திருவேடகம்

மதுரை மாவட்டத்திலுள்ள கிராமம்

திருவேடகம் சோழவந்தான் மற்றும் மதுரைக்கு இடையே உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இக்கிராமம் மதுரையிலிருந்து பதினெட்டு கிலோமீட்டர் தொலைவிலும் சோழவந்தானிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி வட்டத்தின் நிர்வாகப் பிரிவின் கீழ் உள்ளது.[1] வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள இங்கு அமைந்துள்ள ஏடகநாதேசுவரர் கோயில் பழங்காலத்திய சிவாலயங்களில் ஒன்றாகும்.[2] இங்கு தன்னாட்சி பெற்ற கலை மற்றும் அறியல் கல்லூரியாக விவேகானந்தர் கல்லூரி உள்ளது.

திருவேடகம்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்1,253
மொழி
 • அதிகாரப்பூர்வம்தமிழ்
நேர வலயம்இந்தியா (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு625221
தொலைபேசிக் குறியீடு(91)04543
வாகனப் பதிவுTN-59
அருகிலுள்ள நகரம்மதுரை
மக்களவை தொகுதிதிண்டுக்கல்
மாநில சட்டப் பேரவை தொகுதிசோழவந்தான்
விவேகானந்தர் கல்லூரி நுழைவாயில்

.

உசாத்துணைகள் தொகு

  1. "Vadipatti Block". Archived from the original on 2016-01-26. பார்க்கப்பட்ட நாள் 2015-02-25.
  2. http://temple.dinamalar.com/news_detail.php?id=2165
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவேடகம்&oldid=3558538" இலிருந்து மீள்விக்கப்பட்டது