நீலன் திருச்செல்வம்

நீலன் திருச்செல்வம் (சனவரி 31, 1944 – சூலை 29, 1999) ஒரு மிதவாத, ஆற்றல் மிகுந்த, அரச சட்டமைப்பு அறிவுவாய்ந்த, சர்வதேச மதிப்பு பெற்ற ஒரு இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இவரே இலங்கையில் கொள்கை பற்றிய முன்னணி ஆய்வு நிறுவன அமைப்புகளின் (Centre for Ethnic Studies, Law Society Trust) அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர்.

நீலன் திருச்செல்வம்
Neelan Tiruchelvam
இலங்கை நாடாளுமன்றம்
for வட்டுக்கோட்டை
பதவியில்
1983–1983
முன்னையவர்தா. திருநாவுக்கரசு
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1994–1999
பின்னவர்மாவை சேனாதிராஜா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1944-01-31)31 சனவரி 1944
இறப்பு29 சூலை 1999(1999-07-29) (அகவை 55)
கொழும்பு, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிதமிழர் விடுதலைக் கூட்டணி
முன்னாள் கல்லூரிஇலங்கைப் பல்கலைக்கழகம்
ஆர்வார்டு சட்டப் பள்ளி
தொழில்வழக்கறிஞர், கல்விமான்

படுகொலை தொகு

நீலன் திருச்செல்வம் ஜூலை 29, 1999 அன்று தற்கொலைக் குண்டுதாரி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார் [1]. தற்கொலைத் தாக்குதல் மாதிரியை முன்வைத்தும் பிற பின்புலங்களை முன்வைத்தும் இக்கொலையை தமிழீழ விடுதலைப் புலிகளே செய்திருக்க முடியும் என்று பிபிசியும் பிற ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

பன்னாட்டுக் கண்டனங்கள் தொகு

நீலன் திருச்செல்வத்தின் கொலைக்கு பொது மக்களிடம் இருந்தும், மனித உரிமை அமைப்புகளில் இருந்தும், பல சர்வதேச அரசியல் தலைவர்களிடம் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன[2].

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://news.bbc.co.uk/2/hi/south_asia/406644.stm
  2. Amnesty International condemns killing of Neelan Thiruchelvam MP[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலன்_திருச்செல்வம்&oldid=3370387" இலிருந்து மீள்விக்கப்பட்டது