ஜெயா மேத்தா

ஜெய மேத்தா (Jaya Mehta) என்பவர் ஜெய வல்லபதாசு மேத்தா என்றும் அறியப்படுபவர் இந்தியாவின் குசராத்து மாநிலத்தினைச் சேர்ந்த குசராத்தி மொழிக் கவிஞர், விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் தான் படித்த தி. ந. தா. தா. மகளிர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார்.

ஜெயா மேத்தா
Jaya Mehta
பிறப்புஆகத்து 16, 1932 (1932-08-16) (அகவை 91)
கோலியாக் கிராமம், பவநகர் மாவட்டம், குசராத்து, இந்தியா)
தொழில்கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர்
மொழிகுசராத்தி
கல்விமுதுகலை, முனைவர்
கல்வி நிலையம்தி. ந. தா. தா. மகளிர் பல்கலைக்கழகம்
ஜெயா மேத்தா
கல்விப் பணி

வாழ்க்கை தொகு

ஜெய மேத்தா ஆகத்து 16, 1932 அன்று பாவ்நகருக்கு அருகிலுள்ள கோலியாக் கிராமத்தில் (தற்போது குசராத்தில் உள்ள பவநகர் மாவட்டம்) இலலிதாபென் மற்றும் வல்லபதாசு ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். பி. டி. சி. முடித்து பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றத் தொடங்கினார்.[1] இவர் தனது படிப்பை பின்னர் தொடர்ந்து 1954-ல் இளங்கலை மற்றும் 1963-ல் முதுகலை படிப்புகளை மும்பை திருமதி நதிபாய் தாமோதர் தாக்கர்சே மகளிர் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[2] இதன் பின்னர் இவர் முனைவர் பட்ட ஆராய்ச்சியினை இதே பல்கலைக்கழகத்தில் முடித்தார். குசராத்தி மொழிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் சுதா (சௌராஷ்டிரா அறக்கட்டளையின் வார இதழ்) மற்றும் விவேகன் (குசராத்தி துறையின் மூன்று மாத இதழ், சி. ந. தா. தா. மகளிர் பல்கலைக்கழகம்) ஆகியவற்றின் இணை ஆசிரியராக இருந்தார்.[3] இவர் பிரவாசி, பம்பாய் சமாச்சார் மற்றும் சம்கலின் நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.[2]

வெளியீடுகள் தொகு

ஜெயா மேத்தா பகுத்தறிவுக் கவிதைகளை எழுதுவதில் கைதேர்ந்தவர். இவரது கவிதைகள் உணர்ச்சி உலகில் அடைக்கப்படுவதற்குப் பதிலாக தர்க்கரீதியாகவும், சமூக விழிப்புணர்வைக் கொண்டதாகவும் உள்ளன.[4] வெனிஸ் பிளைண்ட் (1978), ஏக் திவாஸ் (1982), ஆகாஷ்மா தாராவ் சூப் சே (1985), ஹாஸ்பிடல் பீம்ஸ் (1987) ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள் ஆகும். ரேணு மற்றும் ஏக் ஆ கரே பண்டாடு (1989) ஆகியவை இவரது நாவல்கள் ஆகும்.[3][2] "வெனிஸ் ப்ளைண்ட் மற்றும் ஆகாஷ்மா தாராவ் சுப் சே "மனித இக்கட்டான நிலை பற்றிய அக்கறையைப் பிரதிபலிக்கின்றன.[4] மனோகத் (1980), காவ்யசங்கி (1985), அனே அனுசந்தன் (1986), புத்தக அலமாரி (1991) ஆகியவை இவரது விமர்சனப் படைப்புகள் ஆகும். கவி பிரி கவிதா (1976), வர்தா விஷ்வா (இணை திருத்தம், 1980), சுரேஷ் தலால்னா ஷ்ரேஷ்த் காவ்யோ (1985), அப்னா ஷ்ரேஷ்ட் நிபந்தோ (1991), ரகுபதி ராகவ் ராஜாராம் (2007) ஆகியவற்றையும் தொகுத்துள்ளார். குசராத்தி கவிதா அனே நாடகம் ஹாஸ்யவினோத், குசராத்தி ப்ரஷ்ஷ்டி காவ்யோ (1965), குசராத்தி லேகிகாஓ நவல்கதா-வர்தா சாஹித்யமா அலேகேலு ஸ்த்ரீனு சித்ரா ஆகியவை இவரது ஆராய்ச்சிப் படைப்புகளில் அடங்கும். விமந்தி சக்கர நாற்காலி இவரது பயணக் குறிப்பு ஆகும்.[3]

பல படைப்புகளை ஜெயா மேத்தா மொழிபெயர்த்துள்ளார். மாரா மித்ரோ (1969), ஆரத்தி பிரபு (1978), மண்ணு கரன் (1978), சர்ச்பெல் (1980), சானி (1981), ரவீந்திரநாத்: டிரான் வியாக்யானோ, சவுந்தர்யமிமான்சா (இணை மொழிபெயர்ப்பாளர்), சாம்போ அனே ஹிம்புஷ்பா, சமுத்ரயல்னி, ரீவென்யூ கர்ஜானா (அம்ரிதா ப்ரீதம் சுயசரிதை, 1983), தஸ்தவேஜ் (1985), சுவர்ண முத்ரா அனே... (1991). ராதா, குந்தி, திரௌபதி (2001), வியாஸ்முத்ரா ஆகியவை இவரது மொழிபெயர்ப்புகளாகும்.[3][2]எர்னஸ்ட் ஹெமிங்வேயின் தி ஓல்ட் மேன் அண்ட் தி சீயை குசராத்தியில் மொழிபெயர்த்தார்.

எஸ். எல். பைரப்பாவின் தாது நாவலை 1992ஆம் ஆண்டில் ஜெயா மேத்தா மொழிபெயர்த்தார்.[5]

விருதுகள் தொகு

ஜெயா மேத்தா தனது மொழிபெயர்ப்புகளுக்காக சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு பரிசினைப் பெற்றார்.[3]

மேலும் பார்க்கவும் தொகு

  • குஜராத்தி மொழி எழுத்தாளர்களின் பட்டியல்

மேற்கோள்கள் தொகு

  1. Susie J. Tharu; Ke Lalita (1991). Women Writing in India: The twentieth century. Feminist Press at CUNY. pp. 365–366. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55861-029-3.
  2. 2.0 2.1 2.2 2.3 Jani. "જયા મહેતા". https://sureshbjani.wordpress.com/2006/08/13/jaya_mehta/. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Brahmabhatt (2010). અર્વાચીન ગુજરાતી સાહિત્યનો ઈતિહાસ - આધુનિક અને અનુઆધુનિક યુગ. Parshwa Publication. pp. 141–142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5108-247-7.
  4. 4.0 4.1 Nalini Natarajan. Handbook of Twentieth-century Literatures of India.
  5. Rao, D. S. (2004). Five Decades: The National Academy of Letters, India : a Short History of Sahitya Akademi. New Delhi: Sahitya Akademi. p. 48. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-2060-7.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயா_மேத்தா&oldid=3670292" இலிருந்து மீள்விக்கப்பட்டது