சேத்னா சின்கா

இந்திய ஆர்வலர், விவசாயி மற்றும் பொருளாதார நிபுணர்

சேத்னா காலா சின்கா (Chetna Gala Sinha) ஒரு இந்திய சமூக ஆர்வலர் ஆவார், கிராமப்புற இந்தியாவின் வறட்சி பாதித்த பகுதிகளில் தொழில் முனைவோர் திறன்கள், நிலத்திற்கான அணுகல் மற்றும் உற்பத்தி வழிமுறைகளை கற்பிப்பதன் மூலம் பெண்களை மேம்படுத்துவதற்காக பணியாற்றுகிறார்.[1] சேத்னா சின்காவும் ஆறு பெண்களும் 2018 சனவரி மாதம் சுவிட்சர்லாந்தின் தாவோசில் நடந்த உலக பொருளாதார மன்றத்தின் 48வது வருடாந்திர கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். சேத்னாவுக்கு நாரி சக்தி விருது விருது வழங்கப்பட்டது. இது பெண்களுக்கான இந்தியாவின் மிக உயர்ந்த விருதாகும். 1997ஆம் ஆண்டில், இவர் கிராமப்புற பெண்களுக்கான மற்றும் இந்தியாவின் முதல் வங்கியான மான்தேசி மகிளா சககரி என்ற வங்கியை நிறுவினார். மான்தேசி வங்கியில் 100,000 பேர் கணக்கு வைத்திருப்பவர்களாக இருந்தனர். மேலும், 2018ஆம் ஆண்டில் பெண் நுண் தொழில்முனைவோரை ஆதரிக்க $ 50 மில்லியனுக்கும் அதிகமான கடன்களை வழங்கியுள்ளனர். மான்தேசி அறக்கட்டளை வணிகப் பள்ளிகள், ஒரு சமூக வானொலி மற்றும் கிராமப்புற பெண்கள் நுண் தொழில்முனைவோருக்கான வர்த்தக வகுப்புகளை நடத்துகிறது. 2018இல் இது கிட்டத்தட்ட அரை மில்லியன் பெண்களை ஆதரித்தது.[2]

சேத்னா காலா சின்கா
உலக பொருளாதார மன்றத்தில் சேத்னா சின்கா, 2018
பிறப்பு1959
மும்பை
தேசியம்இந்தியா
கல்விமும்பை பல்கலைக்கழகம்
பணிமான்தேசி வங்கி & அறக்கடளையின் நிறுவனர்-தலைவர்.
அறியப்படுவதுசிறுநிதி வங்கி
பிள்ளைகள்3
வலைத்தளம்
http://manndeshifoundation.org/

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

மும்பையில் பிறந்த இவர் 1982இல் மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகவியலிலும் பொருளாதாரத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தொழில் தொகு

சின்கா, 1970 மற்றும் 1980களில் மும்பையில் அரசியல் செயல்பாட்டின் உச்சத்தில் வளர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போது இவர் ஜெயபிரகாஷ் நாராயணின் சோசலிச அரசியலால் ஈர்க்கப்பட்டார்.[3]

இந்திய ரிசர்வ் வங்கி 1996இல் சில ஊக்குவிக்கும் உறுப்பினர்கள் எழுத்தறிவு இல்லாதவர்கள் என்ற அடிப்படையில் இவரது விண்ணப்பத்தை நிராகரித்ததால், இவர் முதல் பின்னடைவைச் சந்தித்தார். பின்னர், மனச்சோர்வடைந்து கிராமத்திற்கு திரும்பினார். ஆனால் மற்ற கிராமவாசிகள் இவரை கல்வியறிவு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்தனர்.[3] ஐந்து மாதங்களில், சின்கா புதிய விண்ணப்பத்துடன் கிராமத்தில் இருந்து பெண்கள் வங்கிக்கு சென்றார்.

இவர் கிராமப்புறங்களில் பெண்களுக்கு கடன் வழங்கும் சிறுநிதி வங்கியான மான்தேசி மகிளா சககரி வங்கியின் நிறுவனரும் தலைவரும் ஆவார். இவர் மான்தேசி அறக்கட்டளையின் நிறுவனர் -தலைவர் ஆவார்.[4] இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து கிராமப்புறப் பெண்களுக்கு கூட்டுறவு உரிமம் பெற்ற முதல் வங்கி மான்தேசி மகிளா சககரி வங்கி ஆகும். வங்கி நிறுவப்பட்டதிலிருந்து இரண்டு தசாப்தங்களில் (1997 இல்) அதன் 1,335 உறுப்பினர்களிடமிருந்து ₹708,000 மூலதனம் திரட்டப்பட்டு, அது 310,000க்கும் அதிகமான பெண்களை (அவர்களில் 84,000 பேர் கடன் வாங்கியவர்கள்) அடைந்துள்ளது. வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவதற்கான நிதி ஆதரவு மற்றும் உணர்ச்சித் தூண்டுதலை அவர்களுக்கு வழங்குகிறது.[3]

மான் தேசி அறக்கட்டளையானது நிதி கல்வியறிவு வகுப்புகளையும் நடத்துகிறது, அங்கு பெண்களுக்கு ஏகபோகம் போன்ற விளையாட்டுகளை உள்ளடக்கிய தொகுதிகள் மூலம் சேமிப்பு, முதலீடு, காப்பீடு மற்றும் கடன்களை கையாள்வது போன்றவை கற்பிக்கப்படுகின்றன. அறக்கட்டளையின் கூற்றுப்படி, பள்ளியில் வணிக மேம்பாட்டு வகுப்புகள் எடுத்த பிறகு கிராமப்புற பெண்களின் சராசரி ஆண்டு வருமானத்தில் ₹ 13,200 அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

உலக பொருளாதார மன்றம் தொகு

சேத்னா சின்காவும் மேலும் ஆறு பெண்களும் 2018 சனவரி 23-26 அன்று சுவிட்சர்லாந்தின் தாவோசில் நடந்த உலக பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் கலந்து கொண்டனர்.[5]

விருதுகளும் அங்கீகாரமும் தொகு

  • புனே, தொழில்முனைவோர் சர்வதேச அமைப்பு 29 சூலை 2010 அன்று தொழில்முனைவோர் மேம்பாட்டு விருது வழங்கியது
  • 11 செப்டம்பர் 2009 அன்று காட்ஃப்ரே பிலிப்ஸால் முதல் காட்ஃப்ரே பிலிப்ஸ் தைரியம் அமோதினி விருதைப் பெற்றார்.
  • 7 மார்ச் 2009 அன்று சதாராவின் சைக்லோ டிரான்ஸ்மிஷன் நிறுவனத்திடமிருந்து "இராணி லட்சுமிபாய் புரஸ்கார்" பெற்றார். பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய பெண்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
  • கிராமிய தொழில்முனைவோருக்கான ஜான்கிதேவி பஜாஜ் புரஸ்கார் விருது 2005இல் வழங்கப்பட்டது.[6]
  • சமூக தாக்கத்துடன் தொழில்முனைவோருக்கான போர்ப்ஸ் இந்தியா தலைமை விருது 2017. [7]

சேத்னா சின்காவுக்கு நாரி சக்தி விருது விருது வழங்கப்பட்டுள்ளது. இது பெண்களின் அதிகாரமளிக்கும் துறையில் பணியாற்றும் பெண்களுக்கான இந்தியாவின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதாகும்.[2]

சொந்த வாழ்க்கை தொகு

இவருக்கு திருமணமாகி மூன்று மகன்கள் உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Chetna Gala Sinha—innovative activist, and a visionary banker". http://www.dnaindia.com/lifestyle/report-chetna-gala-sinha-innovative-activist-and-a-visionary-banker-1983628. 
  2. 2.0 2.1 "Chetna Sinha". World Economic Forum (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 April 2020.
  3. 3.0 3.1 3.2 "Chetna Gala Sinha: The silent crusader | Forbes India". Forbes India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 December 2017.
  4. Shanoor Seervai (3 March 2014). "Bank Built for Women Blooms in India" (in ஆங்கிலம்). THE WALL STREET JOURNAL. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
  5. "world-economic-forum-announces-co-chairs-of-its-48th-annual-meeting". Archived from the original on 27 March 2018. பார்க்கப்பட்ட நாள் 29 June 2019.
  6. "Chetna Sinha receives Jankidevi Bajaj award" இம் மூலத்தில் இருந்து 21 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161221090330/http://news.webindia123.com/news/new/archives/ar_showdetails.asp?id=601100862&cat=India&n_date=2006. 
  7. "Chetna Gala Sinha: The silent crusader | Forbes India". Forbes India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 August 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்னா_சின்கா&oldid=3357876" இலிருந்து மீள்விக்கப்பட்டது