நரசிம்மகுப்தர்

நரசிம்மகுப்தர் (Narasimhagupta Baladitya) வட இந்தியாவின் குப்தப் பேரரசின் 12வது பேரரசர் ஆவார். புருகுப்தரின் மகனான நரசிம்மகுப்தர், புத்தகுப்தருக்குப் பின் குப்தப் பேரரசர் ஆனவர். இவருக்கு நரசிம்மகுப்த பாலாதித்தியன் எனும் பட்டப் பெயரும் உண்டு. நரசிம்மகுப்தர், மால்வா மன்னர் யசோதருமனுடன் இணைந்து, ஹெப்தலைட்டுகளின் வழி வந்த வெள்ளை ஹூணர்களை வட இந்தியாவின் சமவெளிகளிலிருந்து விரட்டி அடித்தார்.

நரசிம்மகுப்தர்
12வது குப்தப் பேரரசர்
ஆட்சிக்காலம்கி பி 495 _ ?
முன்னையவர்புத்தகுப்தர்
பின்னையவர்மூன்றாம் குமாரகுப்தர்
துணைவர்ஸ்ரீமித்திராதேவி
அரசமரபுகுப்த வம்சம்
தந்தைபுருகுப்தர்
மதம்இந்து சமயம்

நாளந்தாவில் கிடைக்கப் பெற்ற நரசிம்மகுப்தரின் களிமண் முத்திரைகள் வாயிலாக, நரசிம்மகுப்தரின் பட்டத்து ராணியின் பெயர் ஸ்ரீமித்ராதேவி எனவும், நரசிம்மகுப்தருக்குப் பின் மூன்றாம் குமாரகுப்தர் அரியணை ஏறியதாக அறியப்படுகிறது.

நரசிம்மகுப்தர், கங்கைச் சமவெளியை ஆக்கிரமித்த ஹூணர்களின் தலைவர் மிகிரகுலனை வென்றதாகவும் அறியமுடியகிறது.

மேற்கோள்கள் தொகு

  • Mookerji, Radhakumud (1995). The Gupta Empire. Delhi: Motilal Banarsidass. p. 119. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120804401. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
அரச பட்டங்கள்
முன்னர் குப்தப் பேரரசர்
495 – ?
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரசிம்மகுப்தர்&oldid=3827056" இலிருந்து மீள்விக்கப்பட்டது