சேனை முதலியார்

திருமாளின் இராணுவத் தளபதி

விசுவக்சேனர் (Vishvaksena) என்பவர் இந்து தெய்வமான திருமாலின் இராணுவத் தளபதியாவார்.[2] இவர் தமிழில் சேனை முதலியார் என்று அழைக்கப்படுகிறார். எந்த ஒரு வைணவ சடங்குகள் நடக்கும் முன் சேனை முதலியார் வைணவர்களால் வணங்கப்படுகிறார். முக்கியமான பாஞ்சராத்திரம், வைகானசம் ஆகம கோயில்களில் இவர் இருப்பார். வைணவ கோவில் திருவிழாக்களில் நடக்கும் முன் வணங்கப்படுகிறார்.[3]

சேனை முதலியார்
சேனை முதலியார் துவாரபாலகர் சித்தரிக்கப்பட்டுள்ளார், ஸ்ரீரங்கம்
மற்ற பெயர்கள்விஷ்வக்சேனர்
வாழ்க்கைத்
துணை
சூத்ராவத்தி[1]

சேனை முதலியாரின் தோற்றம் தொகு

விஷ்வக்ஸேனரைப் பற்றி பஞ்சராத்திர ஆகமத்தில் உள்ள லட்சுமி தந்திரம் கூறுகிறது சேனை முதலியார் நான்கு கைகளுடன் பாஞ்சசன்யம், தாமரையை பிடித்துக் கொண்டு இருப்பார்[4]. மற்றொரு இருக் கைகளில், இவர் ஒரு வாள், ஒரு தடியை ஏந்திக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. மஞ்சளாடை அணிந்து இருப்பார் மற்றும் கண்கள் பளபளப்பாக இருக்கும், தாடி மற்றும் புருவம், நான்கு பற்கள்.[5] சேனை முதலியார் திருமாலின் அனைத்து ஆயுதங்கள் ஏந்தி கொண்டு இருப்பார், ஶ்ரீவஸ்தா போன்ற திருமாலின் சின்னங்களும் உட்படும்.[6] திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சேனை முதலியார் நான்கு கைகளுடன் மேல் இரண்டு கைகளில் சுதர்சன சக்கரமும் பாஞ்சசன்யமும் ஏந்தி கொண்டு உள்ளார், கீழ் இரண்டு கைகளில் கதையை ஏந்தி கொண்டு அவ்கானா ஹஸ்தத்தில் காட்சியளிக்கிறார்.

புராணம் தொகு

 
விஷ்வக்சேனரை வென்ற கண்காலமூர்த்தி அவதாரம் எடுத்த சிவன்

சேனை முதலியார் வர்ணனின் மகனாவார். சேனை முதலியார் திருமாலின் படைகளின் தளபதி பட்டத்தை பெறுவதற்காக திருப்பதி ஏழுமலையான் இடம் வேண்டினார் என்று ஒரு புராணம் கூறுகிறது.[7]

கூர்மம் புராணத்தின் படி, சிவன் பிட்சாடனர் வடிவத்தில்வைகுந்தத்திற்கு வருகை தந்தார், வைகுந்த வாயில் காவலரான சேனை முதலியார், சிவனை அடையாளம் காணாமல் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை பிட்சாடனர் ரூபத்தில் இருந்த சிவன் தனது பயங்கரமான வடிவத்தை எடுத்து விஷ்வக்ஸேனருடன் போர் புரிந்தார். இருப்பினும், காலவேகத்தை விஷ்வக்சேனன் தோற்கடித்தான். சேனை முதலியார் பைரவரை நோக்கிச் சென்றதால், பைரவரே தனது திருசூலத்தை எடுத்து விஷ்வக்சேனரைக் கொன்று அவரது சடலத்தை அதன் மீது ஏற்றினார். பைரவரின் இந்த வடிவம் கண்கலமூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.[8] [9]

மேற்கோள்கள் தொகு

  1. Sri Vishnu Sahasranama: With the Bhashya of Sri Parasara Bhattar : With Translation in English. Sri Visishtadvaita Pracharini Sabha. 1983. https://www.google.co.in/books/edition/Sri_Vishnu_Sahasranama/ge5ZAAAAIAAJ?hl=en&gbpv=1&bsq=vishvaksena+commander&dq=vishvaksena+commander&printsec=frontcover. 
  2. www.wisdomlib.org (2015-08-27). "Vishvaksena, Viṣvaksenā, Visvaksena, Viṣvaksena, Vishvac-sena, Vishvakshena: 17 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
  3. Pattanaik, Devdutt (2015-01-27) (in en). 99 Thoughts on Ganesha. Jaico Publishing House. பக். 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8495-152-3. https://books.google.com/books?id=Wh22qvzQuowC&dq=vishvaksena+doorkeeper&pg=RA1-PA67-IA4. 
  4. Gupta pp. 246
  5. Gupta pp. 263
  6. "Deities - Lord Vishwaksena". SRI VENKATESWARA TEMPLE(SVT) (in ஆஸ்திரேலிய ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-07.
  7. Krishna, Nanditha (2000) (in en). Balaji-Venkateshwara, Lord of Tirumala-Tirupati: An Introduction. Vakils, Feffer, and Simons. பக். 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-87111-46-7. https://books.google.com/books?id=KnXXAAAAMAAJ&q=tirupati+vishvaksena. 
  8. Stella Kramrisch (1992). The Presence of Śiva. Princeton University Press. பக். 293–4, 297. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-691-01930-7. 
  9. Cornelia Dimmitt. Classical Hindu Mythology: A Reader in the Sanskrit Puranas. Temple University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87722-122-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேனை_முதலியார்&oldid=3865608" இலிருந்து மீள்விக்கப்பட்டது