நிருபமா தத்

நிருபமா தத் (Nirupama Dutt)(பிறப்பு 1955) என்பவர் இந்தியக் கவிஞர், பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். [1] இவர் பஞ்சாபி மொழியில் கவிதைகளை எழுதுகிறார். இவற்றை ஆங்கிலத்திலும், மொழிபெயர்த்து வருகின்றார்.

பணி தொகு

நாற்பது வருட அனுபவமுள்ள மூத்த பத்திரிக்கையாளரான நிருபமா தத், முன்னணி இந்தியச் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். தலித் ஐகானான பந்த் சிங்கின் இவரது வாழ்க்கை வரலாறு, தி பாலாட் ஆஃப் பந்த் சிங்: எ கிஸ்ஸா ஆஃப் கரேஜ் பரவலாக வெளியிடப்பட்டது.[2] பஞ்சாபின் தலித் புரட்சிக் கவிஞரான லால் சிங் தில்லின் நினைவுக் குறிப்புகள் மற்றும் கவிதைகளைக் கவிஞரின் புரட்சி: தி நினைவுகள் மற்றும் லால் சிங் தில் கவிதைகள் என்ற தொகுப்பில் மொழிபெயர்த்துள்ளார். இவர் ஒரு கவிதைத் தொகுதியான இக் நதி சன்வாலி ஜாஹி (சற்றே இருண்ட நீரோட்டம்)யை வெளியிட்டுள்ளார். . இதற்காக இவருக்கு 2000-ல் பஞ்சாபி அகாதமி விருது வழங்கப்பட்டது. இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் உருது ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. 2004ஆம் ஆண்டில், இவர் அஜீத் கோர் உடன் இணைந்து சார்க் (தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்பு சங்கம்) கவிதைத் தொகுப்பை எங்கள் குரல்கள் என்ற தலைப்பில் தொகுத்தார்.

குல்ஜாரின் சிறு கவிதைகளை 'புளூட்டோ' என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். மேலும் 41 பஞ்சாபி கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 'ஸ்டோரிஸ் ஆஃப் தி சோயில்' எனும் பெயரில் வெளியிட்டுள்ளார். ஹாஃப் தி ஸ்கை[3] என்ற பாக்கித்தானிய பெண் எழுத்தாளர்களின் புனைகதை புத்தகத்தையும், 'சில்ட்ரன் ஆஃப் தி நைட்' என்ற பாக்கித்தானின் எதிர்ப்பு இலக்கியங்களில் ஒன்றையும் இவர் தொகுத்துள்ளார்.

பத்திரிகையாளராக தத், அடிப்படைவாதம் மற்றும் வகுப்புவாத வன்முறைக்கு எதிராக வலுவான மதச்சார்பின்மை நிலைப்பாட்டை எடுத்தார். பஞ்சாபில் பயங்கரவாதம், நவம்பர் 1984 சீக்கியர்களின் படுகொலை, பாபர் மசூதி இடிப்பு மற்றும் குஜராத் படுகொலைகள் வரையிலான பிரச்சினைகள் குறித்து இவர் எழுதியுள்ளார்.[4] நிருபமாவின் கவிதைகள் பன்னாட்டுக் கவிதை இணையத்தில் (Poetry Web International) இடம்பெற்றுள்ளன.

அம்ஷிரா என்ற பெண்கள் ஆய்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.[5] இவர் சண்டிகரில் வாழ்ந்து எழுதி வருகிறார்.

விருதுகள் தொகு

  • பஞ்சாப் லலித் கலா அகாதமி சன்மான் - 2019
  • இக் நாடி சன்வாலி ஜாஹிக்கான பஞ்சாபி அகாதமி விருது (சற்றே இருண்ட நீரோட்டம் ) - 2000

மேற்கோள்கள் தொகு

  1. "Nirupama Dutt". Archived from the original on 18 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 18 January 2021.
  2. Kulkarni, Dhaval (February 28, 2016). "Book Review: The Ballad of Bant Singh- A Qissa of Courage". DNA India. பார்க்கப்பட்ட நாள் January 18, 2021.
  3. Jolly, Asit (2005-02-10). "Pakistan women authors honoured". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  4. "Nirupama Dutt (poet) - India - Poetry International". www.poetryinternational.org. பார்க்கப்பட்ட நாள் 2019-11-09.
  5. "Love will keep us alive - Indian Express". archive.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிருபமா_தத்&oldid=3699404" இலிருந்து மீள்விக்கப்பட்டது