தோவாளை தேசாசாரியாள் வீரவநங்கை அம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தோவாளை தேசாசாரியாள் வீரவநங்கை அம்மன் கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு தேச ஆச்சாரியாள் வீரவநங்கை அம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:அம்மன் கோவில் தெரு, அழகியபாண்டியபுரம், தோவாளை, தோவாளை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கன்னியாகுமரி
மக்களவைத் தொகுதி:கன்னியாகுமரி
கோயில் தகவல்
மூலவர்:தேச ஆச்சாரியாள் வீரநங்கை அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:காளியூட்டுத் திருவிழா, மாதப்பிறப்பு
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:முழுமையான கற்கோவில்
வரலாறு
கட்டிய நாள்:ஆயிரம் ஆண்டிற்கு மேல் பழமையான கோயில் [சான்று தேவை]
அமைத்தவர்:பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்டு, பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது

வரலாறு தொகு

இக்கோயில் ஓர் ஆயிரம் ஆண்டு என்ற முறையில் குறிப்பிட்டு கோயில் வரவு செலவு கணக்குகள் இருக்கிறது. ஆயிரம் வருடத்திற்கு முன்பான கணக்குகள் இருப்பதால் இக்கோவில் ஆயிரம் ஆண்டு முன்பான கோயில் என்பது தெரியவருகிறது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் வடக்கு நோக்கிய தேச ஆச்சாரியாள் வீரநங்கை அம்மன் சன்னதியும், கிழக்கு நோக்கிய விநாயகர், தெற்கு நோக்கிய பைரவர் மற்றும் கிழக்கு நோக்கிய பூதத்தான் ஆகிய உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் பரம்பரை காராமை அர்ச்சகர்களால் பூஜைகள் நடைபெற்றறு வருகிறது[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் காளியூட்டுத் திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் மாதப்பிறப்பு திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)