பா. இரஞ்சித் குமார்

ரஞ்சித்குமார் பாரிஜாதம்' ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்.

இவரின் சொந்த ஊர் மன்னார்குடி ஆகும். இவரின் தாத்தா பிச்சைக்கண்ணு வாத்தியார் திருவாரூர் பகுதியில் பிரபல நாடக வாத்தியாராக இருந்தவர். மன்னார்குடியில் உள்ள பின்லே மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பையும், மன்னை ராஜகோபால சுவாமி கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்தவர். பின்னர் 1998 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து இயக்குநர் ஏ.வெங்கடேசிடம் உதவியாளராக சேர்ந்தார். அவரிடம் பல படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்து, பின்னர் "மண்டோதரி" என்கிற திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இணை இயக்குநராக பணிபுரிந்தார். அதன் பிறகு சொந்தமாக "டீம் ஒர்க் டாக்கீஸ்" என்கிற பட நிறுவனத்தை துவங்கி 2018 ஆம் ஆண்டில் "பேய் இருக்கா இல்லையா" என்கிற படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கினார். "சம்பவம்" என்கிற திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வருகிறார், இந்த படத்தை "ஷாலோம் ஸ்டுடியோஸ்" ஜான் மேக்ஸ் தயாரிப்பில், கதை நாயகர்களாக ஸ்ரீகாந்த், மற்றும் நட்டி, நடிப்பில் இயக்கி வருகிறார். பிறந்த தேதி: 24, அக்டோபர், 1978. பிறந்த ஊர்: மன்னார்குடி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._இரஞ்சித்_குமார்&oldid=3848455" இலிருந்து மீள்விக்கப்பட்டது