பாட்டாளி (திரைப்படம்)
பாட்டாளி (Paattali) என்பது 1999 ஆவது ஆண்டில் கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், தேவயானி, வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இத்திரைப்படத்திற்கு எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார்.[1]
பாட்டாளி | |
---|---|
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
கதை | சின்னி கிருஷ்ணா கே. எஸ். ரவிக்குமார் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | சரத்குமார் தேவயானி ரம்யா கிருஷ்ணன் |
விநியோகம் | ரோஜா கம்பைன்ஸ் |
வெளியீடு | 17 திசம்பர் 1999 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- சரத்குமார் - சண்முகம்
- தேவயானி - சகுந்தலா
- ரம்யா கிருஷ்ணன் - கண்ணம்மா
- வடிவேலு - வடிவு
- கோவை சரளா - சரளா
- ஆனந்த் ராஜ் - கண்ணம்மாவின் தந்தை
- சுஜாதா - கண்ணம்மாவின் தாய்
தயாரிப்பு தொகு
இத்திரைப்படத்தின் சண்டைக் காட்சி படப்பிடிப்பில் நடிகர் சரத்குமாருக்கு கையில் காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பு இரண்டு வாரங்கள் தடைபட்டது.[2] சில காரணங்களால் சிம்ரன் நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க நேர்ந்தது.