சீத்லா மாதா, பஞ்சாப்

சீத்லா மாதா (Seetla Mata) என்பது பஞ்சாபி நாட்டுப்புற மதத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நாட்டுப்புற தெய்வம். பெரியம்மை நோய்க்கான இத்தெய்வம் சீத்லா மற்றும் இதன் மீட்புக்காக வழிபடப்படுகிறாள். [1]

சீத்லா-மாதா-மந்திர்-வாயில், லாகூர்

தோற்றம் தொகு

சீத்லா மாதாவின் வழிபாட்டு முறை வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது. இது அரப்பா நாகரிகத்துடன் தொடர்புடையது. அரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரை ஒன்றில் நீண்ட முடியுடன் ஏழு சிறுமிகளின் உருவங்கள் உள்ளன. இவர்கள் சீத்லா மாதா மற்றும் சீத்லா மாதாவின் ஆறு சகோதரிகள் என நம்பப்படுகிறது.[1]

சகோதரிகள் தொகு

சீத்லா மாதா சில சமயங்களில் ஆறு சகோதரிகளைக் கொண்டவராகவும்,[1] மற்ற நேரங்களில் எட்டு சகோதரிகளில் மூத்தவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.[2] இவர்கள் அனைவரும் கொப்புள நோய்களை உண்டாக்கி, குணமடைய வழிபடுகிறார்கள். சகோதரிகள்: மசானி, பசந்தி, மக மாயி, போலம்டே, லம்காரியா மற்றும் அக்வானி ஆவர். சீத்லா மாதாவின் மைய சன்னதியைச் சுற்றிலும் பல கோயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று பகர்வாலி அல்லது மலை என அழைக்கப்படுகிறது.[1] பஞ்சாபியில், சீத்லா மாதாவின் சகோதரிகளின் ஆலயங்கள் "மாத்யா" என்று அழைக்கப்படுகின்றன.[3]

சீத்லா மாதாவின் பிரதிநிதித்துவம் தொகு

 
கழுதையின் மீது அமர்ந்திருக்கும் இந்தியக் கடவுள் சீத்லா மாதா

சீத்லா மாதா பின்வரும் அம்சங்களைக் கொண்டுள்ளார்:[1]

  1. முகம் அருவருப்பானது.
  2. பற்கள் வெளிப்படுகின்றன.
  3. காதுகள் விசிறி போல் பெரியவை.
  4. கண்கள் பெரியவை.
  5. வாய் திறந்திருக்கும்.
  6. கழுதை மீது சவாரி செய்கிறாள்.
  7. ஒரு கையில் ஒரு பெரிய விளக்குமாறு உள்ளது.
  8. மற்றொரு கையில் குடமும், இன்னுமொரு கையில் மரக்கட்டையும் வைத்திருக்கின்றார்.
  9. தலையில் விசிறி ஒன்று உள்ளது.
  10. சாட்டையாகப் பாம்பை வைத்திருக்கிறாள்.

வழிபாடு தொகு

சீத்லா மாதாவை வருடத்தின் எந்த நேரத்திலும் வழிபடலாம். இருப்பினும், பஞ்சாபி நாட்காட்டியின் படி பஞ்சாபி மாதமான சைட் (மார்ச்-ஏப்ரல்) மாதம் சிறப்பு வழிபாட்டுக் காலம் ஆகும். பொதுவாக, திங்கள், செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பக்தர்கள் அதிகாலையில் வழிபடப்படுகிறாள்.

பஞ்சாபி நாட்காட்டியின் கடைசி மாதம் மற்றும் கோதுமை பழுக்க வைக்கும் பருவம் என்பதால் பஞ்சாபி கலாச்சாரத்தில் சாய்ட் மாதம் முக்கியமானது. மேலும், பசந்த் (வசந்த காலம்) பருவமாகும். சீத்லா மாதாவின் பெயர்களில் ஒன்று பசந்தி, எனவே இவர் பசந்தின் எதிர்மறையான பக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]

மரங்கள் தொகு

சீத்லா மாதாவும் அவரது சகோதரிகளும் வேம்பு (அசாதிராக்டா இண்டிகா), கருவேலமரம் (அகாசியா அராபிகா) அல்லது வன்னி (புரோசோபிசு ஸ்பெசிகெரா) மரங்களில் வசிக்கின்றனர்.

சன்னதி தொகு

சன்னதிகள் குளங்களின் கரையில் அமைந்துள்ளன. இந்த ஆலயம் சில செங்கற்களால் ஆனது மற்றும் வழக்கமான பூசாரிகள் இல்லை.

பாட்டியாலாவில் உள்ள சீல் கிராமத்தின் புனிதத் தலங்களிலும், லூதியானா மாவட்டத்தில் உள்ள ஜார்க்[4] கிராமத்திலும் வருடாந்திர திருவிழாக்கள் நடைபெறும் மிக முக்கியமான கோவில்கள் ஆகும்.[1]

கண்காட்சிகள் தொகு

ஜராக் கண்காட்சி பஞ்சாபின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும். இக்கண்காட்சி லூதியானா மாவட்டத்தில் உள்ள தெஹ்சில் பெயில் கிராமமான ஜார்கில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சி பகோரியா கண்காட்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது சீத்லா மாதாவின் நினைவாக செத் (மார்ச்-ஏப்ரல்) மாதத்தில் ஏற்பாடு செய்யப்படுகிறது. திருவிழா நாளில், சீத்லா மாதாவின் பக்தர்கள் குளத்தின் அருகே கூடி, பூமியின் ஒரு பகுதியை மேடாக உருவாக்குகிறார்கள். அம்மன் சன்னதியாக இந்த மேடு போற்றப்படுகிறது.[4]

ஜார்க் கண்காட்சியில் பிரார்த்தனைகள் மற்றும் பூசைகள் நடத்தப்படுகின்றன. இனிப்பு குல்குலா (வெல்லம் அணிச்சல்) திருவிழாவிற்கு ஒரு நாள் முன்னதாக தயாரிக்கப்பட்டு, திருவிழா நாளில் அம்மனுக்குப் பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. பின்னர் அம்மனுக்கு விருப்பமான கழுதைகளுக்கு இனிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்விற்காகக் கழுதைகள் பிரத்தியேகமாக அலங்கரிக்கப்படுகின்றன. குயவர்கள் கவர்ச்சிகரமான வண்ணமயமான போர்வைகளைப் போர்த்தியுள்ளனர். சிலர் கழுதையின் கழுத்தில் மணிகள் அல்லது சங்கு மணிகளைப் போடுவார்கள்.[4]

தற்காலிக அரங்கங்கள் அமைக்கப்பட்டு, கண்காட்சியில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.[4]

மற்ற பகுதிகளில் வழிபாடு தொகு

சீத்லா மாதா இந்தியா, பாக்கித்தான், நேபாளம் மற்றும் வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் வழிபடப்படுகிறார். இருப்பினும், வழிபாட்டின் தோற்றம் மற்றும் வடிவம் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் மாறுபடும்.

இந்து மதத்தில் சீத்லா மாதா மற்றும் சீதாலாவின் நாட்டுப்புற வடிவம் தொகு

சீத்லா மாதா இந்து மதத்தில் இணைக்கப்பட்டவர். இருப்பினும், இவரது பிறப்பு பஞ்சாபில் வித்தியாசமாகப் புனையப்பட்டு விளக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தில், இவர் சீத்தலா தேவி என்று அழைக்கப்படுகிறார் மற்றும் இவர் ஏழு சகோதரிகளில் ஒருவர் அல்ல.

ஜுவராசுரன், காய்ச்சல் அரக்கன், ஓலாதேவி, காலரா தெய்வம், கெந்து-தேபாதா, தோல் நோய்களின் கடவுள், ரக்தபதி, இரத்த நோய்த்தொற்றுகள் மற்றும் அறுபத்து நான்கு தொற்றுநோய்களின் தெய்வம் என சீத்லாவுடன் தொடர்புடைய தெய்வங்கள் உள்ளன. சீத்லா இளம் கன்னிப் பெண்ணாக, கழுதையின் மீது சவாரி செய்து, ஒரு சிறிய விளக்குமாறு (நுண்ணுயிரிகளைப் பரப்ப அல்லது தூசி அகற்ற) மற்றும் பருப்பு வகைகள் (தீநுண்மி) அல்லது குளிர்ந்த நீர் (குணப்படுத்தும் கருவி) நிரம்பிய ஒரு பானையைப் பிடித்தபடி, காட்டப்படுகிறாள்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Folk Religion Change and Continuity by H S Bhatti Rawat Publications ISBN 81-7033-608-2
  2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. Centre for Sikh Studies, University of California. Journal of Punjab Studies Fall 2004 Vol 11, No.2 H.S.Bhatti and D.M. Michon: Folk Practice in Punjab "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-02-23.
  4. 4.0 4.1 4.2 4.3 "Jarag Fair - Jarag Mela in Ludhiana, Jarag Fair Ludhiana Punjab".

வார்ப்புரு:Punjabi folk religion

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீத்லா_மாதா,_பஞ்சாப்&oldid=3664706" இலிருந்து மீள்விக்கப்பட்டது