டி. ஆர். வி. எஸ். ரமேஷ்
டி. ஆர். வி. எஸ். ரமேஷ் (T.R.V.S. Ramesh) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்.[1]
டி. ஆர். வி. எஸ். ரமேஷ் | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னவர் | அ. அருண்மொழித்தேவன் |
தொகுதி | கடலூர் |
தனிநபர் தகவல் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | உசா |
பிள்ளைகள் | காயத்திரி ஸ்ரீநிதி கண்மணி |
இருப்பிடம் | பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு, இந்தியா |
சமயம் | இந்து |
வாழ்க்கை வரலாறுதொகு
இவர் கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்த்தவர். இவருக்கு உசா என்ற மனைவியும், காயத்திரி, ஸ்ரீநிதி, கண்மணி என 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் பட்டப்படிப்பை படித்துள்ளார். இவர் முந்திரி ஏற்றுமதி மற்றும் இறங்குமதி தொழில் செய்து வருகிறார்.
அரசியல் வாழ்க்கைதொகு
இவர் தி.மு.க.வில் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளராகவும் பதவி வகிக்கின்றார். 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், கடலூர் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
கொலை வழக்கில்தொகு
திமுக மக்களவை உறுப்பினர் ரமேசுக்குச் சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றிய தொழிலாளி கோவிந்தராசு இறந்த வழக்கில் ரமேஷ் உள்பட ஆறு பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சந்தேக மரணமாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இவர்களில் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரமேசை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.[3]11 அக்டோபர் 2021 அன்று ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.[4]
சொத்துக்கள் முடக்கம்தொகு
இவர் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் பெற்ற கடனை உரிய தவணையில் திருப்பி செலுத்தாமையால், ரூபாய் 45 கோடி மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை 26 டிசம்பர் 2022 அன்று வங்கி கையகப்படுத்தியது.[5]
மேற்கோள்கள்தொகு
- ↑ "கடலூர்: திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் வெற்றி". தினத்தந்தி (மே 23, 2019)
- ↑ "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்". பிபிசி தமிழ் (மே 23, 2019)
- ↑ முந்திரி ஆலை தொழிலாளி மரணம்: கடலூர் திமுக எம்.பி ரமேஷ் மீது கொலை வழக்கு
- ↑ கடலூர் தி.மு.க., - எம்.பி., ரமேஷ்...சிறையில் அடைப்பு!
- ↑ கடனை திரும்ப செலுத்தவில்லை - கடலூர் எம்பி-யின் ரூ.45 கோடி சொத்தை வங்கி கையகப்படுத்தியது