கோயம்புத்தூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
வரிசை 28:
 
== வரலாறு ==
கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பழங்குடிகளான [[இருளர்|இருளர்கள்]] முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9 ஆம் நூற்றாண்டில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்த போது அவர்கள் கோயம்புத்தூரைத் தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தனர்{{cn}}. அவர்கள் [[கோனியம்மன் கோவில் | கோனியம்மன் கோவிலை]] மையமாகக் கொண்டு{{cn}} முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள், குறிப்பாக [[கோசர்|கோசர்கள்]] ஆண்டு வந்தனர். கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது{{cn}}.
 
1550 களில் மதுரையில் விசய நகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில் உருவெடுத்தனர். 1700 களில் [[மதுரை நாயக்கர்கள்|மதுரை நாயக்கர்களுக்கும்]] [[மைசூர் அரசு|மைசூர் மன்னர்களுக்குமிடையே]] கோயம்புத்தூரில் சண்டை நடைபெற்றது{{cn}}. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.
 
பழங்குடியினரின் ஆதிக்கம் இவ்விடத்தில் வெகு காலம் நீடிக்கவில்லை. [[இராட்டிரகூடர்]]களிடம் இப்பகுதி சில காலம் இருந்து பின்னர் [[இராஜராஜ சோழன்]] காலத்தில்{{cn}} [[சோழர்]] கைக்கு மாறியது. சோழ அரசு வீழ்ச்சி அடைந்த பின் கொங்கு நாடு [[சாளுக்கியர்]]களாலும் பின்னர் [[பாண்டியர்]]களாலும் ஆளப்பட்டது. பாண்டியர்களின் ஆட்சியில் உண்ணாட்டுப் பிரச்சினைகள் ஏற்பட்ட போது, [[டெல்லி சுல்தான்]] தலையிட்டதனால்{{cn}} இப்பகுதி [[மதுரை சுல்தான்|மதுரை சுல்தானின்]] கைக்கு மாறியது. இவர்களிடமிருந்து இப்பகுதியினை 1377-78 ஆம் ஆண்டு காலத்தில் [[விஜயநகரப்_பேரரசுவிஜயநகரப் பேரரசு|விஜய நகரப் பேரரசு]] கைப்பற்றியது{{cn}}. இதற்குப் பின் இப்பகுதியினை [[மதுரை நாயக்கர்கள்]] ஆண்டனர்{{cn}}.
 
1760 களில் மைசூரை ஹைதர் அலி கைப்பற்றினார். அவர் பிரித்தானியருக்கு எதிராகச் செயற்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799 ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது.
வரிசை 84:
# [[தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|தொண்டாமுத்தூர்]]
# [[கோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி)|கோயம்புத்தூர் தெற்கு]]
# [[சிங்காநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|சிங்காநல்லூர் ]]
# [[கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)|கிணத்துக்கடவு]]
# [[பொள்ளாச்சி (சட்டமன்றத் தொகுதி)|பொள்ளாச்சி]]
# [[வால்பாறை (சட்டமன்றத் தொகுதி)|வால்பாறை ]]
 
== மக்கள் வகைப்பாடு ==
வரிசை 104:
 
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
 
 
{{தமிழ்நாடு}}
 
[[பகுப்பு:தமிழ்நாடு மாவட்டங்கள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டம்| ]]
"https://ta.wikipedia.org/wiki/கோயம்புத்தூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது