பசீர் பாக் அரண்மனை

பசீர் பாக் அரண்மனை (Basheer Bagh Palace) என்பது இந்தியாவின் தெலங்காணாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஒரு அரண்மனையாகும். இது பைகா பிரபு மற்றும் ஐதராபாத் மாநிலத்தின் பிரதம மந்திரி சர் அஸ்மான் ஜாவால் கட்டப்பட்டது (1887-1894).

பசீர் பாக் அரண்மனை
Map
பொதுவான தகவல்கள்
வகைமேன்மை மிகு அரண்மனை
இடம்ஐதராபாத், தெலங்காணா, இந்தியா
நிறைவுற்றதுcirca 1880
பசீர் பாக் அரண்மனையின் உட்புறம், 1880 ஆம் ஆண்டில் லாலா தீன் தயாள் என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படம்

வரலாறு தொகு

இது ஒரு காலத்தில் சிறந்த கட்டிடக்கலை மற்றும் அற்புதமான உட்பகுதியைக் கொண்ட அரண்மனையாக இருந்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்த அரண்மனை மாநில அரசால் அகற்றப்பட்டது. ஆனால் இப்பகுதி இன்னும் பசீர் பாக் அழைக்கப்படுகிறது. [1]

இந்துஸ்தானி இசையில் மேதையான படே குலாம் அலி கான் விருந்தினராகத் தங்கியிருந்து இசைத்த பெருமையை இந்த இடம் கொண்டுள்ளது. அவர் தனது வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளில் இங்கு தங்கியிருந்தார், நவாப் ஜாஹிர் யர் ஜங் ஆதரித்தார். அவர் ஏப்ரல் 25, 1968 அன்று இந்த அரண்மனையில் இறந்தார். [2]

மேற்கோள்கள் தொகு

  1. "Bashir-bagh Palace, Hyderabad". பிரித்தானிய நூலகம். Archived from the original on 22 March 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-03-15.
  2. "Archived copy". Archived from the original on 5 July 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-07-12.{{cite web}}: CS1 maint: archived copy as title (link) An ustad's legacy
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசீர்_பாக்_அரண்மனை&oldid=3098652" இலிருந்து மீள்விக்கப்பட்டது