பகதூர் சா சஃபார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1862 இறப்புகள் |
சிNo edit summary |
||
வரிசை 23:
}}
'''அபு சஃபார் சிராசுத்தீன் முகம்மத் பகதூர் சா சஃபார்''' (உருது: ابو ظفر سِراجُ الْدین محمد بُہادر شاہ ظفر) என்னும் முழுப் பெயர் கொண்டவரும் '''பகதூர் சா''', '''இரண்டாம் பகதூர் சா''' என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டவருமான '''பகதூர் சா சஃபார்''' (Bahadur Shah Zafar) (அக்டோபர் 1775 – 7 நவம்பர் 1862) இந்தியாவின் கடைசி [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசரும்]], [[தைமூரிய வம்சம்|தைமூரிய வம்சத்தின்]] கடைசி ஆட்சியாளரும் ஆவார். இவர் முகலாயப் பேரரசர் [[இரண்டாம் அக்பர் சா|இரண்டாம் அக்பர் சா சானி]] என்பவருக்கு, அவரது இந்து [[
இரண்டாம் அக்பர் சா 1838 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமான பின்னர் பகதூர் சா சஃபார் முகலாயப் பேரரசர் ஆனார். சஃபார் என்பது ஒரு உருதுப் புலவராக அவர் தனக்கு வைத்துக்கொண்ட [[புனைபெயர்]] ஆகும். இவரது தந்தையார் "இரண்டாம் அக்பர் சா சானி" 1806 க்கும், 1837 க்கும் இடைப்பட்ட காலத்தில் விரைவாகச் சுருங்கி வந்த முகலாயப் பேரரசை ஆண்டு வந்தார். இக் காலத்திலேயே [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] முகலாயப் பேரரசரின் சார்பில் ஆட்சி நடத்தி வந்தது. இரண்டாம் அக்பர் சா சானி, அவரது வாரிசாக பகதூர் சா சஃபாரரைத் தெரிவு செய்யவில்லை. அவரது ஒரு மனைவியான மும்தாசு பேகம் தனது மகன் [[மிர்சா செகாங்கீர்|மிர்சா செகாங்கீரை]] வாரிசாகத் தெரிவு செய்யும்படி வற்புறுத்தி வந்தார். அக்பர் சா இதற்கு இணங்கும் நிலையில் இருந்தாலும், மிர்சா செகாங்கீர் பிரித்தானியருடன் நல்லுறவு கொண்டிராததால் இது சாத்தியமாகவில்லை.
வரி 36 ⟶ 38:
[[படிமம்:The capture of the king of delhi by Captain Hodson.jpg|right|220px|thumb|20 செப்டெம்பர் 1857 ஆம் ஆண்டு மகதூர் சா சஃபாரும், மகன்களும் உமாயூன் சமாதிக் கட்டிடத்தில் வில்லியம் ஒட்சனால் பிடிக்கப்பட்ட காட்சி.]]
[[படிமம்:Bahadur Shah Zafar.jpg|thumb|300px|left|1858 ல், தில்லியில் இடம்பெற்ற கண்துடைப்பு விசாரணைக்குப் பின்பும், நாடுகடத்தப்பட முன்பும் எடுக்கப்பட்ட படம். இம் முகலாயப் பேரரசர் எடுத்துக்கொண்ட ஒரே நிழற்படம் இதுவாக இருக்கலாம்.]]
இந்துக்கள், முசுலிம்கள் என்ற வேறுபாடின்றி இந்தியரை ஒன்றிணைப்பதற்கான தேவை ஏற்பட்டதனால், சஃபாரே தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என கிளர்ச்சியை ஆதரித்த அரசர்களும், கிளர்ச்சிப் படைகளும் கேட்டுக்கொண்டன. பிரித்தானியரை இந்தியாவிலிருந்து அகற்றும்வரை எல்லா அரசர்களும் இந்தியாவின் பேரரசராக சஃபாரை ஏற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.<ref>http://www.tribuneindia.com/2007/20070510/1857/main1.htm</ref> சஃபார் எவருக்கும் பயமுறுத்தலாக இல்லாதிருந்ததுடன், முகலாயப் பேரரசின் வழியினர் ஆகவும் இருந்தது அவர் மற்றெவரிலும் தகுதியானவராகக் கருதப்படக் காரணமாயிற்று. இக் கிளர்ச்சி தோல்வியுற்று, பிரித்தானியரின் வெற்றி உறுதியான போது சஃபார் அவரது மக்கள் இருவருடனும் ஒரு பேரப்பிள்ளையுடனும் தில்லிக்குக் புறம்பாக அமைந்திருந்த [[உமாயூனின் சமாதி]]க் கட்டிடத்தில் தஞ்சம் அடைந்து மறைந்திருந்தார். 1857 செப்டெம்பர் 20 ஆம் தேதி தளபதி [[வில்லியம் ஒட்சன்]] தலைமையிலான பிரித்தானியப் படைகள் சமாதிக் கட்டிடத்தைச் சூழ்ந்துகொண்டு சஃபாரைச் சரணடையுமாறு கட்டாயப் படுத்தியது. அடுத்த நாள் ஒட்சன், சஃபாரின் ஆண்மக்களான மிர்சா முகல், மிசா கிசிர் சுல்தான் பேரன் மிர்சா அபூபக்கர் ஆகியோரை [[தில்லி நுழைவாயில்|தில்லி நுழைவாயிலுக்கு]] அருகின் உள்ள [[கூனி தர்வாசா]] என்னும் இடத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றான்.
|