நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1100கள் பிறப்புகள்
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 19:
 
==வாழ்கைச் சுருக்கம்==
இங்கிலாந்தில் 1100-ம் ஆண்டில் பிறந்த இவர், இளம் வயதில் கல்வி கற்பதற்காக ஆர்லஸ் சென்றார். படித்து முடித்ததும் அவிஞ்னோன் அருகிலிருக்கும் புனித ரூபஸ் துறவிகள் சபையில் சேர்ந்தார். ஒரு துறவியாக உரோமைக்கு சென்றபோது [[மூன்றாம் யூஜின் (திருத்தந்தை)|திருத்தந்தை முன்றாம்மூன்றாம் யூஜின்]] இவரை அல்பானோவின் கர்தினால் ஆயராக 1146-ல் நியமித்தார். 1154 டிசம்பர் 4-ல் இவர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நான்காம் ஏட்ரியன் என்ற பெயர் சூடிக்கொண்டார்.
 
சிசிலி நாட்டு அரசர் வில்லியம், வெளிப்படையாகவே ஏட்ரியனின் திருத்தந்தை தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டிருந்தார். காம்பாஞ்ஞாவிலிருந்த குறுநில அதிபர்கள் தங்களுக்கிடையே சண்டையிட்டதோடு நின்று விடாமல், திருத்தந்தையையும் தாக்க முனைந்தனர். திருத்தூர்களின் கல்லறைகளுக்கு வந்த திருப்பயணிகளையும் கொள்ளையடித்தனர். பிரெசியாவின் ஆர்னால்டு தலைமையில் உரோமைக்குடிமக்களும் வன்முறையில் ஈடுபட்டனர். 1155 ஜனவரியில் கர்தினால் ஜெரார்டஸ் தனது இல்லம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதனால் உரோமையில் தடை உத்தரவுபோடப்பட்டது. இதனால் விட்டர்போ சென்றார் திருத்தந்தை. இயேசுவின் [[உயிர்ப்பு ஞாயிறு|உயிர்ப்புப் பெருவிழா]] நெருங்கிக் கொண்டிருந்தால், உரோமை மக்களும் பிரபுக்களும் (Roman Senate) விடர்போவுக்குச் சென்று திருத்தந்தையிடம் இனி கலவரங்களை உருவாக்காமலிருப்பதாக வாக்குறுதி அளித்தனர். அதனால் திருத்தந்தை உரோமை நகருக்குத் திரும்பினார். பிரச்சனைகளுக்குக் காரணமாயிருந்த ஆர்னாடு நாடுகடத்தப்பட்டார். திருத்தந்தை நான்காம் ஏட்ரியன் 1159 செப்டம்பர் முதல் நாளில் இறந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/நான்காம்_ஏட்ரியன்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது