தர்மவதி கருநாடக இசையின் 59ஆவது மேளகர்த்தா இராகமாகும். எப்பொழுதும் பாடக்கூடிய இராகம். அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு தாமவதி என்று பெயர்.[1][2]

இலக்கணம்

தொகு
 
தர்மவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி222 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம22 ரி2
  • "திசி" என்றழைக்கப்படும் 10ஆவது சக்கரத்தில் 5 ஆவது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

தொகு
  • பிரத்தியாகத கமக சஞ்சாரங்களும், தாட்டு சுரப்பிரயோகங்களும் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றன.
  • நிஷாதம் நன்கு தீர்க்கமாகவும், கமகமாகவும் பிடிக்கப்படுகின்றது.
  • 23வது மேளமாகிய கௌரிமனோகரியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
  • மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரிஷப, பஞ்சம மூர்ச்சனைகள் முறையே சக்ரவாகம் (16), சரசாங்கி (27) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.

உருப்படிகள்

தொகு

ஜன்ய இராகங்கள்

தொகு

தர்மவதியின் ஜன்ய இராகங்கள் கீழ் வருமாறு.

திரையிசைப் பாடல்கள்

தொகு

தர்மவதி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:

  • உனை தினம் எதிர்பார்த்தேன் :- காதலுடன்

மேற்கோள்கள்

தொகு
  1. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  2. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மவதி&oldid=4213769" இலிருந்து மீள்விக்கப்பட்டது