சீரணி மிட்டாய்

சீரணி மிட்டாய் என்பது தமிழ்நாட்டின் தென்பகுதியான மதுரை மற்றும் மதுரையின் தென் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு வகை இனிப்பு வகை. காண்பதற்கு விரித்து வைக்கப்பட்ட கை அகலத்திற்கு உள்ள தட்டையான ஜிலேபி போன்று இருக்கும். அரிசி மாவு, உளுந்து, சுக்கும், வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து செய்யப்பட்ட ஒரு இனிப்பு வகை.[1] மதுரையின் தெற்கே விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, விருதுநகர், பாலவநத்தம், இருக்கண்குடி, சாத்தூர், கோவில்பட்டி, கமுதி திருச்சுழி போன்ற ஊர்களில் அதிகமாக விற்பனையாகும் சுவையுள்ள தின்பண்டமாகும். கல்குறிச்சி சீரணி மிட்டாய் இந்தியாவின் புவிசார் குறியீட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.[சான்று தேவை]

மதுரையில் ஓர் கடையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பட்டியில் செய்த சீரணி மிட்டாய்

மேற்கோள் தொகு

  1. "ஊர் ஸ்பெஷல் - பாலவநத்தம் சீரணி மிட்டாய்". WEDNESDAY, FEBRUARY 26, 2014. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரணி_மிட்டாய்&oldid=3930006" இலிருந்து மீள்விக்கப்பட்டது