நேபாள-பிரித்தானிய உடன்படிக்கை, 1923

நேபாள-பிரித்தானிய உடன்படிக்கை (Nepal–Britain Treaty), 21 டிசம்பர் 1923 அன்று நேபாளத்தின் சிங்க அரண்மனையில் மேற்கொள்ளப்பட்டது.[2] இந்த உடன்படிக்கை மூலம் நேபாளம் சுதந்திரமான இறையாண்மை மிக்க நாடு என்ற தகுதியை பிரித்தானியர்களால் வழங்கப்பட்டது.[3] பின்னர் இந்திய விடுதலைக்குக்ப் பின்னர், 31 சூலை 1950 அன்று மேற்கொள்ளப்பட்ட 1950 இந்தியா-நேபாள அமைதி மற்றும் நட்பு உடன்படிக்கையால் 1923-ஆம் ஆண்டு ஒப்பந்தம் நீக்கப்பட்டது.

நேபாள-பிரித்தானிய உடன்படிக்கை, 1923
கையெழுத்திட்டது21 டிசம்பர் 1923
இடம்சிங்க அரண்மனை, காட்மாண்டு, நேபாளம்
நடைமுறைக்கு வந்தது21 டிசம்பர் 1923
நிலைபிரித்தானியர்களால் நேபாளம் சுதந்திரமான இறையாண்மை மிக்க நாடு என்ற தகுதி வழங்கப்பட்டது.
முடிவுக்காலம்31 சூலை 1950[1]
கையெழுத்திட்டோர் Nepal
 பிரித்தானியா
மொழிகள்நேபாளி, ஆங்கிலம்

உடன்படிக்கையின் பின்விளைவுகள் தொகு

இந்த உடன்படிக்கையால் நேபாளம் சுதந்திரமான இறையாண்மை மிக்க நாடு என்ற தகுதி பெற்றது. உடன்படிக்கையை உலக நாடுகள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டது.[4] இதனால் சர்வதேச நிலைகளில் நேபாளத்தின் கருத்து மதிக்கப்பட்டது. மேலும் நேபாளத்தை மறைமுகமாக ஆண்ட ராணா வம்சத்தினர் கை ஓங்கியது.[5][6]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1950 இந்தியா-நேபாள அமைதி மற்றும் நட்பு உடன்படிக்கையால், 1923 ஒப்பந்தம் நீக்கப்பட்டது.
  2. Landon, P. (1976). Nepal. Kathmandu: Ratna Pustak Bhandar. பக். 151. 
  3. Hussain, Assad (1970). British India's relation with the Kingdom of Nepal. London: George Allen and Unwin Ltd.. பக். 208. 
  4. Majumdar, K.. Political Relations between India and Nepal. பக். 234. 
  5. Hussain, Assad (1970). British India's relation with the Kingdom of Nepal. London: George Allen and Unwin Ltd.. 
  6. Acharya, Baburam (2022 B.S.). Nepal ko Sanxipta Britanta.