பதார் பள்ளிவாசல்

இந்தியப் பள்ளிவாசல்

பதார் பள்ளிவாசல் (Pathar Mosque) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்திலுள்ள பழைய நகரமான சிறீநகரில் அமைந்துள்ளது. உள்ளூரில் இதை நேவ்மசீத் என்று அழைக்கிறார்கள்.இப்பள்ளிவாசல் முகலாயர் காலத்தில் கற்களால் கட்டப்பட்டுள்ளது. சீலம் ஆற்றின் இடது கரையில் காங்கா-இ-மௌலா சன்னதிக்கு எதிரே[1] அமைந்துள்ள இப்பதார் பள்ளிவாசலை பேரரசர் சகாங்கீரின் மனைவியான முகலாய பேரரசி நூர் சகான் 1623 ஆம் ஆண்டில் கட்டினார்.[2]

பதார்பள்ளிவாசல்
Pathar Mosque
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்இந்தியா சிறிநகர், இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்34°05′31″N 74°48′21″E / 34.09194°N 74.80583°E / 34.09194; 74.80583
சமயம்இசுலாம்
மண்டலம்காஷ்மீர் பள்ளத்தாக்கு
மாநிலம்சம்மு காசுமீர்
மாவட்டம்சிறீநகர்
செயற்பாட்டு நிலைஇயங்குகிறது

காசுமீர் பள்ளத்தாக்கிலுள்ள மற்ற பள்ளிவாசல்களிலிருந்து வேறுபட்ட சில தனித்துவமான அம்சங்கள் பதார் பள்ளிவாசலில் உள்ளன. மற்ற பள்ளிவாசல்களைப் போல, இதற்கு பாரம்பரிய பிரமிடு கூரை இல்லை.மேலும் இங்கு ஒன்பது அலங்கார வளைவுகள் உள்ளன. மையமான வளைவு மற்ற வளைவுகளைவிட பெரியதாகும்.[3][4] பள்ளிவாசல் அழகான தோட்டத்தால் சூழப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Lawrence, W.R., The Valley of Kashmir, p. 37, கூகுள் புத்தகங்களில்
  2. "Pathar Masjid-Kashmir Tourism".
  3. Feisal Alkazi, Srinagar: An Architectural Legacy, p. 91, கூகுள் புத்தகங்களில்
  4. "A Desecrate Mosque".

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதார்_பள்ளிவாசல்&oldid=3153887" இலிருந்து மீள்விக்கப்பட்டது