நங்கவள்ளி நாடு

(நங்கவள்ளி வரலாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நங்கவள்ளி வரலாறு தொகு

சேலம் பகுதி பாண்டியர், பல்லவர், சோழர், சேரர், விசயநகரப் பேரரசு, அதியமான், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டப் பகுதியாக இருந்துள்ளது. சோழமண்டலத்தில் ராசாச்சரிய சதுர்வேதி மங்கலம் என சேலம் அழைக்கப்பட்டது[சான்று தேவை]. சைலம் என்பதே சேலம் என மாறியது[சான்று தேவை]. இது மலைகள் சூழ்ந்தப் பகுதி என்பதாகும். சேலத்தின் முக்கிய மையப்பகுதியாகவும், காவிரி கரையோரம் அமைந்தப் பகுதியாகவும் நங்கவள்ளி உள்ளது.

ஒய்சாளர்கள் தொகு

கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் நங்கவள்ளி ஒய்சாளர்கள் ஆட்சிக்கு உட்பட்டப் பகுதியாக இருந்துள்ளது. ஒய்சாள மன்னன் இரண்டாம் வீரநரசிம்மன் (1220-1238) என்பவரின் மகன் வீரசோமேஸ்வரன் (1233- 1267) என்பவரால் நங்கவள்ளி சோமேஸ்வரர் திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது.

விஜயநகர பேரரசு தொகு

கி.பி.14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகர பேரரசின் கீழ் நங்கவள்ளி இருந்திருக்கிறது. நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர் கோவிலின் கட்டமைப்பைப் பார்க்கும்போது இது புலனாகிறது.

மதுரை நாயக்கர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நங்கவள்ளி_நாடு&oldid=3358935" இலிருந்து மீள்விக்கப்பட்டது