வாருங்கள்!

வாருங்கள், Kumar14, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Kanags \உரையாடுக 05:44, 27 திசம்பர் 2011 (UTC)Reply

வணக்கம் குமரகுருபரன், விக்கிப்பீடியா வலைப்பதிவுகளைச் சேமிக்கும் இடம் அல்ல. இது ஒரு கலைக்களஞ்சியம். உங்கள் வலைப்பதிவுகளுக்கான இணைப்புகளை மட்டும் உங்கள் பயனர் பக்கத்தில் தாருங்கள். ஐயமிருப்பின் என்னிடம் கேளுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 05:08, 28 திசம்பர் 2011 (UTC)Reply

என்னைப பற்றி அறிமுகம் தொகு

எனது பெயர் பாக்கியமூர்த்தி குமரகுருபரன். எனது வயது ஐம்பத்தொன்று(14.12.1960) எனது ஆரமபக்கல்வி மட்டக்களப்பு/ மகாஜனாக் கல்லுரி.(1965-1970 வரை) இடைநிலைக்கல்வி மட்/ இந்துக்கல்லுரி (1971- 1975 வரை). உயர்கல்வி மட்/ சிவாநந்த வித்தியாலையம்(1976-1980 வரை) யாழ்பல்கலைகழகம்(வணிகமுகாமைத்துவபீடம் 1980-1985வரை), மாவட்ட கைத்தொழில் இனைப்பாளர், சர்வோதயம்(1985-1986), வடகிழக்கு மாகாண சிறுகைத்தொழில் வியாபார அபிவிருத்தி பயிற்சி அதிகாரி, இளைஞர்விவகார வேலைவாய்ப்பு அமைச்சு, சிறுகைத்தொழில் வியாபார அபிவிருத்தி பிரிவு (1986-1987 நவம்பர் வரை, பட்டதாரி ஆசிரியர் மட் புனிதமிக்கேல் கல்லூரி தேசியபாடசாலை தற்போது ஆசிர்யநூலகர்.


1.பட்டபின் கல்வி டிப்புலோமா, திறந்தபல்கலைக்கழகம், அங்கு தற்போது முதன்மை ஆசிரியராக பணிபுரிகின்றேன். 2 இலங்கை கணக்கியல் தொழில்நுட்வியளாளர் நிறுவகத்தின் அங்கத்தவர் 3.இலங்கை பட்டைய வியாபார நிருவாகிகள் நிறுவகத்தின் அங்கத்தவர் 4 இலங்கை தொழில்நுட்பக்கல்லூரியின் பகுதிநேர விரிவுரையாளர்(2000-2005 வரை) தீட்சை பெற்று சித்தர்கள் ஆசிபெற்று அவர்கள் வாழ்வியலில் வாழ முயன்றுகொண்டு இருக்கும் அடியவன் எளியோர்க்கு எளியவன் இதுவே என் அறிமுகம்

"சித்தர்கள் தந்த வாழ்வில்'" தொகு

"சித்தர்கள் தந்த வாழ்வில்'

வாழ்வியல் பற்றிச் சித்தர்கள் குறிப்பிடுகையில் "உண்பதிரு பொழுது ஒழிய மூன்று பொழுதுண்ணோம் உறங்குவது ராயொழிய பகலுறக்கம் செய்யோம் மண்பரவு கிழங்குகளில் கருணையன்றி புசியோம் வாழையிளம் பிஞ்சொழியக் கனியிருந்த மாட்டோம் பெண் கடமை திங்களுக் கோர் காலன்றி மறுவோம் பெருந்தாகம் எடுத்திடினும் பெயர்த்து நீர் அருந்தோம் நன்பெற உண்ட பின் குறுநடையும் கொள்வோம்'; என தேரையார் இப்பாடலில் குறிதுரைதுள்ளார்.


1.'உண்பதிரு பொழுது ஒழிய மூன்று பொழுதுண்ணோம்' என்று முதல் வரியில் உணவு உண்பது தொடர்பாக குறிப்பிட்டுள்ளார். இரு வேளை உணவு உட் கொள்ளல் பொதுவாக உடல் சுகாரத்துக்கு சிறந்ததாகும் இது தொடர்பாக இன்னுமேர் பாடலில் 'ரோகிக்கு மூன்று வேளை போகிக்கு இரண்டு வேளை யோகிக்கு ஒரு வேனை' என்று கூறப்பட்டுள்ளது இவை இரண்டு பாடல்களும் பொருந்தும். மூன்று வேளை உணவு உட்கொள்வதால் உடலின் சமிபாட்டுத் தொகுதிக்கு தொடச்சியான செயல்பாட்டுக்கு உட்படுகின்றது. அத்துடன் நாவின் ருசியை அடிப்படையாகக் கொண்டு உணவினைத் தெரிவு செய்கின்றோம். அவை அதிக கொழுப்புச் சத்து நிறைந்தவையாக இருப்பதனால் சமிபாட்டுக்கு நீண்டகாலத் தேவை ஏற்படுகின்றது. இன்நிலை தேவைக்கதிகமான கொழுப்பமிலச் சுரப்புக்கு வழிவகுக்கின்றது. சமிபாட்டின் பின்னர். கழிவாக அகற்றப்படும். தோடர்சியான செயல்பாட்டால் சுரப்பிகளின் சுரப்பு சுரக்கும் அளவு குறைவடைந்து உறுப்புக்கள் தமது செயலை இழக்கத் தொடங்கும் இதனால் கழிவு இரத்தத்தில் கலக்கக்கூடிய சூழ்நிலை எற்படும் அதாவது உடல் உள்ளுறுப்புக்கள் தனது வேலைப்பழுவினால் செயல் இழக்கும் தன்மை ஏற்படடுகின்றது.


உணவு அருந்தும் போது அரைப்பங்கு உணவும் கால்பங்கு நீரும் கால்பங்கு வெறுமையாகவும் இருக்கவேண்டும். அத்துடன் உணவைத் தெரிவு செய்யும் போது வயிற்றை கருத்தில் கொண்டு இலகுவில் சமிபாடடையக்கூடிய உணவைத் தெரிவு செய்வதுடன் உணவை வாயில் இட்டு நன்றாக அரைத்து நன்றாக உமில்நீர் கலந்து கரைந்து நீர்போல் உணவை அருந்துவதனால் உணவிலுள்ள கொழுப்புச்சத்து சக்கரைக்சத்து என்பன நன்றாக செரிமாணம் அடையும் இத்துடன் உணவு அருந்திய பின் தான் நீர் அருந்த வேண்டும். உணவு அருந்தும் போது இடை இடையே நீர் அருந்துவதை தவித்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை அதிமாகவும் ஏனைய இருவேளையும் மிதமான குறைந்தளவான உணவை உட்கொள்வது உத்தமம் இருவேளை அதிகமான உணவை எடுத்து ஒருவேளை மிதமாக எடுத்தல் மத்திமம் மூன்று வேளையும் அதிக உணவை எடுப்பது அதர்மம் என்பதே சித்தர்கள் கருத்து. பொதுவாக காலை மாலை இருவேளையும் மிதமான குறைந்தளவான உணவையும் மதியம் நிறைவான உணவை எடுத்தல் சிறந்தது என உணவு உட்கொள்ளுத் தொடர்பாக சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.


அடுத்து உறக்கம் தொடர்பாக சித்தர்கள் குறிப்பிடுகையில் 'உறங்குவது ராயொழிய பகலுறக்கம் செய்யோம்': பகலில் உறங்குங்குவதானால் உண்ட உணவு செர்மாணமானமடையும் சக்தியை உடல் இழந்து அவை உடலில் கொழுப்புத் சத்தும் சக்கரைத் சத்தும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளதுடன் இதை இன்றை நவீன மருத்துவமும் ஏற்றுக் கொள்கின்றது. ஆனாலும் தவத்திரு இராமலிங்க அடிகளார் உண்டபின் சிறுநித்திரை அதாவது பத்து நிமிடத்துக்கு அதிகரிக்காத சிறு தூக்கத்தை குறிப்பிடுகின்றார். அச்சிறு தூக்கத்தின் முலம் சமிபாட்டுக்கு அது துணை செய்யும் என்று கருகின்றார். குருதேவர் ஸ்ரீ இராமகிருஷ;னர் தமது பிரமச்சாரி சீடர்களுக்கு உபதேசம் செய்யும் போது பகலில் நித்திரை செய் இரவு முழுவதும் விளித்திருந்து தியானத்தில் மூழ்குமாறு கூறியிருந்தார். இரவு என்பது இருள்சூழ்ந்த மனத்திடத்தை இழக்கச்செய்யும் இராத்திரி தேவியின் மாயாவிளையாட்டுக்கு பொருத்தமான காலமது அத்தருணம் அதில் விளித்திருந்தால் அவசியமாகும் அதனால் தான் குருதேவர் அவ்வாறு உபதேசம் செய்திருப்பார் எனத்தோன்றுகின்றது. ஆனால் கிரகஸ்தர்களுக்கு பகல் துக்கம் பொருத்மில்லை என சித்தாகள் கருதுகின்றனர்.

அடுத்து நிலத்தின் கீழ் உள்ள கிழங்குகளில் உண்ணத்தகுத்யான கிழங்குகளைப் பற்றி சிதர்கள் குறிப்பிடுகையில் 'மண்பரவு கிழங்குகளில் கருணையன்றி புசியோம்': மன்னுக்குள் விளையும் கிழங்குகளில் கருனை என்று சித்தர்களால் வழங்கப்பட்ட எல்லோருக்கும் கருனையாக தன்மைகளை உடலுக்கு வழங்கக்கூடிய கிழங்கு இது மட்டும் தான் எனவும் இக் கிழங்கு மட்டும் தான் நிலத்தினுள் விளையும் கிழங்குகளின் உண்ணச் சிறந்த கிழங்கென கருதுகின்றனர். பொதுவாக கிழங்கு வகைகள் காபோகைதரேட்டும் இலிப்பீட்டும் உண்;டு. இது சக்கரைத்சத்து நிறைந்தது இதனால் சக்கரை நோய்யாளர்களுக்கு சிறந்ததல்ல, அடுத்து வாழை மரத்தின் சிறப்பைக் சித்தர்கள் குறிப்பிடுகையில் 'வாழையிளம் பிஞ்சொழியக் கனியிருந்த மாட்டோம்': வாழை மரத்தில் வாழைக்காயின் பிஞ்சே சிறந்தது அது ஊட்டச்சத்து விறைந்தது பொதுவாக பிஞ்சை குழந்தை யீன்றெடுத்த தாய்க்கு மிளகுதன்னி தயாரித்துக் கொடுப்பது வழக்கம் பொது வாக மருத்துவக்குணம் நிறைந்த பாகம் பிஞ்சி தான். அடுத்து மனையாளுடன் கலவி இன்னத்தில் ஈடுபட நியதிகளை சித்தர்கள் குறிப்பிடுகையில் 'பெண் கடமை திங்களுக் கோர் காலன்றி மறுவோம்': பெண்களுடன் கலவியல் ஈடுகடுவது மாதம் ஒருமுறை ஆகும். இங்கு திங்கள் என்று குறிப்பிடுவது மாதத்தை ஆகும். இங்கு இன்னுமோர் சித்தர் பாடலையும் பார்ப்பது சிறந்தது. 'நாள் இரண்டு வாரம் இரண்டு மாதம் இரண்டு வருடம் இரண்டு' என கூறி இருக்கின்றனர். இதன் பொருள் நாள் இரண்டு என்பது ஒரு நாலைக்கு இருமுறை மலம் கழிக்க வேண்டும். அதாவது காலை மாலை என்பது பொருள். வாரம் இரண்டு; என்பது வாரம் இருமுறை தலைக்கு நல்லெண்ணை தேய்த்து குளிப்பது. இது ஆண்களுக்கு புதன் சனிக் கிழகைகளில் பெண்களுக்கு திங்களும் வெள்ளியும் பொருத்தமானதாகும். 'சனிநீராடேல்'; என்பதில் சனி என்பது குளிர்ச்சியான நீரில் நீராடுவது சிறந்தது தென்றும் இன்னுமேர் வகையில் நோக்கும் போது சனீஸ்சரனுக்கு தானியம் எள்ளு அதன் எண்ணையை வைத்து குழிதல் உடலுக்கு நல்லது என்பதையே குறிக்கின்றது. மாதம் இருமுறை என்பது மனையாளுடக் கலவியில் ஈடுபடுதலைக் குறிக்கின்றது. பாலியல் நுகர்ச்சி என்பது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இன்பமாக இருந்தாலும் அது உடலுக்கு உயிர்ப்பு என திருமூலர் குறிப்பிட்டுள்ளார். இதை விளக்கமாக 'திருமூலர் காட்டிய வாழ்க்கை நெறி' என்னும் கட்டுரையின் தொடரில் விரிவாக விளக்கவுள்ளேன். அதை அதிக அளவில் தேவையில்லாது இழத்தல் சக்தியை இழப்பதற்கு சமம்.


'விந்து விட்டான் நொந்து கெட்டான்' என்ற முதுமொழிக்கமையவும் 'அளவுக்கு மிஞ்சினால் அமுதெனினும் நஞ்சி' என்பதற்கு அமையவும் அதை பிஜாவிருத்திக்கு மட்டும் பயன்படுத்த் நரைதிரை அற்று நீண்டநாட்கள் சீவிக்க வசதியாக அமையும் என்பதில் ஐயம்மில்லை. அடுத்து வருடம் இரு முறை என்பது வயிற்றை சுத்தம் செய்வதை கருகின்றார் வயிற்றில் உணவு சொரிமானச் செயல்பாட்டால் சிலவேளைகளில் அழுக்குகள் தங்கி ஐPரணமண்டலத்தில் பிரச்சனைகள் வருவது இயல்பு அதைச் சீர் செய்ய வருடத்தில் இருமுறை பேதியாக போதி மருந்து எடுப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இவ்வாறு இல்லறவியலின் உடலியல் இன்பம் தெடாபாக் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவதுத்தவர்கள் சித்தர்கள்.


நீர் அருந்துதல் இயல் ஒன்றினையும் எடுத்தியம்பியுள்ளனர் கித்தர்கள்'பெருந்தாகம் எடுத்திடினும் பேயர்த்து நீர் அருந்தோம்': அதிக தாகம் எடுத்தாலும் தன்னீரை ஒரு முறையில் விரைவாக அருந்தக்கூடாது. சிறிது சிறிதாக கொஞ்சம் கொஞ்சமாக நேரமெடுத்து அருந்த வேண்டும். தன்னீரை அண்ணாந்து அருந்தக்கூடாது. அருந்தும்பாத்திரத்தை உதட்டில் கௌவி அருந்த வேண்டும். உண்ணும் போது நல்வர உண்ணவேண்டும் அதாவது நன்றாக மென்று உமிழ்நீர் கலந்து நீர் போலாக்கி உறிஞ்சிக் குடிக்க வேண்டும். உண்ணும் போது வாயில் இட்டதை நன்கு மென்று உண்டபின் அடுத்த வாய் உணவை எடுக்க வேண்டும். உண்ணும் போது நீர் அருந்தக்கூடாது. உணவருந்திய பின்னர் தாகமடக்க நீர் அருந்த வேண்டும்.


நீர் பற்றிக் குறிப்பிடுகையில் 'நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி' எனக் குறிப்பிடுகின்றனர். நீர் சுருக்கி என்பது நீரை நன்றாக கொதிக்க வைத்து அதாவது நீரை நாலில் மூன்று பங்காக கொதிக்க வைத்தலை கருதும். அப்போது நீரின் அளவு குறைந்திருக்கும இதனால் கனியுப்புக்கள் நன்றாகக் கரைந்து நீருடன் கலந்து இருப்பதுடன் கிருமிகளும் அழிந்து நீர் உணவாக மாறும் இதனையே நீர் சுருக்கி எனக்கருதுகின்றனர். மோர் பெருக்கி என்னும் போது நீரை அதிக அளவில் சேர்க்கும் போது அதில் உள்ள வெண்ணை அதிகளவில் பிரித்தெடுக்கப்பட்டு நீர்மோரகும் அதனால் சமிபாட்டுக்கு இலகுவாக இருப்பதுடன் கொழுப்புச் சத்தும் குறைவாக இருக்கும் இது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். அடுத்து நெய் உருக்கி என்பது நெய்யில் கொழுப்புச்சத்து அதிகம் உருக்குவதன் மூலம் அதன் செறிவைக் குறைத்து உண்பதனால் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். ஏன்பதன் மூலம் நீர், நெய், மோர் என்வற்றை எப்படி பயன படுத்த வேண்டுமெ சித்தர்கள் கூறியிருக்கின்றனர்.


உண்ட உணவு செரிமாணத்துக்கு சிறுநடை அவசியம் என்பதை சித்தர்கள்'நன்பெற உண்ட பின் குறுநடையும் கொள்வோம்': உண்ட பின் சிறு நடை கொள்வது உணவு செரிமானத்துக்கும் ஐPரண மண்டலத்துக்கும் நல்லது 'உண்ட பின் நூரடி உலாவு' என்பது முது மொழி இதுவும் பொருந்தும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்


மேல் பாடலில் சொன்ன முறைப்படி வாழ்க்கையில் கடைப்பிடித்தால் நோயற்ற நலமுடனும் வளமுடனும் வாழ முடியும் என்பதில் ஐயம் இல்லை.


'சித்தன் வாக்கு சிவன் வாக்கு சீவன் சிவலிங்கம் காயம் கோயில் காயகற்பம் சித்தவைத்தியம் சித்த வாழ்வியல் அறவியல் மனித வாழ்வுக்கான அறிவியல் '


-மட்டூர் புன்னைம்பதியான்-

'சித்தர்கள் தந்த வாழ்வில் முறை நோய் இல்லா அறிவியல் முறை-2' தொகு

'சித்தர்கள் தந்த வாழ்வில் முறை நோய் இல்லா அறிவியல் முறை-2' சித்தர்கள் வாழ்வியல் தொடர்பான இரண்டாவது பாடலில் 'பால் உண்போம் எண்ணை பெறின் வெந்நீரில் குளிப்போம் பகல் துயிலோம் பகற் புணரோம் பருவம் மூட்ட வேலஞ்சேர் குலலியோடும் இலகயிலும் விரும்போம் இடந்த அடக்கோம் ஒன்று விடோம் இடது கையில் படுப்போம் மூலம் சேர் கறி நுகரோம் மூத்த தயிர் உண்போம் முதல் நாளில் சமைத்த கறி அமுது எனினும் அருந்தோம்'


என சித்தர்கள் வாழ்வியலை வகுத்துக்காட்டியும் வாழ்து பயனை அனுபவித்தும் காட்டியுள்ளனர். அதை மனுக்குலம் வழுவாது வாழவழி காட்டியவர்கள் சித்தர்கள் அவர்களின் சிந்தனை செயல் அனைத்தும் மனுக்குலம் தாம் பிறந்த பயனை அனுபவித்து விடை பெறுவதற்கு வழிகாட்டுவதே அதற்கு காயமான தேகம் அவசியம் அதற்கே சித்தவைத்தியம் கண்டவர்கள் சித்தர்கள்.


1.'பால் உண்போம்': பால் வெண்மையானது. அது சாத்வீக குணத்தை ஏற்படுத்த வல்லது. பால் தரும் பசு தாவரஉண்ணி. அத்துடன் சாத்வீகமானது. அதை காமதேனு என்று அழைப்பர். அதாவது பாலினை காமத்தேன் என்பர்.பாலியல் உணர்வை ஏற்படுத்தும் தன்மையுடையது உடல் பலமிக்கதாக இருந்தால் தான் அவ்வுணர்வு உடலில் ஏற்படும் அதனால் தான் பால் பூரணஉணவாக கருதப்படுகின்றது. அத்துடன் குளிர்மையானது இதனால் உடலும் உள்ளமும் தூய்மையடையும். பசுவில் சகலதேவதைகளும் வாசம் செய்வதாக வேதம் கூறுகின்றது. பசுவை இலக்குமியாகக் கொண்டு எல்லா கிரியைகளிலும் பூஜை செய்வது முக்கியமானதாகும். அதாவது கிரகப்பிரவேசம், குடமுழுக்கு, நித்தியப்படி ஆலயங்களில் அதிகாலையில் கோமாதா பூஜை செய்வது வழமையாகும். பால் அபிஷேகம் செய்தால் ஆயூட்பலம் கிடைக்கும் என்பது ஐதீகம் அப்படிபட்ட தன்மை கொண்டது பால் அதை தினம் பருகவேண்டும் என சித்தர்கள் கருதுகின்றனர். பசு வின் சாணம் ஒரு விபூதிபாக பயன்படுத்தப்படுகின்றது. அதுமட்டுமல்ல ஒரு கிருமீ நாசினியும் கூட பஞ்சகௌவ்வியத்தின் அனைத்து பொருட்களும் பசுவினது தான் அதாவது பால், தயிர், நெய், கோசலம், கோமயம், போன்றன. பால் ஆயூள்விருத்திக்கும், தயிர் நெய் ஞானத்துக்கும், இறைவனிடம் வேண்டி அபிஷேகம் செய்வதுடன் சிவனுக்கு பஞ்சகௌவிய அபிஷேகம் சிவன் இராத்திரி முதல் ஜாமத்துக்கு செய்வது சிறப்பு வாய்ந்தாகும். கோமாதாவில் பஞ்சபூதங்கள் வாசம் செய்வதாக ஆகமம் கூறுகின்றது. கோஜலத்தில் வருணனும், கோமயத்தில் அக்னியும், பாலில் சந்திரனும், தயிரில் வாயுவும், நெய்யில் விஸ்ணுவும் வாசம் செய்வதாகவும் கோமயம், கோசலம், பால், தயிர், நெய் முறையே செந்நிறம், வெண்நிறம்,பென்னிறம், நீலநிறம், கருநிறம் கொண்ட பசுவிடம் பெறுவது உத்தமம். என்றும் கலக்கும் அளவுகள் முறையே கோமயம், கோசலம் ஆறுமாத்திரை அளவும் பாலும் நெய்யும் மூன்று மாத்திரை அளவும் தயிர் பத்துமாத்திரை அளவும் இருக்க வேண்டுமெனவும் ஸ்மிருதிகள் கூறுகின்றன. இது ஓர் கிருமிநாசினியும் கூட அது மட்டுமல்ல சமயக்கிரிகைகளுக்கு அசௌகரியம் போக்கி உடல் வலுதரும் அருமருந்தும் கூட இவ்வாறு சிறப்புமிக்க பசுவின் பால் உண்பது எவ்வளவு சிறந்தது என்பது கண்கூடு.


2. 'எண்ணை பெறின் வெந்நீரில் குளிப்போம்' : எண்ணை தேய்த்துக் குளிப்பது என்பது தமிழரின் பண்பாடு. இங்கு எண்ணை என குறிப்பிட்டிருப்பது நல்ல எண்ணையைத்தான் இவ்வெண்ணெக்குத்தான் சித்தர்கள் நல்ல எண்ணை என்ற பெயரையும் மற்றை எண்ணைகளுக் கெல்லாம் எடுக்கப்படும் வித்தின் பெயர்களையே பயன் படுத்தியுள்ளனர். வேப்பம் வித்தின் எண்ணை வேப்பெண்ணை, இலுப்பை வித்தின் எண்ணை இலுப்பை எண்ணை, தேங்காயின் வித்தின் எண்ணை தேங்காய்யெண்ணை இப்படி அழைக்க எள்ளின் எண்ணை மட்டும் நல்லலெண்ணை என அழைப்பது ஏன்? அதன் தன்மையில் அவ்வளவு சிறப்பு இருப்பதால்தான் அதை நல்ல எண்ணையாக அறிமுகப்படுத்தினர் சித்தர்கள்.

          உடலில் பல்வேறு வகையான கொழுப்புச் சத்துக்கள் இருந்தாலும். ஆதில் இரண்டு வகையானது எண்ணைகளால் வருவது இதில் ஒன்று அடர்த்தி கூடிய கொழுப்பமிலம் மற்றையது அடர்த்திகுறைந்த கொழுப்பமிலம். இதில் அடர்திகூடிய கொழுப்பமிலம் 'டைட்கிலிகரைட்' எனப்படும் இது உடலின் பல்வேறு பாகங்களில் படிந்திருது இருக்கும் அதாவது வயிற்றின் அடிப்பாகத்தில் உடலின் பின்புறத்தில் தோலின் அடிப்பகுதியில் கானப்படும். இனை அகற்றக்கூடிய ஆற்றலும் சக்தியும் நல்லெண்ணைக்குமட்டும்தான் உண்டு என அன்று அறிந்திருந்தனர்.  அதனாலேயே உடல் முழுவதும் தேய்த்து வெண்நீரில் நீராடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். எண்ணை தேய்க்கும் போது உடல் வெப்பநிலையை வெளிவிடாது தடுக்கின்றது. அதைப் போக்க சீயாக்காய், பயற்றுமா தேசிக்காய் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் உடலில் இருந்து எண்ணை நீங்கி மயித்துளைக் குளாய்கள் துப்பரவு செயயப்பட்டு வியர்வை வெளியேறும். வெண்நீரில் நீராடுவதனால் எண்ணை நீக்கப்படுவதுடன் மயித்துளைக் குளாய்களிலிருந்து வியர்வை வெளியேறுவதையும் அவதானிக்க முடியும். வெண்நீர் என்னும் போது சூடாக்கும் போது குளிப்பதற்கு ஏற்ற அளவிலேயே சூடாக்க வேண்டும்.நன்கு சூடாக்கிய நீரில் குளிந்த நீரை கலக்கும் போது நீரின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு உடலில் கபத்தன்மை ஏற்பட்டு உடலை பாதிக்கும் நிலை ஏற்படலாம்.     


3.'பகல் துயிலோம்' : இந்த விடையம் முதல்பாடலில் விளக்கப்பட்டுள்ளது.


4.'பகற் புணரோம்': பகலில் பெண்ணுடன் கலவியில் ஈடுபடக் கூடாது என்பதை சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதை உபநிடதம் பிரமச்சாரியம்; பற்றிக்குறிப்பிடுகையில் பகலில் எமது உடலில் பிரானன் வாசம் செய்வதனால் பகலில் ஆண்மையை இழப்பது பிரம்மத்தை அவச்சாரம் செய்வதென்றும் இரவில் காபீர் என்னும் வாயு உடலை இயக்குவதால் இரதிபோன்ற பெண்களுடன் உறவு கொள்லலாம் என்றும், இப்படி ஆச்சாரத்தைக் கடைப்பிடிபது பிரம்மத்துக்கு ஆச்சாரம் என்றும். இப்படி செய்வதனால் அதனை பிரம்மச்சாரியம் என்றும் கூறப்படுகின்றது. இங்கும் பகற் புணச்சியை ஏற்றுக் கொள்ள வில்லை.


5.'பருவம் மூட்ட வேலஞ்சேர் குலலியோடும்': வயதுதில் மூத்த பெண்களுடன் கலவியிலி ஈடுபடக்கூடாது இதனால் வயது குறைந்தவர் விரைவாக முதுமை அடையும் வாய்ப்பு அதிகம் உண்டு. இளையவர் களுடன் கலவியில் ஈடுபட்டால் இளமை நீடித்து இருக்கும் என்பது இதன் கருத்தாகும்.இன்னுமோர் கருத்தும் உண்டு பொதுவாக தீட்டு நிற்கும் வயது நாற்பதில்லிந்து நாற்பத்தைந்து வயதாக இருப்பதுடன் தற்போது திருமணவயது கல்வியை பெற்றுக் கொள்ளல், தொழிலிலை பெற்றுக் கொள்வது என்பதன் மூலம் தீமானிக்கப்படுவதனாலும் அடுத்து வரதட்சனை கொடுமையாலும் தள்ளிப்போடப்படுவானால் கருவள வீழ்க்கியடைவதனாலும் தன்னைவிட வயதில் குறைந்த பெண்ணை தேர்தெடுத்து இல்லறசுகத்தை நீடித்து அனுபவிக்க முடியும். அதனாலேயே பாலியல் விவாகம் அந்தக்காலத்தில் அனுமதிக்கப்பட்டது. அது தற்போது அறிவியல் ஏற்றுக் கொள்ள வில்லை. அறிவு முதிச்சியின்மையால் உருவாகும் குழந்தைகள் முதிர்ச்சியற்ற குழந்தையாக உருப்பெறுவதாகவும் தாய்பலவீனமடைந்து நோய்த் தொத்துக்கு ஆழாக நேரும் நிலை ஏற்படலாம் போன்ற பல்வேறு காரணத்தால் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 'சித்தர்கள் காட்டும் இல்லற்ற தர்மம்' என்ற கட்டுரையில் விரிவாக விளக்கவுள்ளேன்.


6.'இலகயிலும் விரும்போம்' : இங்கு இலகயில் என்பது இளம் காலை வெயில் இது ரோகிக்கு விருப்பமாக இருக்கும். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காலையில் சூரியனில் இருந்து வரும் கதிர்களான 'அல்ராவைலட்' 'இன்பெறகிரேஸ்' போன்ற கதிர்கள் காலையில் வெளிவருகின்றன இவை பொதுவாக உடலுக்கு தீங்கு விளைவிப்பவை இதனால் காலை வெயில் சிறந்ததல்ல மாலை வெயில் சிறந்தது. இதனை 'காலை வெயில் கழுதைக்கு சிறந்தது மாலை வெயில்மனிதருக்கு நல்லது' இதனை 'காலை வெயிலில் உடலைக் காச்ச மாட்டோம். வரும் சேர் வயதில் மூத்த பெண்களுடன் உறவு கொள்ள மாட்டோம்' என்றும் கூறிப்பிட்டுள்ளனர்.


7.'இடந்த அடக்கோம் ஒன்று விடோம்' : இதனை இரண்டு அடக்கோம் என்பதால்; மலசலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் கழிக்க வேண்டும். மனிதனை விட எனைய விலங்குகள் எல்லாம் மலசலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் கழித்துவிடும். மனிதன் மட்டும் பொருத்தமான இடம் தேடி அல்லது வேலைப்பழுவின் நிமித்தம் தாமதிக்கின்றான். இதனால் மலம் குடலில் இருக்கும் போது அகத்துறுஞ்கப்படும் இதனால்; உடலில்; நஞ்சுறும் அதனால் நோய் தொற்றுக்கு இடமாகும். அடுத்து சலம் நீடித்து இருப்பதால் சிறுநீரகக்கற்கள் தோன்றுவதுடன் கிருமித்தொத்துக்கு ஆளாகும் வாப்புகள் அதிகம் எனவே இவை இரண்டையும் அடக்கக்கூடாது. 'ஓன்று விடோம்' இதனை 'சிக்கல் இரண்டை அடக்கோம் பெண்ணுக்குள் ஒன்றை விடோ' என்றும் கூறிறுள்ளனர். அதாவது மாதத்தில் அதிக நாட்கள் பெண்களுடன் கலவியில் ஈடுபடல் உயிப்பு குறைவடையும் என சித்தர்கள் கருதுகின்றனர் ஆனால் அறிவியல் இக் கருத்தை இன்னும் ஏற்றுக் கொள்ள வில்லை இது தொடர்பாக'சித்தர்கள் காட்டும் இல்லற்ற தர்மம்' என்ற கட்டுரையில் விரிவாக விளக்கவுள்ளேன்.


8.'இடது கையில் படுப்போம்': இடது பக்கமாக சரிந்து சைநிப்பதால் உடலின் எல்லாப்பாகத்துக்கும் இரத்தோட்டம் நிகழ்ந்து சுகமான உறக்கம் ஏற்படும் இதனால் தேகம் ஆரோக்யமான நித்திரையைப் பெறும். இது நோயற்று ஆரோக்கிமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.


9.'மூலம் சேர் கறி நுகரோம்': மூலநோயை ஏற்படுத்துகின்ற உணவு வகைகளை உண்ணக்கூடாது. மூலநோய் என்பது எல்லா நோய்க்கும் இது தான் மூலகாரணம். இதன் மூலம் உடல் நோய் எதிப்பு சக்தியை இழந்து வருவதன் அடையாளமாக இன் நோய் கருதப்படுகின்றது.இதனால் உணவு மண்டலத்தின் ஜீரண சக்தியை உடல் இழக்கும் போது மூலநோய் ஏற்படும் இதனைத் தடுத்து உணவு மண்டலத்தின் ஜீரண சக்தியை அதிகரிக்க மூலநோயை உண்டாக்கும் உணவு வகைகளை உட்கொள்ளக்கூடாது.


10 'மூத்த தயிர் உண்போம்' : மூத்த தயிர் என்பது நன்றாக உற்பத்தியான விளைந்த பழைய தயிரை குறிக்கின்றது. அதில் ஈஸ்ட் போன்ற தீய கிருமிகளை அழிக்கும் 'லேக்டோ பேசில்லஸ்' என்னும் நல்ல பேக்டீரியா இருக்கின்றது. இயற்கையான ஈஸ்ட் மாவுகளை உப்பவைத்து மென்மை ஆக்கும் எனினும் அது உள்ள உணவை நன்றாக சமைத்து ஈஸ்ட் டைக் கொல்லாவிடில் உடலுக்கு தீங்கு செய்யும். இதைத் தவிர்க்க லேக்டோ பேசில்லஸ் நிறைந்த பழந்தயிர் உடல் நலத்துக்கு அவசியம். இது ஈஸ்ட்டால் வரும் சரும நோய்களையும் கட்டுப்படுத்த வல்லது.


11. 'முதல் நாளில் சமைத்த கறி அமுது எனினும் அருந்தோம்': உணவு சமைத்தவுடன் உண்பதே சிறந்தது. உணவு சமைத்து வைத்திருக்கும் போது அது நேரம் செல்லும்போது இரசாயன மாற்றத்துக்குட் படுகின்றது. அதில் நுண்ணங்கித்தாக்குதல் இடம் பெற்று இரசாயனமாற்றம் ஏற்பட்டு உணவு பழுதடைந்து நஞ்சாகுகின்றது. குளிர் பதனிடும் பெட்டியில் சமைத்த உணவுகள் வைத்தாலும் அங்கும் இரசாயன தாக்கதற்குட்படுவதாக இன்றைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடுத்து உணவு பதனிடும் முறையில் பயன் படுத்தப்படும் பொருட்களை நீண்டகாலம் பழுதடையாது பாதுகாக்கும் இரசாயண பொருளான 'பிறசவேற்றி' என்னும் பொருள் புறள்வான கலங்களை உண்டாக்கி உடல் வலிமையை இழக்ச்செய்வதாக அதாவது புற்றுநோக்கு காரணியாக இன்றைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே சித்தாகள் அன்றே இன்று நடக்கப் போவதை தடுக்க விழிசமைத்தார்கள் என்றால் அவர்கள் மனுக்குல நன்மையை என்றோ சிந்தித்து செயல்பட்டிருப்பது எவ்வளவு வியப்புக்குரியதாகும்.



"மனுக்குல வாழ்கையே அவன் வாழ்க்கை ஆன்ம விடுதலையே அவன் இலக்கு அதை அடைய உடல் தேவை அதை காக்க சித்த வைத்தியம் வைத்தியம் பலிக்க வாழ்வியல் அது சித்தர்கள் அறிவியல் உண்மையை உணத்தும் மெய்யியல்'


'ஞானிகள் பசிக்கு ஞானம் அஞ்ஞானிகள் பசிக்கு உணவு உலகத்தை அறிந்தவன் அறிவாளி தன்னை அறிந்தவன் ஞானி உலகை அறிவது அஞ்ஞானம் தன்னை அறிவது ஞானம் ஞானியின் விளிப்பு மும்மலபிடியிலிருந்து நீங்க அஞ்ஞானியின் விளிப்பு மும்மலத்தை ஏற்க அத்தனைக்கும் காரணம் தாம் செய்த தர்மமும் கறுமமும் ஞானிகளின் தனிமை பற்றில் பற்றாமை"



மட்டூர் புன்னையம்பதியான்

"சித்தர்கள் தந்த வாழ்வில் முறை நோய் இல்லா அறிவியல் முறை" தொகு

"சித்தர் பாடல்கள் சிந்திக்கச் சிந்திக்க தித்திக்கும் தீங் கனி அழியாத தத்துவ முத்துக்கள் வாழ்ந்து அனுபவித்து உலகுக்கு கொடுத்த வித்துக்கள் தாகம் உள்ளவன் தீத்திடும் நதி யது முற்றும் துறந்தவன் சங்கமமாகும் சமுத்திரம் அது"



'தன்காயம் தோனாமல் எண்சான் பாத்தி கட்டி வெங்காயம் நாற்று விட்டு வெகுநாளாக காத்திருந்தேன் வெங்காயம் தின்னாமல் மேல்தோலைத் தின்றதனால் தன் காயம் தோனாமல் என் ? கண்ணம்மா ! நான் சாகிரேன்டி சாகா


இப்பாடலில் உடல் பெறப்பட்ட நோக்கத்தை அடையாததையும் அதனால் வருந்தும் ஆன்மாவின் கதறலையும் இங்கு குறிப்பிட்டு வெண்பா பாடியுள்ளார். தன்னுடைய உடலைக் காட்டாமல்(அதாவது சூட்சும உடலை) பருவுடலை உருவாக்குவதை எண்சான் பாத்தி கட்டி அதில் வெங்காயத்தை உருவாக்கி காத்திருதார் விளைவு பெற ஆனால் வெங்காயத்தின் தோல்களை உரித்து உரித்து உண்டு விட்டார்கள் இறுதியிலே பாத்தியல் இட்ட வெங்காயமும் இல்லை பயனும் இல்லாது பொயிற்று என இப்பாடலின் கருத்தை நேரடியாகக் கொள்ள முடியும். ஆனால் இதன் உட்கருத்தை பார்க்கும் போது முதலில் குறிப்பிட்டுள்ள வெங்காயம் வெறுமையான கரும வினை அற்ற ஆத்மா புனிதமானது. அடுத்து குறிப்பிடப்பட்டுள்ளது பருவுடல் இது முன்வினைப்பயனை அறுக்க எடுக்கப்பட்டது. ஆத்மா தன்னில் பட்ட களிம்பைப் போக்க உடல் எடுக்கின்றது. இதை மாயை மறைக்கின்றது ஆணவம் தூண்டுகின்றது கன்மம் அனுபவிக்கின்றது. இதனால் ஆன்மா ஏமாறுகின்றது. இதனையே பிரம்கஸ்த்தி தோசம் என குறிப்பிடுகின்றனர். ஆன்மா தனது களிம்பைப் போக்க பிரம்மனிடம் பெற்ற உடலை மாயை மறைத்ததனால் ஏற்பட்ட விளைவு அப்போது மனம் எம்மை இயக்கும். அங்கு புத்திக்கு வேலை இல்லை. குருவருள் இருந்தால் திருவருள் உண்டு. அப்போது நாம் மனத்தை இயக்க முடியும். இங்கு புத்தி இயங்கி சித்தி கிடைக்கும். இங்கு சித்தி என்பது முத்தி யாகும். இதுவே பிறவிப்பயன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kumar14&oldid=2672776" இலிருந்து மீள்விக்கப்பட்டது