கிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1993 இறப்புகள் |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 21:
== வாழ்க்கை சுருக்கம் ==
சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின்னர் கேணல் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். இவர் [[இலங்கை]]யின் [[வல்வெட்டித்துறை]]யில் [[சனவரி 2]], [[1960]] ஆம் ஆண்டு அன்று சதாசிவம், ராஜலட்சுமி அவர்களுக்கு [[மகன்|மகனாகப்]] பிறந்தார்.
மேலும் இவரது தந்தைக்கு வல்வெட்டித்துறையில் ஒரு அச்சகம் இருந்தது. இவருடையத் தாயார் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி]] (Ilankai Thamil Arasu Kadchi) என்னும் அரசியல் கட்சியின் மகளிர் பிரிவின் தலைவராக இருந்தார்.
மேலும் இவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்]] அவர்களின் நெருங்கிய உறவினர் ஆவார்.
மேலும் கிட்டு, [[1991]] ஆம் ஆண்டு கொழும்பில் யுத்த நிறுத்த காலத்தில் தனது காதலியான சிந்தியாவை திருமணம் செய்து கொண்டார். சிந்தியா ஒரு [[மருத்துவம்|மருத்துவக்]] [[கல்வி]] மாணவி ஆவார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
வரிசை 31:
1983 இன் இறுதிக் காலத்தில் [[இந்தியா]]வுக்குப் பயிற்சிக்காகச் சென்ற இயக்கத்தின் முதல் குழுவில் கிட்டு இடம் பெற்றார். பயிற்சியை முடித்து [[தமிழீழம்]] வந்த கிட்டு [[1984]] [[மார்ச் 2]] இல் நடைபெற்ற [[குருநகர்]] இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்தினார். அதே நேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேப்டன் பண்டிதர் [[1985]] [[ஜனவரி 9]] தில் போரினால் மரணமடைய அவரின் இடத்திற்கு கிட்டு நியமிக்கப்பட்டார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். காவல் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். [[1987]] [[மார்ச்]] இறுதியில் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்தார். [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இந்திய-இலங்கை ஒப்பந்த]] காலத்தில் தனது சிகிச்சைக்காக [[இந்தியா]] சென்றார் கிட்டு. கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது.
[[1989]] இல் இலங்கை அரசுடன் பேசுவதற்கு [[கொழும்பு]] சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே [[லண்டன்]] சென்றார். பின்னர் லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 பேருடன் '''குவேக்கர்ஸ்''' இன் சமாதானச் செய்தியுடன் சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் தமிழீழம் திரும்புகையில் [[இந்தியக் கடற்படை|இந்தியக் கடற்படையால்]] சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து கொல்லப்பட்டார்.
== இவற்றையும் பார்க்க ==
|