செல்லகணபதி

செல்லகணபதி (பிறப்பு: பிப்ரவரி 10 1941) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சிவகங்கை மாவட்டம், கண்டனூர் எனும் ஊரில் பிறந்த இவர் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “மணக்கும் பூக்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

சிறுவர் இலக்கிய எழுத்தாளரான இவர் எழுதிய தேடல் வேட்டை என்ற கவிதை தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி வழங்கும் 2015ஆண்டிற்கான பால சாகித்திய அகாதமி விருது வென்றுள்ளது.[1]

மேலும் காண்க தொகு

பால சாகித்திய அகாதமி விருதுகள்

மேற்கோள்கள் தொகு

  1. http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/bal%20sahitya%20samman_suchi.jsp பரணிடப்பட்டது 2015-06-30 at the வந்தவழி இயந்திரம்>

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்லகணபதி&oldid=3614119" இலிருந்து மீள்விக்கப்பட்டது