பகுப்பு:கணிதப் புதிர்கள்


ஜித், சுஜீ, கபில், ராம் ஆகிய நால்வரும் இரவு நேரத்தில் ஆற்றின் மேலுள்ள மரத்தினால் ஆன பாலத்தின்மீது கடக்க வேண்டியுள்ளது. அவர்களிடம் ஒரு தீப் பந்தம் இருக்கிறது அது 17 நிமிடங்களில் அணைந்துவிடும். தீப்பந்தம் அணைவத ற்கு முன்பே அவர்கள் கடக்க வேண்டும். தீப்பந்தம் இல்லாமல் பாலத்தை கடக்க முடியாது.

ஆனால், அவர்கள் பாலத்தைக்கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் ஆளுக்காள் வேறுபட்டது!

பாலத்தைக்கடக்க ஜித் 1 நிமிடத்தை யும், சுஜீ 2 நிமிடத்தையும், கபில் 5 நிமிடத்தையும் ராம் 10 நிமிடத்தையு ம் எடுத்துக்கொள்வார்கள்.

பாலத்தின்மீது ஒரு தடவையில் இருவர் மட்டு மே கடக்கமுடியும். அல்லது பாலம் உடைந்து விடும். வேகமாக கடக்கக்கூடியவர் எவராயினும் அவருடன் கடக்கும் நபர் மெதுவாக கடப்பவ ராக இருந்தால் மெதுவான நபருடனேயே கட ந்து செல்ல வேண் டும்.எவ்வாறு அவர்கள் ஆற்றை பாலத்தினூடாக கடப்பார்கள்?

"கணிதப் புதிர்கள்" பகுப்பிலுள்ள கட்டுரைகள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.