புதுவை இரத்தினதுரை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புதுவை இரத்தினதுரை (பிறப்பு: டிசம்பர் 3, 1948) ஒரு கவிஞர், சிற்பக்கலைஞர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழக பொறுப்பாளர். விடுதலைப் போராட்டத்துக்கு தனது கவிதைகளால் உரமூட்டியவர். புரட்சிப் பாடல்களை எழுதி இளைஞர்களை எழுச்சி கொள்ளச் செய்தவர்.
புதுவை இரத்தினதுரை | |
---|---|
பிறப்பு | 3 திசம்பர் 1948 புத்தூர், யாழ்ப்பாண மாவட்டம் |
அறியப்படுவது | கவிஞர், சிற்பக்கலைஞர் |
வாழ்க்கைக் குறிப்புதொகு
இவர் யாழ்ப்பாண மாவட்டம் புத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
கலையுலகில்தொகு
இவர் தனது 14வது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கி விட்டார். இவர் வியாசன், மாலிகா என்ற புனைபெயர்களிலும் பல கவிதைகள் எழுதியுள்ளார். இவர் எழுதிய "இந்த மண் எங்களின் சொந்த மண்" பலரது வரவேற்பையும் பெற்ற உணர்வுப்பூர்வமான பாடல்.
வெளிவந்த கவிதைத் தொகுப்புகள்தொகு
- வானம் சிவக்கிறது (1970)
- இரத்த புஷ்பங்கள்(1980)
- ஒரு தோழனின் காதற் கடிதம்
- நினைவழியா நாட்கள்
- உலைக்களம்
- பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்
வெளிவந்த ஒலிநாடக்கள்தொகு
- களத்தில் மலர்ந்தவை (01.02.1989)
இவர் எழுதிய பாடல்களில் சிலதொகு
- இந்த மண் எங்களின் சொந்த மண்
- வேர்கள் வெளியினில் தெரிவதில்லை...
- காவலரண் மீது காவலிருக்கின்ற ஆசை மகளே
- பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே
- காலநதி ஓடுகின்ற கரையில் வீசும் காற்று
- தீயினில் எரியாத தீபங்களே
- சங்கு முழங்கடா தமிழா
வெளி இணைப்புகள்தொகு
- உலைக்களம்:வியாசன் http://www.scribd.com/doc/122361060/Puthuvai-Ulaikalam-collection-1