தவக்குல் கர்மான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB |
No edit summary |
||
வரிசை 1:
உலகம் முழுவதும் இசுலாம் பெண் அடிமைதனத்தை ஊக்கப்படுத்துகிறது என்றும் இசுலாம் தீவிரவாதம் கொள்கை கொண்ட மதம் என்றும் இசுலாமியர்கள் அனைவரும் தீவிரவாதி என்ற தீவிர பொய் பரப்புரை செய்து கொண்டிருந்த காலம் அது. இதற்கு மத்தியில் 2011 ஆம் ஆண்டு அமேரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இடி முழக்கமாய் விழுந்தது நோபல் பரிசு குழுமம் அறிவிப்பு. அது தான் அமைதிக்கான 2011 ஆம் ஆண்டு நோபல் பரிசு எமன் நாட்டு சகோதாரி தவக்குல் கர்மனுக்கு வழங்கியது. இளம் வயதில் நோபல் பரிசை பெற்றவர் என்ற பெருமையும் முதல் அரபு பெண் நோபல் பரிசை பெற்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் கர்மன்.
எப்பொழுதும் அமைதியான தோற்றமும் தலையில் ஹிஜாப் அணிந்த நிலையும் ஆழ்ந்த அறிவாற்றலை பிரதிபளிக்கும் பேச்சும் கொண்டவர் கர்மன் 1979 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 அன்று எமன் நாட்டில் அப்டல் சலாம் கர்மனுக்கு மகளாக பிறந்தார் தவக்குல் கர்மன். இவருடைய சகோதரி சஃபா கர்மன் புகழ் பெற்ற அல்-ஜஸிரா என்ற தொலைகாட்சியில் செய்தியாளராக பணி புரிகிறார். இவருடைய சகோதரர் தாரிக் கர்மன் ஒர் கவிதை எழுதும் கவிஞர். எமன் நாட்டில் நடக்கும் ஆட்சிக்கு எதிராக போராடிக்கொண்டிருப்பவர் கர்மன்.
தவக்குல் கர்மன் ஒரு சிறந்த மனித உரிமை ஆர்வலராகவும் , பத்திரிக்கையாளரும் மற்றும் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார்.
மனித உரிமை ஆர்வலராக
இவர் எமன் நாட்டின் அலி அப்துல்லாஹ்வின் தொடர் ஆட்சியையும் அதில் நடக்கும் அநீதிக்கு எதிராக மாணவர்களை ஒருங்கினைத்து பல போராட்டங்களும் பேரணிகளும் நடத்தியுள்ளார். பலர் இவரிடம் ஏன் இந்த போராட்டம் என்று கேட்டபொது நாட்டில் இருக்கும் ஊழல், வேளையில்லாமை, வறுமை மற்றும் சர்வாதிகாரம் தாம் எங்களை போராட தூண்டியது என்று பதிலளித்தார். பல முறை சிறைவாசம் சென்றவர் ஒருமுறை கணவருடன் காரில் சென்றபோது அடையாளமில்லாத நபர்கள் காவல்துறை என்று சொல்லி கைது செய்து 3 மணி நேரம் எந்த காரணமின்றி சிறையிலிருந்தார். போராட்டத்தில் 30 சதவிகிதம் பெண்ங்கள் கலந்துகொண்டமையால் இது ஜாஸ்மீன் புரட்சி என்றழைக்கப்பட்டது. இவர் ஐ.நாவின் எதிர்ப்பை அலி அப்துல்லாஹ்வின் சர்வாதிகார ஆட்சியை கவிழ்க தீர்மானம் ஏற்ற முயன்று அதில் வெற்றியும் கண்டவர்.
இவர் போராட்டகளத்தில் எதிரிகளுக்கு அஞ்சாத குணம்கொண்டவர் என்பதற்கு சாட்சி.கர்மனின் சகோதரர் தாரிக் கூறியதாவது "ஒருமுறை எமன் நாட்டின் ஒரு முக்கிய நபர் எனது சகோதரியை தொலைபேசியில் அழைத்து போராட்டத்தை கைவிட வேண்டும் இல்லையேனில் உனக்கு மரணம் தான் பரிசாக கிடைக்கும் என்று மிரட்டினார். ஆனால் அதற்கு பயப்படாமல் மறுநாள் போராட்டகளத்திற்கு சென்றார்" என்று. எமன் நாட்டின் இருப்பு பெண்மணி என்றும் புரட்சியின் தாய் என்றும் கர்மனை அழைப்பர்.
பத்திரிக்கையாளராக
2005 ஆம் ஆண்டு கர்மன் எல்லையில்லாத பத்திரிக்கையாளர் பெண்கள் என்ற பெயரில் மனித உரிமை குழுமத்தை தொடங்கினர். பின்பு அது அரசு அங்கீகாரம் மற்றும் பல காரணத்தை மையப்படுத்தி சங்கலிடத மகளிர் பத்துரிக்கையாளார்கள் என்று பெயரை மாற்றிகொண்டனர். அல் தௌரா என்னும் செய்திதாளில் அங்கம் வகித்தார். அப்பொழுது பல கொலை மிரட்டலும் எச்சரிக்கையும் அரசால் தொல்லை கொடுக்கப்பட்டது. அனைத்தையும் சகித்திகொண்ட கர்மன் 2007 ஆம் ஆண்டு எமன் நாட்டில் பெண் பத்திரிக்கையாளர் சந்திக்கும் தொல்லையை ஆவணப்படுத்தி வெளியிட்டார். அரசு SMS சேவையை கடுமையாக கட்டுப்படுத்தி வைத்ததை கண்டித்து பல முயற்சிகளை எடுத்துள்ளார்.
அரசியல்வாதியாக
கர்மன் எமன் நாட்டின் எதிர்கட்சியான அல்- இஷ்லாவின் உறுப்பினராகவும் ஆலோசனைக்குழுவின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார்.அரசியல் களத்தில் இருந்து எமன் நாட்டில் நிலவி இருக்கும் ஊடக சுதந்திர கட்டுபாட்டினை தகர்க்க கடுமையாக போராடினார். நாட்டில் போதிய ஊட்டச்சத்து இல்லாமையால் பாதிப்புள்ளாகியுள்ள பெண்களுக்கு உருதுனையாக இருந்தார்.கட்சியில் இளம் வயதுடையவர்கள் அதிகம் இருக்கவேண்டும் என்றதால் மாணவர்களை சேர்த்தார். நாட்டின் ஊழலில் மூழ்கி கிடப்பதை காப்பாற்ற கடும்பாடுப்பட்டவர். ஊழலுக்கு எதிராக இவருடைய போராட்டத்தில் கிராம மக்கள் அதிகம் கலந்து கொண்டனர் காரணம் கிராம மக்களின் நிலத்தை அங்குள்ள தலைவர்கள் நிலமோசடியும் நில ஆக்கிரமைப்பு செய்துள்ளனர். அமேரிக்க ஏகாதிபத்தியதை எதிர்த்த கர்மன் அன்னிய நாட்டின் முதலீட்டை எதிர்த்ததுடன் அமேரிக்க அரசின் ஒப்பந்ததிற்கு என்றும் ஆதரவுகொடுக்காதவர். பல்லாயிர மக்கள் கூடியிருந்த மக்கள் மிச்சிகன் பல்கலைக்கழகம் அரங்கத்தின் மத்தியில் கர்மன் கூறிய வார்த்தைகள் " நான் இந்த உலகின் குடிமகள். இந்த உலகம் என் நாடு . மனிதம் என்னுடைய சமுகம் "
2011 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை இவருக்கு கொடுக்கப்பட்ட போது பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் கூறியது:" நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் இந்த பரிசை துனிசியா,எகிப்து,பாலஸ்தீனம் பொன்ற நாட்டில் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடி உயிர் நீத்த தீயாகிகளுக்கு சமர்ப்பிக்கின்றேன்" என்றார். பரிசு வாங்கிய இரண்டு வருடம் பின் தன்னுடைய பரிசு தொகை 5000,000 டாலரை போராட்டத்தில் உயிர் நீத்த தியாகியின் குடும்பத்திற்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் நிவாரணம் பணி செய்யும் தொண்டு நிறுவனத்திற்கு அளித்தார்
ஒரு பிரிட்டிஸ் பத்திரிக்கையாளர் கர்மனிடம் நீங்கள் ஏன் முழு உடலையும் மறைத்து இருக்கின்றீர்கள் என்று வினவினார்; அதற்கு கர்மன் அளித்த பதில் மிகவும் அர்த்தமுள்ளதும் ஆழ்ந்த கருத்தையுடையது. “ஆதிக்காலத்தில் மனிதன் முழு நிர்வாணமாக தான் இருந்தான் . அறிவும் கலாச்சாரமும் பெருக பெருக அவன் ஆடையும் அதிகமானது. தற்பொழுது நான் அணிந்திருக்கும் முழு ஆடை என்னுடைய முழு அறிவாற்றலையும் கலாச்சாரத்தின் உயர்ந்த நிலையை காட்டுகிறது. இந்த காலகட்டத்தில் சிலர் பழைய காலத்திற்கு மீண்டும் செல்கின்றனர்” என்றார்.
பெண் அடிமைதனத்தை இசுலாம் அனுமதிக்கிறது என்றும் இசுலாமியர்கள் அமைதியை என்றும் விரும்பாதவர்கள் அதனால் அவர்கள் தீவிரவாத செயல்களை அதிகம் ஈடுபடுவார்கள் என்ற பொய் பராப்புரையை தகர்த்தெரிந்தவர் தவக்குல் கர்மன்.
▲{{2011 நோபல் பரிசு வென்றவர்கள்}}
|