]]யைச் சேர்ந்தவர். பொன்னம்பலம், யாழ்ப்பாணம் [[சென் பற்றிக்ஸ் கல்லூரி]]யிலும், [[கொழும்பு]] [[சென் ஜோசப் கல்லூரி]]யிலும் கல்வி பயின்றார். பின்னர் உயர் கல்விக்காகக் இங்கிலாந்தின் [[கேம்பிரிட்ஜ்]] சென்று [[இயற்கை அறிவியல்]] துறையிலும் சட்டத்துறையிலும் பட்டம் பெற்றார். இலங்கை திரும்பிய அவர் கொழும்பில் வழக்கறிஞராகத்வழக்குரைஞராகத் தொழில் புரிந்தார். நல்ல வாதத் திறமை கொண்ட பொன்னம்பலம் சிறந்த குற்றவியல் வழக்கறிஞராகப்வழக்குரைஞராகப் புகழ் பெற்றார். [[1948]] ஆம் ஆண்டில் [[அரச வழக்கறிஞர்]] (King’s Counsel) என்னும் தகுதியைப் பெற்றுக்கொண்டார்பெற்றார்.
 
இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். இவரது மகன், [[குமார் பொன்னம்பலம்|குமார்]] என்று அழைக்கப்பட்ட காசிநாதர் காங்கேசர் பொன்னம்பலம், இலங்கைத் தமிழர் அரசியலில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். இவர் இனவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
==அரசியல் வாழ்க்கை==
[[1931]] ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது அரசாங்க சபைக்கான தேர்தலில் [[மன்னார்]]-[[முல்லைத்தீவு]]த் தொகுதியில் பொன்னம்பலம் போட்டியிட்டாராயினும் வெற்றிபெற முடியவில்லை. ஆயினும் இது இவரின் அரசியல் வாழ்வின் தொடக்கமாக அமைந்தது. [[1934]] ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் [[பருத்தித்துறை]]த் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம், வெற்றி பெற்று அரசாங்கஅரசாங்கச் சபை உறுப்பினர் ஆனார். [[1936]] ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்ற இவர் [[1947]] ஆம் ஆண்டுவரை அரசாங்கஅரசாங்கச் சபை உறுப்பினராகத் தொடர்ந்தார்.
 
[[1944]], [[ஆகஸ்ட் 29]] இல் இலங்கையில் தமிழர் நலன்களைப் பேணும் நோக்கில் [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] என்னும் அரசியல் கட்சியை இவர் தொடக்கினார். இக் கால கட்டத்தில் இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பிரித்தானிய அரசினால் ஏற்படுத்தப்பட்ட [[சோல்பரி ஆணைக்குழு]] முன் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக சமபல பிரதிநிதித்துவ முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என வாதிட்டார். இதன் மூலம் பொதுவாக இலங்கை அரசியலிலும், சிறப்பாக இலங்கைத் தமிழர் அரசியலிலும் பெரும் செல்வாக்குப் பெற்றார். அக்காலத்தில் [[ஐம்பதுக்கு ஐம்பது]] என்று பரவலாக அறியப்பட்ட இச் சமபல பிரதிநிதித்துவக் கொள்கையை அடிப்படையில் [[1947]] இல் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றது. இத் தேர்தலில் நல்ல அரசியல் செல்வாக்குக் கொண்டிருந்த [[அருணாசலம் மகாதேவா]]வை எதிர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம் பெருமளவு வாக்குகளால் வெற்றி பெற்றார்.
 
[[1948]] ஆம் ஆண்டில் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யால் அமைக்கப்பட்ட முதலாவது அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டதும், மலையகத் தமிழரின் பிரஜா உரிமைகுடியுரிமை பற்றிய பிரச்சினைகளில் பொன்னம்பலத்தின் அணுகு முறைகளையும் ஏற்றுக்கொள்ளாத சில தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறினர். இதனால் கட்சி பிளவு பட்டது. எனினும் பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் தொழில் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சுமார் ஐந்தாண்டு காலம் அமைச்சராகப் பதவியில் இருந்த இவர், பல பாரிய தொழிற்சாலைகளைத் தமிழர் பகுதிகளில் நிறுவினார். வடக்கில், [[காங்கேசன்துறை]]யில் நிறுவப்பட்ட [[காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை|சீமெந்துத் தொழிற்சாலை]]யும், [[வன்னி]]ப் பகுதிக்கு அண்மையில் [[பரந்தன்]] என்னுமிடத்தில் நிறுவப்பட்ட [[பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை|இரசாயனத் தொழிற்சாலையும்]], கிழக்கு மாகாணத்தில் [[மட்டக்களப்பு]]க்கு அண்மையில் [[வாழைச்சேனை]]யில் ஏற்படுத்தப்பட்ட [[வழைச்சேனை காகித ஆலை|காகித ஆலையும்]] இவற்றுள் முக்கியமானவை.
 
==செல்வாக்குச் சரிவு==
"https://ta.wikipedia.org/wiki/கணபதி_காங்கேசர்_பொன்னம்பலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது