தெற்கு கண்ணனூர்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியாவிலுள்ள ஓர் மாந்த வாழிடம்

தெற்கு கண்ணனூர், இந்தியா, தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் அமைந்த சமயபுரம் மாரியம்மன் கோயில் , ஆனந்தவள்ளி உடனுறை போஜீஸ்வரர் திருக்கோவில், உஜ்ஜையினி ஓம் காளியம்மன் திருக்கோவில் ஆகிய திருக்கோவில்கள் அமையப்பெற்றுள்ளன.

தெற்கு கண்ணனூர்
கிராமம்
தெற்கு கண்ணனூர் is located in தமிழ் நாடு
தெற்கு கண்ணனூர்
தெற்கு கண்ணனூர்
இந்தியா தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°54′47″N 78°44′29″E / 10.91306°N 78.74139°E / 10.91306; 78.74139
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
பரப்பளவு
 • மொத்தம்4.5 km2 (1.7 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்13,073
 • அடர்த்தி2,900/km2 (7,500/sq mi)
மொழி
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
இணையதளம்www.townpanchayat.in/s-kannanur

அமைவிடம் தொகு

திருச்சிராப்பள்ளி - சென்னை நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் தெற்கு கண்ணனூர் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

4.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மண்ணச்சநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இப்பேரூராட்சி எஸ்.கண்ணனூர் மேற்கு, எஸ்.கண்ணனூர் கிழக்கு என இரண்டு வருவாய் கிராமங்களில் 9 குக்கிராமங்களை உள்ளடக்கியதாகும்.[1]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3403 வீடுகளும், 13,073 மக்கள்தொகையும் கொண்டது.[2] [3]

கோயில்கள் தொகு

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_கண்ணனூர்&oldid=3353606" இலிருந்து மீள்விக்கப்பட்டது