சென்றாயம்பட்டி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

சென்றாயம்பட்டி (Senrayampatti)என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது நரிப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

சென்றாயம்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636906

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 450 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12.07°N 78.65°E [2] ஆகும்.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 101 குடும்பங்களும் 441[3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 227 ஆண்களும் 214 பெண்களும் அடங்குவர்.[4] இங்கு அரசின் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 33 மாணவர்கள் கற்கின்றார்கள்.

மேற்கோள் தொகு

  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. https://www.google.co.in/maps/@12.0524475,78.6501426,15.75z
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
  4. "Senrayampatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்றாயம்பட்டி&oldid=3610793" இலிருந்து மீள்விக்கப்பட்டது