நேபாளத்தின் இராணி ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா ராஜ்ய லக்ஷ்மி தேவி ஷா (Aishwarya Rajya Laxmi Devi Shah நேபாளி: ऐश्वर्या राज्य लक्ष्मी देवी शाह) (7 நவம்பர் 1949 – 1 ஜூன் 2001) காத்மாண்டுவில் உள்ள லாசிம்பெட்டு தர்பாரில் கேந்த்ரா சம்செர் சங் பகதூர் ராணா மற்றும் சிறீ ராச்சிய லட்சுமி தேவி ஷா தம்பதிக்கு முதல் மகளாகப் பிறந்தவர். நேபாள ராணியாக 1972 இல் இருந்து 2001 ஆண்டு வரை இருந்தார். இவர் படா மகாராணி எனவும் அழைக்கப்பட்டார். இவர் ராஜா பிரேந்திராவின் மனைவியாவார். இவர்களுக்கு பட்டத்து இளவரசர் திபேந்திரா, இளவரசர் நிரஞ்சன் மற்றும் இளவரசி சுருதி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இராணி ஐஸ்வர்யா
1972ல் இராணி ஐஸ்வர்யா
நேபாளப் பட்டத்தரசி
Tenure31 சனவரி 1972 – 1 சூன் 2001
முடிசூட்டுதல்24 பெப்ரவரி 1975
பிறப்பு(1949-11-07)7 நவம்பர் 1949
லாசிம்பெட்டு, காட்மாண்டு, நேபாள இராச்சியம்
இறப்பு1 சூன் 2001(2001-06-01) (அகவை 51)
நாராயணன்ஹிட்டி அரண்மனை, கட்மாண்டு, நேபாள இராச்சியம்
துணைவர்பிரேந்திரா
(m. 1969 - 2001; their deaths)
குழந்தைகளின்
பெயர்கள்
திபெந்திரா
இளவரசி சுருதி
இளவரசர் நிரஞ்சன்
பெயர்கள்
Aishwarya Rajya Laxmi Devi Shah
மரபுராணா
தந்தைகேந்த்ரா சம்செர் சங் பகதூர் ராணா
தாய்சிறீ ராச்சிய லட்சுமி தேவி ஷா
மதம்இந்து சமயம்

இவர் பாரம்பரிய அழகுடைய பெண் என்று கொண்டாடப்பட்டார். இவரது உடை அலங்காரம் மற்றும் சிகை அலங்காரங்கள், இன்னும் நேபாள பெண்கள் மத்தியில் பிரபலம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

கல்வி தொகு

இந்தியாவில் உள்ள செயின்ட் ஹெலென்ஸ் கான்வென்ட் ஆப் குரஸூங் இல் பள்ளி படிப்பை முடித்தார். 1963 இல் கண்டி ஐஸ்வரி ராஜ்ய லட்சுமி மேல் நிலை பள்ளியில் எஸ் எல் சி தேர்வுபெற்றார். இவர் 1967 இல் பத்மகன்யா கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

குடும்பம் தொகு

ராணி ஐஸ்வர்யா, நேபாளத்தை 104 ஆண்டுகள் ஆண்ட ராணா வம்சத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கேந்திரா சம்செர் சங் பகதூர் ராணா (1921–1982) மற்றும் தாயார் ஸ்ரீ ராச்சிய லட்சுமி தேவி ஷா (1926–2005) ஆவர். சூரஜ் ஷும்ஷெர் ஜுங் பகதூர் ராணா மற்றும் உதயா ஷும்ஷெர் ஜுங் பகதூர் ராணா ஆகியோர் இவரது தம்பிகள். ராணி கோமல் ராஜ்ய லட்சுமி தேவி ஷா மற்றும் இளவரசி பிரெக்சியா ராஜ்ய லட்சுமி தேவி ஷா ஆகியோர் இவரது தங்கைகள். ராணி ஐஸ்வர்யாவின் இறப்புக்கு பிறகு இவரது தங்கை பட்டத்தரசி ஆனார். இவர்களது குடும்பம் 1950- களில் நேபாளத்தை திறம்பட ஆண்டது. 1969 அரசர் பிரேந்திராவை மணந்தார்.

 
ராணி ஐஸ்வர்யா 1970

ராணி ஐஸ்வர்யாவின் இளைய தங்கை பிரெக்சியாவும் ஷா ராஜவம்ஷத்தின் இளவரசர் தீரேந்திராவை மணந்தார். தீரேந்திரா, ராஜா பீரேந்திராவின் தம்பி ஆவார். தீரேந்திரா அரண்மனையில் நடந்த ஒரு கலவரத்தில் இறந்தார். பிரெக்சியாவும் தீரேந்திராவும் 1980இல் விவகாரத்து பெற்றனர். 2001 இல் நடந்த ஒரு விமான விபத்தில் பிரெக்சியா இறந்தார். 

நேபாளத்தின் ராணி தொகு

1972 இல் ராஜா மகேந்திரா இறந்த பிறகு, பிரேந்திரா ராஜா ஆனார்; ஐஸ்வர்யா பட்டத்தரசி ஆனார்.

ராணி ஐஸ்வர்யா மிகவும் ஆற்றல் உடையவராகவும், வெளிப்படையாக பேசுகின்ற புத்திசாலியாகவும் இருந்தார். அவர் பல்வேறு சமூக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். அவரது கணவருக்கு சிரமங்கள் வரும் பொழுதுயெல்லாம் ஆதரவாக இருந்தார். அவர் ஒரு தொலை நோக்குடைய பெண்ணாவார். நாட்டுமக்களுக்குத் தேவையானதை புரிந்து கொள்ள கூடியவர். 1990 இல் நேபாளத்தில் ஜனநாயகம் இறுதியாக வந்தது.

நாட்டு மக்கள் ஐஸ்வர்யாவை கணவரைக் கட்டுப்படுத்த கூடிய பெண் என்று நினைத்தனர். காலம் செல்லச்செல்ல அவர் மேல் இருந்த எண்ணம் மக்களுக்கு மாறியது.[1]

இலக்கியப் படைப்புகள் தொகு

அவர் இலக்கிய ஆர்வத்தால் சாந்தனி ஷா என்ற புனை பெயரில் எழுதினார். அவரது கவிதைகள் 'அப்னை ஆகாஷ் அப்னை பரிபேஷ்' என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்பட்டன. இவர் ஒரு பிரபலமான பாடல் இசையமைப்பாளர். இவரது பாடல்கள் அடிக்கடி நேபாள வானொலி மற்றும் நேபாள தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டன. 

மரணம் தொகு

நேபாள அரசுப் படுகொலைகள் 1 சூன் 2001 அன்று காட்மாண்டு நகரத்தில் உள்ள நாராயணன்ஹிட்டி அரண்மனையில் மன்னர் பிரேந்திரா தலைமையில் அரச குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மன்னர் பிரேந்திரா, ராணி ஐஸ்வரியா மற்றும் ஏழு அரச குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இதில் ராணி ஐஸ்வர்யாவின் முகம் அதிகமாக காயமடைந்திருந்தது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Aishwarya: Nepal's forceful queen". 5 June 2001. பார்க்கப்பட்ட நாள் 21 April 2018 – via news.bbc.co.uk.
  2. Amy Willesee & Mark Whittaker (2004). Love & Death in Kathmandu A Strange Tale of Royal Murder, 1st U.S. ed. New York : St. Martin's Press, 2004. ISBN 1-84413-558-6 / 1-84413-558-6

வெளியிணைப்புக்கள் தொகு