'''கியோட்டோ நடபடிசர்வதேச உடன்படிக்கை''' என்பது, பன்னாட்டு ஒப்பந்தமான [[ஐக்கிய நாடுகள் தட்பவெப்ப மாற்றம் தொடர்பான கட்டமைப்பு நடைமுறைகள்]] (United Nations Framework Convention on Climate Change) என்பதற்கான நடபடியைக் குறிக்கும். இப் பன்னாட்டு ஒப்பந்தம், "புவி உச்சிமாநாடு" என அறியப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் சூழலும் வளர்ச்சியும் தொடர்பாக [[பிரேசில்|பிரேசிலில்]] உள்ள [[ரியோடிஜெனரோ]]வில் 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-14 தேதிகளில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உருவாக்கப்பட்டதாகும். இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் தட்பவெப்ப நிலைகளில் ஆபத்தான மாற்றங்களை உண்டாக்காத அளவுக்கு, வளிமண்டலத்தில் [[பைங்குடில் வளிமம்|பைங்குடில் வளிமங்களின்]] செறிவைச் சமநிலையில் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டது. கியோட்டோ நடபடி, நான்கு பைங்குடில் வளிமங்களையும், தொழில்மய நாடுகளால் உற்பத்தி செய்யப்படும் இரண்டு தொகுதி வளிமங்களையும் குறைப்பதற்கான சட்ட வலுக்கொண்ட பொறுப்புக்களை நிலைநாட்டுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட நான்கு பைங்குடில் வளிமங்கள், [[காபனீரொட்சைட்டு]] (காபன் டைஆக்சைடு), [[மீதேன்]], [[நைத்திரசு ஒட்சைட்டு]], [[சல்பர் ஹெக்சாபுளோரைடு]] என்பனவாகும். ஏனைய இரண்டு வளிமத் தொகுதிகளும் [[ஐதரோபுளோரோகாபன்]]களும், [[பேர்புளோரோகாபன்]]களும் ஆகும்.