சேளூர் சாணார்பாளையம்

சேளூர் சாணார்பாளையம் (Selur Sanarpalayam) என்ற ஊர் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் சேளூர் ஊராட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[1] இவ்வூர் பரமத்தி வேலூரிலிருந்து ஜேடப்பாளையம் செல்லும் வழியில் உள்ளது. பரமத்தி வேலூரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு சேளூர் சாணார்பாளையம் திருப்பதி முனியப்பசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.[2]

பெயரியல் தொகு

இந்த ஊரில் சாணார் (நாடார்) வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிப்பதால் இவ்வூர் இப்பெயர் பெற்றது.[சான்று தேவை]

பொருளாதாரம் தொகு

இவ்வூரில் மிகுதியாக கரும்பு பயிரிடப்படுகிறது. இவ்வூரின் அருகில் கரும்பு வெல்லச் சந்தை உள்ளது. இங்கு நீர்ப்பாசனம் ராஜ வாய்க்கால் வழியாக நடக்கிறது. இந்த ஊருக்கு 1 கி.மீ தொலைவின் காவிரி ஆறு பாய்கிறது.

அருகில் உள்ள இடங்கள் தொகு

மிகப் புகழ் பெற்ற புண்ணியத் தலமான கொடுமுடி இந்த ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரில் பெரும்பாலான மக்கள் விவசாயிகள். சிலர் அதைச் சார்ந்த தொழில்களையும் செய்கின்றனர். தேங்காய் தொழில் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. படித்த இளைஞர்கள் வெளியூரிலும் வெளிநாட்டிலும் வேலை செய்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை.
  2. [m.dinamalar.com/temple_detail.php?id=65392 "ப.வேலூர்: சேளூர் சாணார்பாளையம் திருப்பதி முனியப்பசாமி கோவிலில், விநோத அசைவ அன்னதான விழா நடந்தது. ப.வேலூர் ..."] 20 பெப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 20 ஏப்ரல் 2017. {{cite web}}: Check |url= value (help); Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேளூர்_சாணார்பாளையம்&oldid=2995815" இலிருந்து மீள்விக்கப்பட்டது