சித்தரஞ்சன் தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள் |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 5:
[[தேசபந்து]] சித்தரஞ்சன் தாஸ் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர். 1917- ஆம் ஆண்டிலிருந்து 1925- ஆம் ஆண்டு வரை தீவிர அரசியலில் ஈடுபட்டவர். இவர் பூபன் மோகன் தாஸ் என்பவருக்குப் பிறந்தார். [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] சட்டக் கல்வி கல்வி கற்றவர், [[1909]]இல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் [[அரவிந்தர்|அரவிந்தருக்கு]] ஆதரவாக வெற்றிகரமாக வாதாடினார்.
இவர் [[சுபாஷ் சந்திர போஸ்
அவரது அரசியல் ஞானத்தாலும் பேச்சுத் திறமையாலும் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியமான நபராக உயர்ந்தார்.அவர் கிராமங்களை முன்னேற்றி கைத்தொழில்களை வளர்க்க விரும்பினார். சுய ராஜ்ஜியக் கட்சித் தலைவர். சாதி வேற்றுமையையும் தீண்டாமையையும் வெறுத்தவர். பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். புகழ் பெற்ற வழக்கறிஞராக இருந்தபோதும் சுதந்திரப் போராட்டத்திற்காக தனது தொழிலைத் தியாகம் செய்தவர்.
==இளமைக்காலம்==
1870- ஆம் ஆண்டு நவம்பர் 5- ஆம் நாள் வங்காளத்தில் டாக்கா மாவட்டம் விக்ராம்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை பூபன் மோஹன் தாஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். பூபன் தாஸ் சிறந்த அறிவாளி. பிரம்ம சமாஜத்தில் தீவிர நம்பிக்கை உடையவர். மிகுந்த நாட்டுப் பற்று உடையவர். சித்தரஞ்சன் தாஸ் நாட்டுப் பற்று உடையவராக விளங்கியதற்கு அவரது தந்தையே காரணம். சித்தரஞ்சன் தாஸ் அவரது முதல் மகன். அவருக்கு ஒரு தமக்கை உண்டு. சித்தரஞ்சன் தாஸ் கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் 1890-இல் இங்கிலாந்து சென்று [[இந்தியக் குடிமைப் பணி]] தேர்வு எழுதினார். இந்தியா திரும்பி 1894-ல் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற ஆரம்பித்தார். அவரது இளைய சகோதரர் பி. ஆர். தாஸ் பாட்னா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார். வங்கப்பிரிவினையின்போது அரவிந்தர், பிபின் சந்த்ர பாலுடன் இணைந்து "வந்தே மாதரம்" என்ற ஆங்கில இதழில் எழுதி வந்தார்.
==அனுஷீலன் சமிதி==
அரவிந்தரும் சித்தரஞ்சன் தாஸும் சுதந்திரப் போராட்ட புரட்சி இயக்கமான அனுஷீலன் சமிதியின் துணைத்தலைவர்கள் ஆவர். இவ்வியக்கம் இருபதாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் கிழக்கு இந்தியாவின் முக்கிய ஆயுதம் ஏந்திய இயக்கம் ஆகும். ஆயுதப்புரட்சி மூலம் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதே இதன் குறிக்கோள் ஆகும். ஜதீந்திரநாத் பானர்ஜி, ஜதீந்திரநாத் முகர்ஜி, யதீந்திர கோஷ் (அரவிந்தரின் இளைய சகோதரர்), [[ராஷ் பிஹாரி போஸ்]] ஆகியோர் இதன் முக்கிய உறுப்பினர்கள் ஆவர்.
சித்தரஞ்சன் தாஸ் ஐரோப்பிய இலக்கியத்தில் ஆர்வம் உடையவர். அவர் சாகர் சங்கீத், நாராயண்மாலா, கிஷோர்-கிஷோரீ, அந்தர்யாமி போன்ற இலக்கியங்களை எழுதியுள்ளார். மேற்கத்திய கல்விமுறை ஆத்மா முன்னேற்றத்திற்குப் பயனற்றது என்று கருதினார். பிரம்ம சமாஜ நூல்கள், [[ராமகிருஷ்ணர்
அரவிந்தரின் அலிப்பூர் குண்டுவழக்கில் தாஸின் வாதத் திறமையால் அரவிந்தர் விடுவிக்கப்பட்டார். அதனால் அவரது புகழ் பரவியது. தும்ரோன் அரசரின் தத்தெடுப்பு குறித்த வழக்கிலும் அவர் வெற்றி பெற்றார். இவ்வாறாக அவர் சிவில், கிரிமினல் இரண்டிலுமே தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். 1920-ல் அவரது மாத வருமானம் ரூ.50,000 ஆகும். அவரது தந்தை தாராள குணத்தாலும், ஆடம்பரத்தாலும் திவாலாகி இருந்தார். 1913-ல் தாஸ் தனது தந்தையின் கடன்களை அடைத்தார். இது அவரது உயர்ந்த தர்ம நியாய உணர்ச்சியைக் காட்டுகிறது. 1921- ஆம் ஆண்டு விக்ராம்பூரில் நடைபெற்ற தேசிய கல்வி மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். அதே ஆண்டு அஸ்ஸாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வெளியேற்றம், அஸ்ஸாம்-வங்காள ரயில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தினார்.
==அலிப்பூர் குண்டு வழக்கு==
[[குதிராம் போஸ்]] என்ற இளைஞர் நாட்டுப்பற்று மிகுந்தவர். தனது 13-ஆவது வயதிலேயே சுதந்திரப் போராட்ட புரட்சி இயக்கமான யுகாந்தர் இயக்கத்தில் இணைந்தவர். வங்கப்பிரிவினையை எதிர்த்து நடந்த குண்டு வீச்சுகளில் தீவிரமாகப் பங்கு பெற்றவர்.வங்காளத்தில் முசாபூர் நகரத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்த கிங்ஸ்போர்டு என்பவர் மீது குண்டுவீச குதிராம் போஸும் அவரது நண்பர் பிரபுல்ல சாஹியும் சென்றனர். 1908-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி கிங்ஸ்போர்டின் வாகனத்தின் மீது குண்டு வீசினர். அந்த வாகனத்தில் வந்த வேறு ஒரு பெண்மணியும் அவரது மகளும் இறந்தனர். பிரபுல்ல சாஹி பிடிபட்ட உடன் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தார். குதிராம் போஸ் 1908-ஆம் ஆண்டு ஆகஸ்டு 11-ஆம் தேதி தூக்கிலிடப்பட்ட போது அவரது வயது 18 ஆகும். அப்போதும் அவர் "வந்தே மாதரம்" என்றே முழங்கினார். இந்த வழக்கில் அரவிந்தரும் கைது செய்யப்பட்டார். ஆனால் தாஸின் வாதத் திறமையால் அரவிந்தர் விடுவிக்கப்பட்டார்.
1921-ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசத் தொண்டாற்றுவதற்காக புகழ்பெற்ற, திறமை வாய்ந்த வழக்கறிஞரான தாஸ் தனது தொழிலைத் துறந்தார். அவரது இந்த தன்னலமற்ற தியாகம் நாடுமுழுவதும் அவருக்கு இருந்த நன்மதிப்பை அதிகரித்தது. வேல்ஸ் இளவரசரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் சித்தரஞ்சன் தாஸ் மனைவி பசந்தி தேவி, மகன் சிரா ரஞ்சன், சகோதரி ஊர்மிளா தேவி, கிரண் சங்கர் ராய், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1922-ல் காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டதால் காங்கிரஸிலிருந்து விலகி சுயராஜ்ஜியக் கட்சி துவங்கினார்.
==சுயராஜ்ஜியக் கட்சி==
|