திருவக்கரை

தமிழ்நாட்டில் உள்ள கிராமம்

திருவக்கரை (Thiruvakkarai) இந்தியா, தமிழ்நாடு மாநிலத்தில், விழுப்புரம் மாவட்டத்தில், வானூர் வட்டத்திற்கு உட்பட்ட ஓர் கிராமமாகும். இதன் அருகில் சுற்றுலா தளமான ஆரோவில், திருவக்கரை தேசிய கல் மரப்பூங்கா மற்றும் புகழ்பெற்ற சந்திரமவுலீஸ்வரர் கோயில் போன்றவை உள்ளது.[1]

திருவக்கரை
கிராமம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்
ஆள்கூறுகள்: 12°01′09″N 79°38′17″E / 12.01917°N 79.63806°E / 12.01917; 79.63806
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்விழுப்புரம்
வட்டம் வானூர்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,220
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்604304
இணையதளம்viluppuram.nic.in

போக்குவரத்து தொகு

இக்கிராமமானது விழுப்புரத்திற்கும், புதுச்சேரிக்கும் இடையே திருக்கனூர் அருகில் புதுக்குப்பம் என்னும் ஊரிலிருந்து 4 கி.மீ தொலைவில் வடக்கு திலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து புதுச்சேரி 29 கி.மீ தொலைவிலும், விழுப்புரம் 26 கி.மீ தொலைவிலும், புதுச்சேரி மாநிலத்தின் எல்லையான திருக்கனூர் 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கட் தொகை தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி 3220 பேர் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் 1627, மற்றும் பெண்கள் 1593 ஆகும்.[2]

மேலும் பார்க்க தொகு

  1. ஆரோவில்
  2. திருவக்கரை தேசிய கல் மரப்பூங்கா
  3. சந்திரமவுலீஸ்வரர் கோயில்

மேற்கோள்கள் தொகு

  1. "சந்திரசேகரர் கோவில், திருவக்கரை". Archived from the original on 2018-06-15. பார்க்கப்பட்ட நாள் 2018-06-28.
  2. "About Tiruvaikkarai".
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவக்கரை&oldid=3558405" இலிருந்து மீள்விக்கப்பட்டது