மாந்தா தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Manda (goddess)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:31, 27 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

மாந்தா அல்லது தாமினி இந்து சமயத்த்தில் குறிக்கப்படும் கலைகளின் தெய்வமும் சனியின் இரண்டாவது மனைவியும்,(சமக்கிருதம்: मान्दा -சமக்கிருதம்: धामिनी ) குளிகனின் தாயும் ஆவார். மாந்தாசித்ர ரதன் என்ற ஒரு காந்தர்வரின் மகளும் இளவரசியும் அவார். அவள் அறுபத்து நான்கு ஆய கலைகளின் தெய்வம். அவரது நிருத்யா / நடனம் முழு அண்டத்திலும் யாரையும் ஈர்க்கவல்லது. சில நேரங்களில், இந்தியாவில் சனிஸ்வரனின் தெய்வீகப் பிரதிநிதி என மாந்தா குறிப்பிடப்படுகிறார்.

Dhamini
அதிபதிGoddess of Art and Dance
தேவநாகரிधामिनी
சமசுகிருதம்Dhāminī
வகைDevi, Devotee of Saraswati
இடம்Gandharvaloka
மந்திரம்ॐ मान्दायै धामाना नमः oṁ māndāyai dhāmānā namaḥ
ஆயுதம்Veena (Indian Harp)
துணைShani
குழந்தைகள்Gulikan/Mandi (son)[1]

பெயரிடுதல்

மந்தா சிறியதாக இருந்தபோது ஒரு அசுரப்பாம்பு மாந்தாவைக் கொல்ல வந்தது மந்தாவின் தாய் திவ்யங்கா குழந்தையைக் காக்கப்அசுரப் பாம்புடன் போராடி உயிரைத் தியாகம் செய்து மாந்தாவைக் காப்பாற்றினார். அவரது மரணத்திதால் மாந்தாவின் தந்தையான சித்ரரதன் மிகத் துயரம் கொண்டார். எனவே அவர் அந்த நினைவாக மாந்தாவுக்கு தாமினா என்ற அந்தப் பாம்பின் பெயரை தாமினை எனத் தனது மகள் மாந்தாவுக்குச் சூட்டினார்.

சாபம்

ஒரு பழங்கால கதையின்படி, அவரது குழந்தை பருவத்திலிருந்தே சனி சிவபெருமானின் தீவிர பக்தராக இருந்தார். அவரது தந்தையானசூர்ய தேவன், சித்ரரதனின் திறமையான மகள் மாந்தாவை சனிக்குத் திருமணம் செய்துவைத்தார். அவர் (சனி) சிவபெருமானின் ஆழ்ந்த எண்ணங்களை உள்வாங்கி எப்பொழுதும் சிவனின் நிணைவிலேயே இருந்தார். ஒரு நாள், அவரது மனைவி (தாமினி) மாதவிடாய் காலத்திற்குப் பிறகு குளித்தபின்,அவரிடம் வந்தார், அந்த நேரத்தில் சனி தனது தெய்வத்தின் (சிவபெருமானின்) ஆழமான எண்ணங்களில் ஆழமாக உள்வாங்கப்பட்டார். அவர் தனது மனைவியைப் பார்க்கக்கூடவில்லை. அதனால் அவரது மனைவி மாங்கல்ய தோசத்தால் பாதிக்கப்பட்டார். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய தாமினி, “எதிர்காலத்தில் நீங்கள் ஒருவரைப் பார்க்க முடியாமல் போகலாம், உங்கள் பார்வை எப்போதும் கீழ்நோக்கி இருக்கும். நீங்கள் யாரைப் பார்த்தாலும் அது பாழாகிவிடும்." என்று சபித்தாள். அவள் கோபம் நீங்கியபோது, தனது சாபத்தை எண்ணி மனந்திரும்பினாள், ஆனால் சாபத்தை நீக்க முடியவில்லை, எனவே சனி பகவான் பார்வை என்றென்றும் கீழ்நோக்கி உள்ளது. ஆனால், சனி தனது செயல்கள் மூலம் இறைவன் என ஏற்றுக்கொள்ளும்போது, அவர் இந்த சாபத்திலிருந்து விடுபடுகிறார்.

சனியின் மனைவிகளின் பெயர்களை முழக்கமிடுவது

வழிபாட்டுப்பாடல்களில் சனியின் மனைவி தாமினி முதன்மையாகக் குறிப்பிடப்படுகிறார்.. சனியின் மனைவிகளின் பெயர்களை உச்சரிப்பதும் சனியை சமாதானப்படுத்த உதவுகிறது.

[2]

மேலும் காண்க: நீலா

இந்தியாவின் கேரளாவில் மாந்தாவின் மகனின் கோயில்கள்

மாந்தாவின் மகனது கோயில் குளிகன்கோவில் என அறியப்படுகிறது அங்கு சிவபெருமான் அங்கே வணங்கப்படுறார். இந்தியாவின் கேரளாவில் சில பிரபலமான குளிகன் கோயில்கள் உள்ளன:புல்லூர் குளிகன் கோயில்,(ஆயஅச்சுகள்: 12°21′30″N 75°07′37″E / 12.3582543°N 75.1270049°E / 12.3582543; 75.1270049), பொன்னியத்தில் கானலிரிக்கண்டியில் குளிகன் கோயில்(ஆயஅச்சுகள்: 11°46′20″N 75°31′54″E / 11.7721874°N 75.5317746°E / 11.7721874; 75.5317746 ), வயநாட்டில் ஸ்ரீ திருநெல்லிக் குளிகன் காவு,(ஆயஅச்சுகள்: 11°40′04″N 76°16′41″E / 11.6678867°N 76.278175°E / 11.6678867; 76.278175 ), பேரளத்தில் ஸ்ரீ குளிகண் தேவஸ்தானம்(ஆயஅச்சுகள்: 12°10′51″N 75°12′31″E / 12.1809261°N 75.2086553°E / 12.1809261; 75.2086553 ), நைதலூர் தலச்சிலோன் குளிகன் சேத்திரம்(ஆயஅச்சுகள்: 11°27′29″N 75°44′44″E / 11.4579709°N 75.7455826°E / 11.4579709; 75.7455826 ), ஆகியவை கேரளாவில் உள்ள கோயில்கள் ஆகும்.

மேலும் காண்க: குளிகன் தேயம்

தொலைக்காட்சியில்

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் என்ற தொடரில் தாமினி காட்டப்பட்டார். அவரது கதாபாத்திரத்தில் தினா தத்தா நடித்தார். [3]

குறிப்புகள்

  1. "Gulikan". uni5.co. பார்க்கப்பட்ட நாள் 18 June 2018.
  2. "Shani Jayanti". www.astrospeak.com. பார்க்கப்பட்ட நாள் 18 June 2018.
  3. "Tina Dutta finally said about her role in karmphal Data Shani". televisionsworld.com. பார்க்கப்பட்ட நாள் 18 June 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாந்தா_தேவி&oldid=2940266" இலிருந்து மீள்விக்கப்பட்டது