திருநகரி கல்யாண ரெங்கநாத சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

திருநகரி கல்யாண ரெங்கநாத சுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், திருநகரி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு கல்யாண ரெங்கநாத சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:சன்னதி தெரு, திருநகரி, சீர்காழி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சீர்காழி
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:கல்யாணரெங்கநாத சுவாமி
தாயார்:்தவல்லி தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:திருவேடுபறி 8-ம் நாள், திருமங்கையாழ்வார் அவதார உற்சவம், திருநாங்கூரில் 11 கருடசேவை
வரலாறு
கட்டிய நாள்:ஆறாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் கல்யாணரெங்கநாத சுவாமி, ்தவல்லி தாயார் சன்னதிகளும், ஏவரிவெஞ்சிலையான், யோகநரசிம்மர், ஆண்டாள், திருமங்கயாழ்வார், உடையவர், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம், கோயில் தேர், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் மூன்று கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] பங்குனி மாதம் திருவேடுபறி 8-ம் நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை, [[தை மாதம்]] திருமங்கையாழ்வார் அவதார உற்சவம், திருநாங்கூரில் 11 கருடசேவை திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் 9-ம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)