புரியாத புதிர்

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

புரியாத புதிர் (Puriyaadha Pudhir) 1990ஆம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய இத்திரைப்படத்தில் ரகுமான், ரகுவரன், சரத்குமார், ரேகா, சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எஸ். ஏ. ராஜ்குமார் இசையமைத்த இத்திரைப்படம் ஒரு திகில் திரைப்படமாகும். இப்படம் குறைவான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். 30 நாட்கள் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு செலவு வெறும் 29 லட்சம் ஆகும்.[1] இது 1973 ஆவது ஆண்டில் இந்தியில் வெளியான தன்ட் என்னும் திரைப்படத்தினை அடிப்படையாகக் கொண்டு முற்றிலும் வித்தியாசமாக உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய முதல் திரைப்படமாகும்.

புரியாத புதிர்
சுவரிதழ்
இயக்கம்கே. எஸ். ரவிக்குமார்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைகே. எஸ். ரவிக்குமார்ி
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புரகுமான்
ரகுவரன்
சரத்குமார்
ஆனந்த்பாபு
ரேகா
சித்தாரா
ஒளிப்பதிவுஏ. ஹரிபாபு
படத்தொகுப்புகே. தணிகாசலம்
கலையகம்சூப்பர் குட் பிலிம்சு
விநியோகம்சூப்பர் குட் பிலிம்சு
வெளியீடுசெப்டம்பர், 71990
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மீளுருவாக்கம் தொகு

தமிழ் மொழியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்படம் மலையாள மொழியிலும் மீளுருவாக்கம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. "The Hindu : Cinema Plus : Life sparkles". Archived from the original on 2013-02-08. பார்க்கப்பட்ட நாள் 2015-03-10.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரியாத_புதிர்&oldid=3660500" இலிருந்து மீள்விக்கப்பட்டது