டல்ஹவுசி பிரபு

ஜேம்ஸ் ஆண்ட்ரூ பி ரௌன்-ராம்சே என்ற இயற்பெயர் கொண்ட டல்ஹவுசி பிரபு (James Andrew Broun-Ramsay, 1st Marquess of Dalhousie: 22 ஏப்ரல் 1812–19 டிசம்பர் 1860), ராம்சே பிரபு எனவும் ஏர்ல் ஆப் டல்ஹவுசி எனவும் அழைக்கப்பட்ட ஒரு இசுக்காட்லாந்தியர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் காலனித்துவ நிர்வாகியாவார். டல்ஹவுசி 1848 இலிருந்து 1856 வரை இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநராகப் பணியாற்றினார். கிழக்கிந்தியக் கம்பெனியின் விதிகளுக்குப் புறம்பாக இந்தியாவில் நிர்வாகம் செய்து ஆங்கிலேய ஆட்சியை விரிவு செய்தவராவார். இவரது நிர்வாகத் திறமை, இவருக்குப் பின் இந்தியாவை ஆண்ட ஆளுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் அமைந்தது.[1]


டல்ஹவுசி பிரபு
இந்தியத் தலைமை ஆளுநர்
பதவியில்
1848–1856
அரசர் விக்டோரியா மகாராணி
முன்னவர் விஸ்கவுண்ட் ஹார்டிங் பிரபு
பின்வந்தவர் கானிங் பிரபு
வணிகக் குழுவின் தலைவர்
பதவியில்
5 பிப்ரவரி 1845 – 27 சனவரி 1846
அரசர் Victoria
பிரதமர் இராபர்ட் பீல்
முன்னவர் வில்லியம் கிளாட்ஸ்டோன்
பின்வந்தவர் கிளாரண்டைன் பிரபு
தனிநபர் தகவல்
பிறப்பு 22 April 1812 (1812-04-22)
டல்ஹவுசி கோட்டை, மிட்லொதைன்
இறப்பு 19 December 1860 (1860-12-20)
டல்ஹவுசி கோட்டை, மிட்லொதைன்
குடியுரிமை பிரித்தானியா மற்றும் அயர்லாந்து
தேசியம் ஸ்காட்லாந்து
வாழ்க்கை துணைவர்(கள்) Lady Susan Hay (d. 1853)
படித்த கல்வி நிறுவனங்கள் கிறிஸ்துவ சபை, ஆக்ஸ்போர்டு

அவகாசியிலிக் கொள்கை தொகு

இவர் அறிமுகப்படுத்திய அவகாசியிலிக் கொள்கையின் படி, ஆண் வாரிசு இன்றி இறந்த இந்திய இந்திய சுதேச மன்னர்களின் இராச்சியங்கள், கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சியில் இணைக்கப்ப்பட்டது. அவ்வாறு இணைக்கப்பட்ட இராச்சியங்களில் தஞ்சாவூர் மராத்திய அரசு ஒன்றாகும்.

இதனையும் காண்க தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. James Andrew Broun Ramsay, marquess and 10th earl of Dalhousie
"https://ta.wikipedia.org/w/index.php?title=டல்ஹவுசி_பிரபு&oldid=3658349" இருந்து மீள்விக்கப்பட்டது