தெல்லகுல ஜாலய்யா

இந்திய அரசியல்வாதி

தெல்லகுல ஜலய்யா (Tellakula Jalayya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். குண்டூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1955 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரை இவர் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] மேலும் குண்டூர் மாநகராட்சியின் முதல் தலைவராகவும் இவர் பணியாற்றினார்.[2] தெல்லகுல ஜாலய்யா மற்றும் நடிம்பல்லி நரசிம்ம ராவ் ஆகியோர் தமது நகராட்சி கழக தலைமைப் பொறுப்பில் இருந்த போது அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் சின்னமாக சின்னா கோபுரத்தை கட்டினார்கள். இக்கோபுரம் இன்றும் குண்டூர் நகரத்தின் ஓர் அடையாளமாக இருந்து வருகிறது.[3] 1971 ஆம் ஆண்டு போலிசெட்டி சோமசுந்தரத்தின் மகன்களுடன் தெல்லகுல ஜாலய்யா இணைந்து தெல்லகுல ஜாலய்யா போலிசெட்டி சோமசுந்தரம் கல்லூரியை நிறுவினர்.

மேற்கோள்கள் தொகு

  1. "ஆந்திரப் பிரதேச சட்டமன்ற தேர்தல், 1955". இந்திய தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. "தெல்லகுல ஜாலய்யா போலிசெட்டி சோமசுந்தரம் கல்லூரி". tjpscollege.ac.in.
  3. பணியாளர் நிருபர் (19 மார்ச் 2011). "புறக்கணிக்கப்பட்ட நிலையில் ஜின்னா கோபுரம்". இந்து பத்திரிக்கை. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/jinnah-tower-in-a-state-of-neglect/article1552693.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெல்லகுல_ஜாலய்யா&oldid=3805438" இலிருந்து மீள்விக்கப்பட்டது