சேரமான் கோக்கோதை மார்பன்

(சேரமான் கோகோதை மார்பன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சேரமான் கோக்கோதை மார்பன் என்பவன் சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். பொய்கையார் என்னும் சங்ககாலப் புலவர் இவனைப் பாடியுள்ளார்.[1] இவனது ஊர் தொண்டி. எனவே, இவனைத் தொண்டி அரசன் என ஒருபாடலில் குறிப்பிடுகிறார். இவனை நாடிச் சென்றவர்கள் பிறரை நாடாத அளவுக்குக் கொடை நல்கும் பண்புடையவன் இவன்.[2] மற்றொரு பாடலில் பொறையன் என்பவன் மூவன் என்னும் பகைவனின் பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து தன் தொண்டிக் கோட்டைக் கதவில் பதித்துக்கொண்டான் என்கிறார். இதனால் இவன் கொங்குப் பகுதியாகிய பொறைநாட்டையும் ஆண்ட அரசன் எனத் தெரிகிறது. [3]

சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

இவனது ஊர் ஆறு கடலில் கலக்குமிடத்தில் வளம் மிக்கதாக விளங்கியது. [4]

பிட்டன் இவனது படைத்தலைவனாகவும், சிற்றரசனாகவும் இருந்துகொண்டு குதிரைமலை நாட்டை ஆண்டுவந்தான். [5]

அடிக்குறிப்பு தொகு

  1. புறம் 48, 49
  2. புறம் 48
  3. புறநானூறு 48, 49, நற்றிணை 18
  4. புறம் 49
  5. புறம் 172