செயிண்ட் தாமஸ் தேவாலயம், கோக்கமங்கலம்

கேரளத்தில் உள்ள தேவாலயம்

கொக்கமங்கலம் செயின்ட் தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம், (St. Thomas Syro-Malabar Catholic Church, Kokkamangalam) என்பது கேரளத்தின், ஆலப்புழை மாவட்டம், கொக்கமங்கலத்தில் உள்ள ஒரு கிறித்தவ தேவாலயமாகும். இது புனித தாமசால் நிறுவபட்ட ஏழு தேவாலயங்களில் நடுப்பகுதியில் உள்ளதாகும். இது சிரோ-மலபார் கத்தோலிக்க மறைமாவட்டத்தில் உள்ளது.

செயின்ட் தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம், கொக்கமங்கலம்
കോക്കമംഗലം പളളി
கொக்கமங்கலம் தேவாலயம்
செயின்ட் தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம், கொக்கமங்கலம் is located in கேரளம்
செயின்ட் தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம், கொக்கமங்கலம்
செயின்ட் தாமஸ் சிரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம், கொக்கமங்கலம்
கேரளத்தில் அமைவிடம்
9°40′58″N 76°22′31″E / 9.682732°N 76.3752°E / 9.682732; 76.3752
அமைவிடம்கேரளம்
நாடு India
வரலாறு
நிறுவனர்(கள்)புனித தாமஸ்
Architecture
கட்டடக் வகைகேரள பாரசீக கலவை
கட்டப்பட்ட வருடம்52 A.D (?)
நிருவாகம்
உயர் மறைமாவட்டம்எர்ணாகுளம் - அங்கமாலி
Districtஆலப்புழா
கொக்கமங்கலத்தில் திருத்தூதர் தோமாவால் அமைக்கப்பட்ட சிலுவை (அசல் சிலுவை பள்ளிப்புரத்தில் உள்ளது ; அதன் மாதிரி 2002 இல் அமைக்கப்பட்டது).

தென்னிந்திய மாநிலமான கேரளத்தில் எர்ணாகுளம்-அங்கமாலி உள்ளது. [1] புனித தாமசின் உருவப்படம் இங்கு வணங்கப்படுகிறது, இது 1897 ஆம் ஆண்டில் கார்மலைட் மடாலயம் மன்னனத்திலிருந்து ஒரு வெளிப்பாட்டின் படி கொண்டு வரப்பட்டது. இந்த உருவப்படம் சிறந்த கலை மதிப்புடைய அலங்கரிக்கப்பட்ட படகில் பொருத்தப்பட்டுள்ளது.

புனித தாமஸ் கொக்கமங்கலத்திற்குச் சென்று இங்கு ஒரு ஆண்டு நற்செய்திகளைப் பிரசங்கித்தார். கேரளத்தில் நடைமுறையில் உள்ள கிறிஸ்தவ நாட்டுப்புற-பாடலின் பண்டைய வடிவமான " ராம்பன் பட்டு " இல் உள்ள கதையின்படி 1600 பேர் இவர் மூலம் கிறிஸ்தவத்திற்கு மாறினர் . இவர் கொக்கமங்கலத்தில் ஒரு கிறிஸ்தவ சமூகத்தை உருவாக்கி, நம்பிக்கைக்குரியவர்களுக்கு ஒரு சிலுவையை அமைத்தார். இந்த சிலுவை பின்னர் நாசகாரர்களால் உடைக்கப்பட்டு, வேம்பநாடு ஏரிக்குள் எறியப்பட்டது, இதன்பிறகு இது பள்ளிப்புரம் வரை அடித்துச் செல்லப்பட்டு, அங்கு அது நிறுவப்பட்டது. [2]

இந்த தேவாலயத்தில் தனிச்சிறப்பான பலிபீடம் ஒன்று திருத்தூதர் புனித தாமசின் நினைவுச் சின்னம் அருகே உள்ளது. இந்த பரிசுத்த பலிபீடம் இங்குள்ள புனித தாமஸ் போப் இரண்டாம் ஜான் பால் அவர்களிடம் சிறப்பு அனுமதிபெற்று இத்தாலியின் ஓர்டோனாவிலிருந்து1999 நவம்பரில் கொண்டு வரப்பட்டாது. ரெலிக்கை வணங்குவதற்காக வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு நோவனா பிரார்த்தனை நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் வேலை தேடும் பக்தர்கள் இங்குள்ள திருத்தூதரின் பரிந்துரையை நாடுகிறார்கள்.[சான்று தேவை]  


குறிப்புகள் தொகு

  1. "In the footsteps of Saint Thomas".
  2. "Kerala tourism to tap state's Christian heritage - Times of India".

வெளி இணைப்புகள் தொகு