நளினி மலானி

இந்தியக் கலைஞர்

நளினி மலானி (Nalini Malani) (பிறப்பு 1946) ஓர் சமகால இந்திய கலைஞர் ஆவார். இவர் முதன்மையாக ஓவியம் மற்றும் வரைவதில் பணிபுரிகிறார். இவரது படைப்புகள் ஆம்ஸ்டர்டமில் உள்ள இசுடெலிஜ்க் அருங்காட்சியகம், நியூயார்க்கில் உள்ள நவீன கலை அருங்காட்சியகம் உள்ளிட்ட பல அருங்காட்சியகங்களில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.[1]

நளினி மலானி

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும் தொகு

இவர், பிரித்தானிய இந்தியாவின் கராச்சியில் (இப்போது பாக்கித்தான் ) 1946இல் பிறந்தார். இந்தியப் பிரிவினையின்போது நளினி மலானியின் குடும்பம் இந்தியாவில் தஞ்சம் அடைந்தது. இவர்கள் பிரிவினைக்கு சற்று முன்பு கொல்கத்தாவுக்குச் சென்று பின்னர், 1958இல் மும்பைக்குச் சென்றனர். இவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி அகதிகளாக மாறிய அனுபவம் மலானியின் கலைப்படைப்புக்களில் ஆழமாக தெரிவிக்கிறது.[2]

நளினி மலானி மும்பையில் நுண்கலையைப் படித்தார்.[3] 1969இல் ஜம்சேத்ஜி ஜீஜிபாய் பள்ளியிலிருந்து நுண்கலையில் ஒரு சான்றிதழ் படிப்பை முடித்தார். இந்தக் காலகட்டத்தில், இவர் மும்பையின் பூலாபாய் நினைவு நிறுவனத்தில் ஒரு அரங்கம் வைத்திருந்தார், அங்கு கலைஞர்கள், இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், நாடக நபர்கள் போன்றோர் தனித்தனியாகவும் கூட்டாகவும் வேலை செய்தனர்.  இங்குதான் நாடகங்கள் போன்ற கலை நடைமுறையின் கூட்டு வடிவங்களைச் சேர்ந்த கலைஞர்களைச் சந்தித்து அவர்களுடன் ஒன்றிணைந்து பணி செய்யும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.[2] 1970 முதல் 1972 வரை பாரிசில் நுண்கலை பயில பிரெஞ்சு அரசிடம் இருந்து உதவித்தொகை பெற்றார். இவர் 1984 முதல் 1989 வரை இந்திய அரசாங்கத்தின் கலை உதவித் தொகையையும் பெற்றார்.

தொழில் தொகு

பட்டம் பெற்ற பிறகு, இவர் புகைப்படம் எடுத்தல் மற்றும் திரைப்படத்துடன் சில ஆண்டுகள் பணியாற்றினார்.[4] இந்த காலகட்டத்தில் இவர் ஆராய்ந்த கருப்பொருள்கள், இந்தியா அரசியல் மற்றும் சமூக ரீதியாக அனுபவித்து வரும் கொந்தளிப்பான நேரத்தையும், அதன் மக்கள்தொகையால் நகரும் உருவத்தின் ஆழமான கல்வியையும் கையாண்டது.[5] [4] தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பப் பகுதியில், நளினி மலானி பெரும்பாலும் தூரிகை மற்றும் நீர்வர்ணம் ஓவியங்களில் கவனம் செலுத்தினார். சமகால இந்தியாவின் யதார்த்தமான சமூக அடிப்படையிலான சித்தரிப்பை இவர் உருவாக்கினார்.[6] தலைகீழ் ஓவியம் (80-களின் பிற்பகுதியில் இவருக்கு பூபேன் காகரால் கற்பிக்கப்பட்டது) போன்ற நுட்பங்களை இவர் தொடர்ந்து ஆராய்ந்தார். அதை இவர் தனது எதிர்காலப் படைப்புகளில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தினார். இந்தியாவில் பெண் கலைஞர்கள் எதிர்கொள்ள வேண்டிய ஒப்புதல் இல்லாததால் அவர் ஏமாற்றமடைந்தார். ஒற்றுமை உணர்வை ஊக்குவிக்க ஒரு குழு நிகழ்ச்சிக்கு அவர்களை ஒன்றிணைக்க முடிவு செய்தார்.[7] 1985 ஆம் ஆண்டில், தில்லியில் இந்திய பெண் கலைஞர்களின் முதல் கண்காட்சியை இவர் தொகுத்தார். இது தொடர்ச்சியான பயணக் கண்காட்சிகளுக்கு வழிவகுத்தது. அவை கலைக்கூடத்தின் உயரடுக்கு சூழலுக்கு அப்பால் செல்லும் முயற்சியாக பொது இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.[7]

விருது தொகு

2013 ஆம் ஆண்டில், "மத மோதல், போர், பெண்களை ஒடுக்குதல், சுற்றுச்சூழல் அழிவு போன்ற தைரியமான சமகால மற்றும் உலகளாவிய கருப்பொருள்களில் தொடர்ந்து கவனம் செலுத்துவதற்காக கலை மற்றும் கலாச்சார ஃபுக்குவோக்கா ஆசியப் பண்பாட்டுப் பரிசு பெற்ற முதல் ஆசியப் பெண்மணி ஆனார்.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "Malani, Nalini | Biography". www.mutualart.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-06.
  2. 2.0 2.1 "Social engagement has always been part of my art'". The Indian Express (in Indian English). 2018-01-07. பார்க்கப்பட்ட நாள் 2019-04-06.
  3. Seervai, Shanoor. "A Retrospective of the Works of Nalini Malani Who Paints in Reverse". Wall Street Journal.
  4. 4.0 4.1 Cassandra Naji. "Indian artist Nalini Malani talks myth, metaphor and women – interview | Art Radar". Archived from the original on 2017-04-28. பார்க்கப்பட்ட நாள் 2017-04-29.
  5. Seervai, Shanoor (2014-10-10). "A Retrospective of the Works of Nalini Malani Who Paints in Reverse". WSJ. பார்க்கப்பட்ட நாள் 2017-04-29.
  6. McEvilley, Thomas (2009-06-04). "Nalini Malani: Postmodern Cassandra". The Brooklyn Rail (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-06.
  7. 7.0 7.1 dmovies.net (2015-05-13), Nalini Malani, பார்க்கப்பட்ட நாள் 2019-04-06
  8. Mallonee, Laura C. "Nalini Malani on Her Career and Bringing Her Documenta 13 Shadow Play". Observer.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நளினி_மலானி&oldid=3776560" இலிருந்து மீள்விக்கப்பட்டது